Sunday, May 25, 2014

குறிகேட்டா கல்யாணம்!

டிச. திருச்சானூர் தேர் திருவிழா

சிலருக்கு, என்ன தான் பரிகாரம் செய்தாலும், திருமணத்தில் ஏகப்பட்ட தடைகள் ஏற்படுகின்றன. அவர்கள், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, குறத்தி ஒருத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்கின்றனர் ஆந்திரத்து பெரியவர்கள்.
திருப்பதி திருமலையை, ஆகாசராஜன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். இவனுக்கு, லட்சுமி தாயாரே, பத்மாவதியாக அவதாரம் எடுத்து, மகளாக பிறந்திருந்தாள். இவளைத் திருமணம் செய்யும் நோக்கத்துடன், திருமால், ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் பரம ஏழையாக அவதாரம் செய்தார். ராஜா வீட்டுப் பெண்ணை, ஏழைக்கு, எப்படி திருமணம் செய்து வைப்பர்! எனவே, குறத்தி வேடமிட்டு, ஸ்ரீநிவாசன், பத்மாவதியின் அரண்மனைக்குள் நுழைந்தார்.இங்கிருந்து தான், திருமணத்தடை உள்ளவர்கள், கதையை கவனமாக படிக்க வேண்டும். அந்தக் குறத்தி மிகவும் அழகாக இருந்தாள். அவளைப் பார்த்து, திருமலையில் வசிக்கும் மக்கள் மட்டுமல்ல, விண்ணில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேவர்களும் அசந்து போய் விட்டனர். ஆகாசராஜனும், அவன் மனைவியும், குறத்தியைப் பார்த்தனர். அவளது பேரழகும், முகத்தில் இருந்த பிரகாசமும், அவர்களை அறியாமலேயே, அவளை, அரண்மனைக்குள் அழைக்க வைத்தது. தங்களுடன் அழைத்துச் சென்று, தங்கள் மகள் பத்மாவதி முன் உட்கார வைத்தனர்.'குறத்தியே... உனக்கு எந்த ஊர்?' என்று கேட்டாள் பத்மாவதி.
'நான் முத்துமலையில் வசித்திருக்கிறேன்; குடகுமலையில் வாழ்ந்திருக்கிறேன்...' என்று, சொல்லிக்கொண்டே போனவள், 'இன்று, இந்த திருமலைக்கு வந்திருக்கிறேன். உலகிலுள்ள எல்லா மலைகளும், என் மலை தான்...' என்றாள். 'ஓகோ... அப்படியானால், நீ குறி சொல்வாயா?'
'என்ன... அப்படிகேட்டு விட்டீர்கள்... சிவனும், பார்வதியும் வசிக்கும் கைலாய மலைக்கு சென்று, அவர்களுக்கும் குறி சொல்லியிருக்கிறேன்; இந்திரலோகம் சென்று, தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் குறி சொல்லியிருக்கிறேன்...' என்று, பிரதாபித்தாள் குறத்தி. 'உங்கள் நாட்டில் எல்லாரும் நலமா?' என்று, கேட்டாள் பத்மாவதி. 'இளவரசி... எங்கள் நாட்டில் எல்லாரும் நண்பர்களே... பகை என்ற சொல்லே அங்குள்ளவர்களுக்கு தெரியாது. புலியும், பசுவும் ஒரே ஓடையில் தண்ணீர் குடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் ஊரில், வாழை, கிழக்கு நோக்கி குலை தள்ளும்; பலாப்பழமோ மேற்கு நோக்கி காய்க்கும்...' என்றாள். இவ்வாறு நடப்பது, ஒரு நாட்டிலும், வீட்டிலும், மங்கல நிகழ்ச்சி நடப்பதற்கான அறிகுறிகள். பின், பத்மாவதியின் கையைப் பார்த்த குறத்தி, 'எந்தக் கை, இப்போது, உன் கையைப் பிடித்திருக் கிறதோ, அந்தக் கைக்கு நீ சொந்தமாவாய்...' என்றாள்.பத்மாவதி, ஏதும் புரியாமல், குறத்தியைப் பார்க்க, 'இளவரசி... உன் மனதுக்குப் பிடித்தவனே, உனக்கு கணவன் ஆவான்...' என்றாள்.பத்மாவதிக்கு, நிம்மதிப் பெருமூச்சு.
ஆம்... அவளுக்கு, உலகையே காக்கும் அந்தக் கோவிந்தனே தன் மணாளன் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை நிறைவேறி, பத்மாவதி தாயார் திருச்சானுாரில் குடியிருந்து, நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாள். கார்த்திகை மாதத்தில், அவளுக்கு பிரம்மோற்சவம் நடக்கும்.  அவள், 'அலர்மேல் மங்கை' எனப்படுகிறாள். சொல் வழக்கில், அலமேலு என்பர். அலர் என்றால் தாமரை. 'செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்' என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது. பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்ன இந்தக்கதையைப் படிப்பவர்கள், அன்னையின் தேரோட்டத்தை தரிசித்து வாருங்கள். விரைவில், திருமணம் நடக்க, அந்த அலர்மேல் மங்கை அருள் செய்வாள். 

