Saturday, April 4, 2015

PARIHARAM தோஷங்கள் நீங்க

தோஷ நிவர்த்தி தலங்ள்

சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை-செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியகிரக தோஷங்கள் நீங்கும்.

திருவையாறு-கும்பகோணம் பாதையில் திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது, திங்களூர். இத்தல சந்திரபகவானை வணங்க, சந்திரகிரக தோஷங்கள் விலகும்.

மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானை வழிபட, தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் அருளும் த்ரிபங்க நிலையில் உள்ள துர்க்காம்பிகையை உளமாற வழிபட்டால் ராகு தோஷங்கள் நீங்கிவிடும்.

64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பெருமாளை தரிசித்தால் புத கிரக தோஷங்கள் விலகும்.

சென்னை-மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்திலுள்ள சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட பில்லி, சூன்யங்கள்  தவிடுபொடியாகும்.

ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்க சுக்கிர கிரக தோஷங்கள் நீங்கி  மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.

காஞ்சிபுரத்திலுள்ள சித்ரகுப்த சுவாமியை வேண்ட, கேது கிரக தோஷங்கள் மறையும்.

திருவாரூருக்கு அருகேயுள்ள திருக்கொள்ளிக்காட்டில் அருளும் சனிபகவானை வணங்க, சனி தோஷங்கள் மறைந்தோடும்.

சென்னை-அரக்கோணத்திற்கு அருகே பள்ளூரில் அருளும் வாராஹியை வணங்க, செவ்வாய் தோஷங்கள் தொலைந்தோடும்.

சென்னை - கும்மிடிப்பூண்டி சாலையில் செங்குன்றத்தை அடுத்துள்ள பஞ்சேஷ்டியில் ஆனந்தவல்லியம்மன் பாதத்தில் உள்ள சப்தசதி மகாயந்திரத்தை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த யந்திரத்தில் எலுமிச்சம் கனிகள் வைத்து வணங்க, திருமண தோஷங்கள் நீங்குகின்றன.

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ஐயாவாடி பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று செய்யப்படும் மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்து கொண்டால் மாந்தி, குளிகன் போன்றவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும்.

சென்னை-தாம்பரம் அருகே படப்பை-காஞ்சிபுரம் சாலையில் உள்ள கண்டிகை கிராமத்தில் மாமேரு, மாதங்கி, வாராஹி, திதிநித்யா தேவிகள் யந்திர உருவில் அருள்கின்றனர். தொடர்ந்து  9 வாரங்கள் இவர்களை தரிசிக்க சகல தோஷங்களும் நீங்குகின்றன.

கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையும் முல்லை வனநாதரும் கர்ப்பத் தடை  தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்கள்.

சென்னை, ரத்னமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரனை வெள்ளிக்கிழமைகளில் வணங்க, தரித்திர தோஷம் நீங்கும்.

திண்டிவனத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள பெரமண்டூர் அணியாத அழகர் கோயிலில் அருளும் தர்மதேவிக்கு 9 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்ற, தோஷங்கள் தொலைகின்றன.

ராமநாதபுரம், தேவிபட்டணத்தில் ராமரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டு கடல்நடுவே அருளும் நவகிரகங்கள் சகல விதமான தோஷங்களையும் தகர்த்தெறிவார்கள்.

காஞ்சிபுரம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளையும் திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாளையும் தரிசிக்க மறைந்த பித்ரு தோஷங்கள் தொலையும்.

ஈரோடு திருப்பாண்டிக் கொடுமுடியில் உள்ள கொடுமுடிநாதர் தலம் மும்மூர்த்தித் தலமாகவும் சகல தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு வன்னி மரத்தின் கீழ் அமர்ந்த நான்முகனுக்கு மூன்று முகங்கள் மட்டுமே உண்டு. வன்னிமரமே நான்காவது முகமாகக் கருதப்படுகிறது.

திருமங்கலக்குடியில் அருளும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷங்களை நீக்குவதில் நிகரற்றவளாக பக்தர்களால் போற்றப்படுகிறாள். 

நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் ஆலய தலவிருட்சம், மாமரம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய  மரம்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் நந்தியம் பெருமான் கொலுவிருக்கிறார். இவர் ‘கர்ஜிப்பாரா’னால் அப்போது கலியுகம் முடியும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் பலிபீடமும் ஏழு படிகளும் சங்கீதமயமானவை. ஆமாம், அவற்றைத் தட்டினால் இனிய ஒலி  எழுகிறது; ஏழு ஸ்வரங்களையும் கேட்க முடிகிறது.

திருவாரூர், செதிலபதியில் விநாயகர் மனித முகத்துடன் காட்சியளிக்கிறார். அதே கோயிலில், தட்சிணாமூர்த்தியும், சனகாதி முனிவர் நால்வர் மற்றும் இரண்டு அணில்களோடு காட்சி தருகிறார்.

ஈரோடு, கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலுள்ள வன்னிமரம், பிரம்மனின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. இந்த மரத்தில் முள், பூ, காய்  போன்றவை இல்லை.

ஈரோடு- சத்யமங்கலம், புஞ்சை புளியம்பட்டி சௌடேஸ்வரி அன்னையின் திருவிழாவின் மூன்றாம் நாளன்று அன்னையே சப்பரத்தில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்குகிறாள்.

திருக்கண்ணபுரம் கருவறை விமானத்தில் முனிவர்கள் திருமாலை நோக்கித் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த உத்பலாவதக விமானத்தை  யாரும் தரிசிக்க முடியாதபடி மதிற்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலில் நான்கு வாயில்களும் தனித்தனி சிறப்பு பெற்றவை. பெருமானைத் தரிசிக்க சம்பந்தர் தென்வாயில் வழியா கவும் நாவுக்கரசர் கிழக்கு வாயில் வழியாகவும் சுந்தரர் வடக்கு வாயில் வழியாகவும் மாணிக்கவாசகர் மேற்கு வாயில் வழியாகவும் நுழைந்திருக்கிறார் கள்.

கும்பகோணம், அழகாபுத்தூரில் இந்திர மயிலின் மீது அமர்ந்து கல்யாணசுந்தர ஷண்முகசுப்ரமண்யர் தன் தேவியருடன் காட்சி தருகிறார். இவரது  திருவாசி ஓம் வடிவிலிருக்கிறது. திருக்கரங்கள்  சங்கு-சக்கரம் ஏந்தியுள்ளன.

காரைக்குடி, பாதரகுடியில் 10 அடி உயரத்தில் நின்ற நிலையில் சந்தோஷிமாதாவை தரிசிக்கலாம். ஒவ்வொரு வெள்ளியன்றும் முந்திரி பாயசம்   நிவேதிக்கப்படுகிறது.

தேனி, கம்பம், சாமாண்டிபுரத்தில் அம்பிகை புற்று வடிவில் வயல் நடுவில் அருள்கிறாள். வழக்கமாக வடக்கு நோக்கும் அம்பிகை இங்கே தெற்கு நோக்கியிருக்கிறாள். இங்கு வளையலே பிரசாதம்.

திருவாரூர் திருமஞ்சன வீதியில் சிம்மத்தின் மேல் அமர்ந்து தலையில் சந்திர கலை தரித்து மும்மூர்த்தி அம்சத்துடன் ஜெயதுர்க்காவை தரிசிக்கலாம்.  ராமபிரான் வழிபட்ட துர்க்கை இவள்.

திருவண்ணாமலையில் சம்பந்தாசுரனை அழித்து, அவன் ரத்தத்தைப் பூசிக்கொண்ட  செந்தூர விநாயகருக்கு, வருடத்தில் நான்கு முறை செந்தூரம்  சாத்தப்படுகிறது.

சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயம் இரட்டைச் சிறப்புகள் கொண்டது. இங்கே, ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரு சிவ சந்நதிகள்; வடிவுடை, வட்டப்பாறை என இரு அம்பிகை சந்நதிகள்; அத்தி, மகிழம் என இரு தல விருட்சங்கள்; பிரம்ம, அத்தி என இரு தீர்த்தங்கள்; காரணம், காமீ கம் என இரு ஆகம பூஜைகள்! பைரவர் நாய் இல்லாமலும் துர்க்கை மகிஷன் இல்லாமலும் தரிசனம் தருவது மேலும் வித்தியாசமான அமைப்பு.

அம்பிகை உபாசகரான உப்புராயர் உருவாக்கிய உப்பு லிங்கத்தை இப்போதும் ராமேஸ்வரம் ராமநாதர் சந்நதிக்கு பின்புறம் தரிசிக்கலாம். உப்பின்  சொரசொரப்பை அந்த லிங்கம் காட்டுகிறது.

நாகப்பட்டினம், திருநல்லாடையில் அக்னீஸ்வரர், நெருப்பு வடிவமாக உள்ளதால் அவரின் வெப்பத்தைத் தணிக்க, கருவறையின் தாழ்வான பகுதியில்  எப்போதும் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

மான், மழு ஏந்தி யோகபட்டை, சின்முத்திரையுடனான தட்சிணாமூர்த்தி வாணியம்பாடி, அதிதீஸ்வரர் கோயிலில் உள்ளார்.

சிவகங்கை, கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆடத் தயாரான நிலையில், அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் நடராஜரை தரிசிக்கலாம்.

தஞ்சாவூர், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தெற்கு நோக்கி, மந்தா-ஜேஷ்டா  சமேதராக திருமணக் கோலத்தில்  காட்சி தரு கிறார்.

தஞ்சாவூர்-அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர் ஆலய சுந்தரநாயகி தெற்கே கடலைப் பார்த்தபடி அருள்வதால் கடல் பார்த்த நாயகி என்றழைக்கப்  படுகிறாள்.
- See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=899#sthash.OnuNd2hn.dpuf
நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் ஆலய தலவிருட்சம், மாமரம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய  மரம்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் நந்தியம் பெருமான் கொலுவிருக்கிறார். இவர் ‘கர்ஜிப்பாரா’னால் அப்போது கலியுகம் முடியும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் பலிபீடமும் ஏழு படிகளும் சங்கீதமயமானவை. ஆமாம், அவற்றைத் தட்டினால் இனிய ஒலி  எழுகிறது; ஏழு ஸ்வரங்களையும் கேட்க முடிகிறது.

திருவாரூர், செதிலபதியில் விநாயகர் மனித முகத்துடன் காட்சியளிக்கிறார். அதே கோயிலில், தட்சிணாமூர்த்தியும், சனகாதி முனிவர் நால்வர் மற்றும் இரண்டு அணில்களோடு காட்சி தருகிறார்.

ஈரோடு, கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலுள்ள வன்னிமரம், பிரம்மனின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. இந்த மரத்தில் முள், பூ, காய்  போன்றவை இல்லை.

ஈரோடு- சத்யமங்கலம், புஞ்சை புளியம்பட்டி சௌடேஸ்வரி அன்னையின் திருவிழாவின் மூன்றாம் நாளன்று அன்னையே சப்பரத்தில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்குகிறாள்.

திருக்கண்ணபுரம் கருவறை விமானத்தில் முனிவர்கள் திருமாலை நோக்கித் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த உத்பலாவதக விமானத்தை  யாரும் தரிசிக்க முடியாதபடி மதிற்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலில் நான்கு வாயில்களும் தனித்தனி சிறப்பு பெற்றவை. பெருமானைத் தரிசிக்க சம்பந்தர் தென்வாயில் வழியா கவும் நாவுக்கரசர் கிழக்கு வாயில் வழியாகவும் சுந்தரர் வடக்கு வாயில் வழியாகவும் மாணிக்கவாசகர் மேற்கு வாயில் வழியாகவும் நுழைந்திருக்கிறார் கள்.

