Friday, April 10, 2015

கேன்ஸரைக் குணப்படுத்திய/ புற்று நோய்க்கு மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம்

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் உத்தருணியில் (பூஜைக்கு உபயோகிக்கும் சிறு கரண்டி) சிறிது தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு, ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி என்னும் சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை 108 தடவை சொல்லி, அந்தத் தீர்த்தத்தை டுத்து வாருங்கள். புற்று நோய்க்கு மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் இது. ஒரு வருட காலத்திற்கு தினமும் தவறாமல் செய்து வருதல் நல்லது. நோயை குணமாக்குவதில் மட்டுமல்ல, மிக சிரமமான சிகிச்சையைத் தாங்கிக்கொள்ளும் உடல், மனோபலத்தையும் கீழே கொடுத்துள்ள நரசிம்ம ப்ரபத்தி என்ற ஸ்லோகம் அளிக்கிறது. வீட்டில் உள்ள பெரியவர் யாராவது ஒருவர் இந்த மந்திர பிரயோகத்தைச் செய்து அந்தத் தீர்த்தத்தை 

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி
1. மாதா ந்ருஸிம்ஹ : பிதா ந்ருஸிம்ஹ :
2. ப்ராதா ந்ருஸிம்ஹ : ஸகா ந்ருஸிம்ஹ :
3. வித்யா ந்ருஸிம்ஹ : த்ரவிணம் ந்ருஸிம்ஹ :
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ : ஸகலம் ந்ருஸிம்ஹ :
5. இதோ ந்ருஸிம்ஹ : பரதோ ந்ருஸிம்ஹ :
6. யதோ யதோ யாஹி : ததோ ந்ருஸிம்ஹ :
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

பாரதபூமி மகத்தான புண்ணியபூமி; புனித பூமி. கணக்கற்ற அவதார புருஷர்கள், அருளாளர்கள், சாதுக்கள், பகவானைத் தவிர வாழ்க்கையில் வேறொன்றும் வேண்டாம் என்றிருந்த தாஸ சிரேஷ்டர்கள், தங்கள் ஆத்ம பலத்தினால் பகவானை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற மகரிஷிகள் என்று ஏராளமான மகான்களின் பாத ஸ்பரிசம் ப ட்ட பவித்திரமான புண்ணியபூமி.
போக பூமியென உலகில் உள்ள பல நாடுகளுக்கு மிடையே, ஆத்மபலம் ஒன்றே உண்மையான பலம் என்று வாழ்ந்த பெரியோர்கள், பதிவிரதா ஸ்திரீகள் ஆகியோர் அலங்கரித்த இப் புண்ணிய பூமியில்தான் பிறவி எடுக்க வேண்டுமென ஆசைப்பட்டனர் தேவர்களும் கூட. புல்லாகப் பிறந்தா லும், கல்லாகப் பிறந்தாலும் பாரத புண்ணிய பூமியில்தான் பிறக்க வேண்டுமென ஆசைப்பட்ட ன -ர் நம் ஆன்றோர்களும் சான்றோர்களும்.
அத்தகைய மகா புருஷர்களில் ஒருவர்தான் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்! இவரது பூர்வா சிரம திருநாமம் ஸ்ரீ ஆங்கரை கல்யாண ராமசாஸ்திரிகள் என்பதாகும். ஸ்ரீகுருவாயூரப்பனிடம் எல்லையற்ற பக்தியும், பிரேமையும் கொண்டவர் இம்மகான்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியாக விளங்கிய உலகம் போற்றும் அவதார புருஷர் பூஜ்யஸ்ரீ மகா பெரியவாளின் ஆக்ஞைப்படி, ஒவ்வோர் ஆண்டும் கோகுலாஷ்டமியி ன்போது ஸ்ரீமத் பாகவதம் சப்தாகம் மூலபாராயணமும், உபன்யாசமும் 1973-ம் ஆண்டு முதல் 1991 வரை அம்மகானின் முன்னிலையிலேயே செய்யும் மாபெரும் பாக்கிய த்தைப் பெற்றவர் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்.
ஸ்ரீநாராயண பட்டாத்ரி இயற்றிய ‘ஸ்ரீமந் நாராயணீயம்’ மகத்தான மந்திர சக்திபெற்ற தெய்வீக பொக்கிஷமாகும்.
1956-ம் ஆண்டு பூஜ்யஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமெனக் கூறி -விட்டார்கள். அன்று இரவு முழுவதும் ஸ்வாமிகள் ஸ்ரீமந் நாராயணீயத்தின் 8-வது அத்தியாத்தில் உள்ள கீழ்க்கண்ட ஸ்லோகத்தை விடாமல் சொல் லிக்கொண்டே இருந்தார்.
அஸ்மிந் பராத்மந்- நனு பாத்மகல்பே
த்வமித்தம் உத்தாபித - பத்ம யோநி : |
அநந்த பூமா மம ரோக ராஸிம்
நிருந்த்தி வாதாலயவாஸ விஷ்ணோ||