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்?

ஒரு செடியில், அழகான புஷ்பம் மலர்கிறது. அந்த புஷ்பம், பகவானுடைய திருவடியை அடைந்தால், அந்த புஷ்பத்துக்குப் பெருமை. ஒரு நல்ல இடத்தை அடைந்தோம் என்ற சந்தோஷம். அதுவே, ஒரு தாசியின் தலையை அடைந்து, அதை அலங்கரித்தால், புஷ்பத்துக்குப் பெருமையோ, சந்தோஷமோ கிடையாது. நாம் கொடுத்து வைத்தது, அவ்வளவுதான் என்று வருத்தப்படும். அதே போல, ஒரு பெண்ணானவள், நல்ல கணவனை அடைந்து, சந்தோஷமாக குடும்பம் நடத்தி, சந்ததியை உண்டாக்கி, நல்ல மனைவியாக வாழ்ந்து காட்டுவது தான் அவளுக்கும், அவளது கணவனுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை; பிறந்த வீட்டுக்கும் பெருமை. அப்படிப்பட்ட பெண்ணை மாமியார், மகாலட்சுமி மாதிரி எங்களுக்கு பெண் கிடைத்திருக்கிறாள்... என்று எல்லாரிடமும் பெருமையாகப் பேசுவாள். அதனால் தான், நல்ல ஜென்மா கிடைக்க வேண்டுமானால், ஆண்டவனிடம் பக்தி இருக்க வேண்டும் என்று, பெரியவர்கள் சொல்கின்றனர், இதற்கு, பணம், காசு வேண்டியதில்லை; மனம் இருக்க வேண்டும். மனம், பகவானிடம் செல்ல வேண்டும். வேறு எங்கெல்லாமோ சுற்றி அலையும் மனதை, பகவான் பக்கம் திருப்ப. முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும்.
With most of us now spending nine hours a day sitting down, here is looking at how our sedentary modern lifestyle is fast becoming a ticking health time bomb

Are you sitting comfortably? You might not be that comfortable by the time you finish reading this, because spending too much time perched on your posterior could be seriously damaging your health.

Those prolonged periods of inactivity increase your risk of obesity, but they also cause a staggering list of other conditions. This includes heart disease, diabetes, colon cancer, muscular and back issues, deep vein-thrombosis, brittle bones, depression and even dementia.

Experts are now describing sitting as 'the new smoking', a ticking time bomb of ill health just waiting to explode. The World Health Organisation has already identified physical inactivity as the fourth biggest killer on the planet, ahead of obesity.
Limits of exercise
The World Health Organisation recommends that an adult should do at least 150 minutes of moderate exercise a week, — 30 minutes on at least five days. That is enough to gain the main benefits of regular exercise. However, it won't protect you from the dangers of a sedentary lifestyle if you spend too much time sitting.

Dr John Buckley, an expert in exercise science at Chester University, says: "A person may have got more than 30 minutes' exercise by cycling to work and home again, but if they have been sitting still all day they will lose some of those benefits. It is like exercising but then eating an unhealthy diet or exercising and being a smoker. Physical inactivity is equally as important as those other well-known issues like diet and smoking."

What happens to your body when you're sitting down?
Sitting for too long slows down the body's metabolism and the way the enzyme lipoprotein lipase breaks down our fat reserves. On the other hand, blood glucose levels and blood pressure both increase.

Small amounts of regular activity, even just standing and moving around, throughout the day is enough to bring the increased levels back down. And those small amounts of activity add up — scientists have suggested that 30 minutes of light activity in two or three-minute bursts could be just as effective as a half-hour block of exercise.

But without that activity, blood sugar levels and blood pressure keep creeping up, steadily damaging the inside of the arteries and raising the risk of diabetes, heart disease and stroke.

Getting people more active so they spend less time sitting down is the single biggest step towards cutting the risk of developing those deadly diseases.

"The human race didn't evolve to spend so much time sitting down," says an expert.

"Up until relatively recently, we spent much of our time moving around."

What's the evidence?
A study of bus drivers and conductors carried out by Transport for London in the 1950s provides stark evidence of the dangers of spending too much time sitting down. It found that drivers, who spend more of their time sitting, were 1.5 times as likely to develop heart disease as conductors, who stood more often.

Getting people on their feet can prevent and alleviate back problems, which are commonly caused by spending too much time sitting or sitting with poor posture.

As well as the physical benefits, there are less-tangible rewards. Many people notice their mood improves, they can think more clearly and enjoy a general sense of well-being. "If you could put that in a bottle, people would pay a lot of money for it," says Dr Napton. "If you want to put that into activity levels, it would be the equivalent of running about 10 -marathons a year, just by standing up three or four hours in your day at work.''