கும்பகோணம், அழகாபுத்தூரில் இந்திர மயிலின் மீது அமர்ந்து கல்யாணசுந்தர ஷண்முகசுப்ரமண்யர் தன் தேவியருடன் காட்சி தருகிறார். இவரது  திருவாசி ஓம் வடிவிலிருக்கிறது. திருக்கரங்கள்  சங்கு-சக்கரம் ஏந்தியுள்ளன.

காரைக்குடி, பாதரகுடியில் 10 அடி உயரத்தில் நின்ற நிலையில் சந்தோஷிமாதாவை தரிசிக்கலாம். ஒவ்வொரு வெள்ளியன்றும் முந்திரி பாயசம்   நிவேதிக்கப்படுகிறது.

தேனி, கம்பம், சாமாண்டிபுரத்தில் அம்பிகை புற்று வடிவில் வயல் நடுவில் அருள்கிறாள். வழக்கமாக வடக்கு நோக்கும் அம்பிகை இங்கே தெற்கு நோக்கியிருக்கிறாள். இங்கு வளையலே பிரசாதம்.

திருவாரூர் திருமஞ்சன வீதியில் சிம்மத்தின் மேல் அமர்ந்து தலையில் சந்திர கலை தரித்து மும்மூர்த்தி அம்சத்துடன் ஜெயதுர்க்காவை தரிசிக்கலாம்.  ராமபிரான் வழிபட்ட துர்க்கை இவள்.

திருவண்ணாமலையில் சம்பந்தாசுரனை அழித்து, அவன் ரத்தத்தைப் பூசிக்கொண்ட  செந்தூர விநாயகருக்கு, வருடத்தில் நான்கு முறை செந்தூரம்  சாத்தப்படுகிறது.

சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயம் இரட்டைச் சிறப்புகள் கொண்டது. இங்கே, ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரு சிவ சந்நதிகள்; வடிவுடை, வட்டப்பாறை என இரு அம்பிகை சந்நதிகள்; அத்தி, மகிழம் என இரு தல விருட்சங்கள்; பிரம்ம, அத்தி என இரு தீர்த்தங்கள்; காரணம், காமீ கம் என இரு ஆகம பூஜைகள்! பைரவர் நாய் இல்லாமலும் துர்க்கை மகிஷன் இல்லாமலும் தரிசனம் தருவது மேலும் வித்தியாசமான அமைப்பு.

அம்பிகை உபாசகரான உப்புராயர் உருவாக்கிய உப்பு லிங்கத்தை இப்போதும் ராமேஸ்வரம் ராமநாதர் சந்நதிக்கு பின்புறம் தரிசிக்கலாம். உப்பின்  சொரசொரப்பை அந்த லிங்கம் காட்டுகிறது.

நாகப்பட்டினம், திருநல்லாடையில் அக்னீஸ்வரர், நெருப்பு வடிவமாக உள்ளதால் அவரின் வெப்பத்தைத் தணிக்க, கருவறையின் தாழ்வான பகுதியில்  எப்போதும் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

மான், மழு ஏந்தி யோகபட்டை, சின்முத்திரையுடனான தட்சிணாமூர்த்தி வாணியம்பாடி, அதிதீஸ்வரர் கோயிலில் உள்ளார்.

சிவகங்கை, கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆடத் தயாரான நிலையில், அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் நடராஜரை தரிசிக்கலாம்.

தஞ்சாவூர், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தெற்கு நோக்கி, மந்தா-ஜேஷ்டா  சமேதராக திருமணக் கோலத்தில்  காட்சி தரு கிறார்.

தஞ்சாவூர்-அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர் ஆலய சுந்தரநாயகி தெற்கே கடலைப் பார்த்தபடி அருள்வதால் கடல் பார்த்த நாயகி என்றழைக்கப்  படுகிறாள்.
- See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=899#sthash.OnuNd2hn.dpu
ஆலயங்களில் வித்தியாசத் தகவல்கள்
ஆலயங்களில் வித்தியாசத் தகவல்கள்

No comments:

Post a Comment