- ஸ்ரீமந் நாராயணீயம்
மறுநாள் மருத்துவர்களிடம் சென்றபோது, அனைத்துப் பரிசோதனைகளையும் செய்துவிட்டு, அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கூறிவிட்டனர். வயிற்றுவலியும் அடியோடு நின்றுவிட்டது.
காஞ்சி ஸ்ரீ மகா பெரியவாளும், தினமும் பக்தர்கள் ஸ்நானம் செய்த பிறகு மனதால் ஸ்ரீகுருவாயூ -ரப்பனைத் தியானித்து இந்த ஸ்லோகத்தை, அவரவர்கள் வசதிகேற்ப 16, 32, 64, 108 தடவை சொன் னால், மகா ரோகங்களிலிருந்தும் கூட குணமடையலாம் என அருளியுள்ளார். கலியில் பலரும் பல பாவங்களைச் செய்வதால் அந்தப் பாவங்களின் விளைவுகள் சில தருணங்களில் நல்லவர்க- ளையும் கூட பாதிக்கின்றன. ஆதலால்தான், இன்று மருத்துவர்களுக்கே புரியாத புதுப்புது நோய்க -ளும், எந்த ம ருந்துக்கும் கட்டுப்படாத வியாதிகளும் ஏற்பட்டு வருவதை அனுபவத்தில் கண்டு வருகிறோம். இயற்கைச் சூழ்நிலை மாசு படுவதாலும், அரசாங்கமே செய்யும் பாவங்களினாலும் புதுப்புது நோய்கள், துன்பங்கள் ஆகியவை மக்களைப் பாதித்து வருகின்றன.
உதாரணமாக, புற்றுநோய், சிறுநீரகம் பாதிக்கப்படுவது, இதயக்குழாயில் அடைப்பு, விதம்விதமா- ன மனவியாதிகள், குழந்தைகளுக்கு ‘ஆடிசம்’ போன்ற குறைபாடுகள் ஆகியவற்றைக் கூறலாம்.
நோயைவிட, பல சிகிச்சைகளும், மருந்துகளும்கூட பக்க விளைவுகளை(side Effects)யும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்துகின்றன. இவை அனைத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள் வதற்கும், குணமடைவதற்கும், சிகிச்சைகளின் வீர்யத்தையும், பக்க விளைவுகளையும் தாங்கிக் கொள்வதற்கும் வேண்டிய உடல்பலத்தையும் மனோபலத்தையும் இந்த அற்புத, அளவற்ற சக்தி வாய்ந்த ஸ்ரீமந் நாராயணீயம் ஸ்லோகம் பிரத்யட்சமாகப் பலனளிக்கிறது.
ஸ்ரீமந் நாராயணீயத்தின் மந்திரபூர்வமான அனைத்து ஸ்லோகங்களையுமே  அழகன் ஸ்ரீகுருவா -யூரப்பனின் சந்நிதியில் அமர்ந்து படித்து, அவன் ஆமோதித்த பின்னரே பரம பக்தரான ஸ்ரீநாராய -ண  பட்டாத்ரி அருளியுள்ளார்.
பரம ராம பக்தரான ஸ்ரீதுளசிதாசர், காசி திருத்தலத்தில் கங்கை நதிக்கரையில் அமர்ந்து ஒப்புயர்- ற்ற அவரது காவியமான ‘ஸ்ரீ ராமசரித மானஸ்’ என்ற மகாகாவியத்தை இயற்றும்போது, அத -ன் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் வால்மீகி மகரிஷியே வானிலிருந்து ஆமோதித்து ஆசி வழங்கியதை காசி திருத்தல மகாத்மியம் விளக்கியுள்ளது.
இதேபோன்று தான் ஸ்ரீ நாராயண பட்டாத்ரியின் ஸ்ரீமந் நாராயணீயம் ஸ்லோகம் ஒவ்வொன்றை- யும் பேரழகு பாலகனான அந்த குருவாயூரப்பன் கேட்டு, அங்கீகரித்து மகிழ்ந்தான் என குருவாயூர் க்ஷேத்திர மகாத்மியம் கூறுகிறது.
எவ்விதம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணமும், ஸ்ரீவியாச பகவானின் ஸ்ரீமத் மகாபாரதமும், குருக்ஷே -த்திர புண்ணிய பூமியில் ஸ்ரீகண்ணன் அருளிய ஸ்ரீமத் பகவத் கீதையும் பிறவிப் பிணியை மட்டு -மில்லாமல், உடல் பிணியையும் போக்கி அருள் புரிகின்றதோ, அதேபோன்று, பூர்வஜென்ம கர்ம -த்தினாலும், விதியினாலும் நோய்வாய்படும் அன்பர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீமந் நாரா -யணீயம் ஸ்லோகத்தைத் தினமும் சொல்லி வந்தால் எத்தகைய கொடிய நோயாக இருப்பினும் அதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெறமுடியும். ஏராளமான வாசக அன்பர்களின் அனுபவமு- ம் இதனை உறுதி செய்துள்ளது.

No comments:

Post a Comment