Saturday, April 11, 2015

வீடு கட்டின கடன்கள் தீர Home loan repament slogam

வீடு கட்டினேன். கடன் சுமையால் விற்று விட்டேன். ஆனாலும் கடன்கள் தீர்ந்த பாடில்லை. வீட்டில் இதனால் நிம்மதி போய்விட்டது. கடனிலிருந்து விடுபடவும், மன நிம்மதிபெறவும் வழிகாட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சொந்த வீட்டுக்கு ஆசைப்பட்டு வயிற்றை காயவைத்து கடன் வாங்கி வீடு கட்டுகிறோம். ஆனாலும் கல் தடுக்குவதுபோல் சமாளிக்க முடியாமல் போய்விடுகிறது.

இந்த மாதிரி பிரச்னையைத் தவிர்க்க, பத்திரப்பதிவு, வீட்டின் நிலை வாசற்படியை நிறுத்துதல் போன்றவற்றை நல்ல நாள் பார்த்துச் செய்ய வேண்டும். கடனே இல்லாமல்கூட வீடு கட்டி விடுவார்கள்.

பழைய சொத்தை விற்றும் புது வீடு வாங்கி விடுவார்கள். ஆனால், திடீரென்று கடன் வந்து சேர்ந்து விடும். எனவே நேரம், காலம் பார்த்து செய்யுங்கள். 

முடியும்போதெல்லாம் பெருமாள் கோயிலில் தாயாரை சேவித்து வாருங்கள். வெள்ளி, செவ்வாய் மற்றும் பௌர்ணமி நாட்களில் வீட்டிலேயே நெய் விளக்கு ஏற்றி வைத்து 108 முறை கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

ஸந்நி தத்ஸ்வ மகாலக்ஷ்மி
த்ரித்பாஸாம் மம மஸ்தகே
கருணாசுதயா மாம்த்வம்
அபிக்ஷிக்ய ஸ்திரம் குரு                                       http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=40

No comments:

Post a Comment