Saturday, April 11, 2015

சீக்கிரம் மனநோய் தீர வழி

எனது வயது 91. ஐந்து மகன்கள். இதில் ஒருவன் பி.ஏ. படித்து அரசு பணியில் இருந்தான். 27 வயதில் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்தான். ஏராளமான மருத்துவம் பார்த்தும் யாதொரு பயனும் இல்லை. மனநோய் முற்றிப்போய் அனைவருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்து வருகிறான். கண்ணுக்கெதிரே என் மகன் படும் கஷ்டங்களை பார்த்து வருத்தப்படுகிறேன். தாங்கள்தான் நல்ல பரிகாரம் சொல்லி உதவ வேண்டும்.

உங்கள் மகனுக்கு வெகு சீக்கிரம் மனநோய் தீர வழி சொல்கிறேன், கவலைப்படாதீர்கள். எல்லா தேவதைகளாலும் அஞ்சப்படும் சிவனை வணங்குங்கள். இருளோடி இருக்கும் மனதில் வெளிச்சம் உண்டாகும்.

தங்கள் மகனை கும்பகோணத்திற்கு அருகே திருவிடைமருதூர் தலத்தில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். ஐந்து முகம் கொண்ட ருத்ராட்ச மாலையை 108 என்ற எண்ணிக்கையில் செய்து ஈஸ்வரனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள்.

பிறகு, அதை வாங்கி தங்கள் மகன் கழுத்தில் போட்டு அபிஷேக தீர்த்தம் உட்கொள்ளச் சொல்லுங்கள். கோயில் பிராகாரத்தை ஒரு நாளில் மூன்று முறை வலம் வரச் சொல்லுங்கள்.

முடிந்தால் மூன்று நாட்கள் அந்த தலத்தில் தங்குங்கள். இன்னொரு முக்கிய விஷயம், வீட்டில் எப்போதும் சுகந்தமான மணம் கமழும் ஊதுவத்தியை ஏற்றி வையுங்கள். தீங்கு செய்யும் துர்தேவதைகளின் நடமாட்டம் குறையும்.

அழுக்குத் துணிகள் நிறைய வீட்டில் இருந்தால் அகற்றிவிடுங்கள். துர்நாற்றம் அதிகமிருக்கும் இடங்களில் துர்தேவதைகள் நடமாட்டம் இருக்குமென சாத்திரங்கள் சொல்கின்றன.

தந்தையாக ஒரு மகனுக்கு உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள். கப்பலில் பிரயாணம் செய்வது நம் பொறுப்பு. அதை கரை சேர்க்க வேண்டியது பகவான் பொறுப்பு.

உங்கள் மகனுக்காக ‘ஸர்வபூத தமனாய நமஹ’ என்னும் திருநாமத்தை விடாது ஜபித்து சிவனை பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் மகன் தெளிவு பெறுவான்.http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=39

No comments:

Post a Comment