Taking a stand at work
The benefits of standing instead of spending so much time sitting are finally starting to catch on. Just last month, Victoria Beckham was photographed walking while working after swapping her office chair for a treadmill desk.

Such luxuries are not for everyone. Adjustable sit-stand desks that allow workers to alter the height and work while sitting down or standing up offer a more practical solution.

Interestingly, standing desks are much common in Scandinavia, where staff have the right to work standing up. In this country, they are usually seen as treatment tools for patients who already suffer from back problems, rather than a way to prevent issues in later life.

Experts say standing and moving around will make people happier and healthier; it will make them more productive, too. "Winston Churchill used to stand at his desk,'' says an expert. "That's not a bad example to follow. We are more positive, more alert and more task-driven when we are standing."

Time to make a change
There is still some way to go before all of us follow the Scandanavian lead on workers' rights to sit and stand. Convincing firms, schools and families to act will play a vital role in creating a more active lifestyle.

But the benefits of standing apply across all age groups and parents could help their children by limiting the time infants spend restrained in buggies and car seats. The need for exercise remains crucial in later life and the elderly can help keep their bones and muscles strong by standing up and moving around regularly.

How sitting wrecks your body
- Electrical activity in the leg muscles shuts off
- Calorie burning drops to 1 per minute
- Enzymes that help break down fat drop by 90%
- Good cholesterol drops by 20%

After 24 hours:
- Insulin effectiveness drops by 24% and risk of diabetes rises
- People with sitting jobs have twice the rate of cardiovascular disease as people
with standing jobs.
- Take the extra step
- Sitting time adds up, whether it's at the desk or in the car. Walk, ride your bike, and take the stairs instead of the elevator. Also, interrupt sitting time whenever you can.
- Sitting at 1350 puts less strain on the back than hunching forward or even sitting straight.
- Daily Mirror

கோவை திராட்சை உற்பத்தியாளர்கள்

கோவையில் இருந்து சிறுவாணி போற வழியில இரண்டு பக்கமும் ரொம்ப பசுமையா இருக்கும். திராட்சை தோட்டம், பாக்கு மரங்கள், தென்னந்தோப்புகள் என பசுமை நிறைந்து இருக்கும். திராட்சை தோட்டங்கள் நிறைய இருக்கிறதால் அங்குள்ள திராட்சை தோட்ட விவசாயிகள் விளைகிற பழங்களை மிகவும் குறைந்த விலைக்கு அவங்க சங்கத்து மூலமா நமக்கு விற்பாங்க. மாதம்பட்டியில் இருக்கிற அவங்க சங்கத்துல நாம மிக குறைந்த விலைக்கு வாங்கிகலாம்.டவுன்ல விக்கிற விலைய விட குறைந்த விலைக்கு கிடைக்கும்.இதன் மூலம் கமிஷன் மண்டி  இடைத்தரகர் விலை இல்லாமல் உற்பத்தி விலைக்கே நாம வாங்கறதால் விவசாயிக்கு நல்ல விலை கிடைக்குது.எப்பவாவது அந்த பக்கம் போனீங்கனா மறக்காமல், யோசிக்காமல் நிறைய வாங்குங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விவசாயியின் தோட்டத்தில் உள்ள பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.திராட்சை மட்டுமல்லாமல் வாழை பழங்கள் கூட கிடைக்கின்றனஇந்த  மாதிரி விளைகின்ற அனைத்து பொருள்களுக்கும் நல்ல விலை கிடைத்தால் விவசாயிகளின் உழைப்பு இன்னும் பெருகும் 

மனிதநேய மருத்துவர் இளையபாரியின் லட்சியம்

இளையபாரி - இவர் மருத்துவர் இல்லை. ஆனால், தமிழகம் முழுவ தும் சுமார் 1500 குடும்பங்கள் இவரை மருத்துவருக்கும் மேலாக போற்றுகிறார்கள். சாலை விபத்து களில் சிக்கிக்கொண்ட ஆயிரக் கணக்கான நபர்களை காப்பாற்றி கரை சேர்த்திருக்கின்றன இளைய பாரியின் காக்கும் கரங்கள்.
மதுரைக்காரரான இளையபாரி யின் தாத்தா சேதுராமச்சந்திரன் சுதந்திரப் போராட்ட தியாகி. வினோ பாபாவேயின் பூமிதான இயக்கத் திற்கு தனது 5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்த முதல் தென்னிந்தியர். அந்தத் தியாக உள்ளம் இளையபாரிக்கும் அப்படியே இருக்கிறது. சிவில் இன்ஜினீயரிங் முடித்த இவர், படிக்கும்போதே காதல் ஜோடி களுக்கு திருமணங்களை செய்து வைத்தவர். இதனால், ஊருக்குள் தேவையற்ற பிரச்சினைகள் வெடித்த தால் 1990-ல் இவரை சென்னைக்கு கிளப்பிவிட்டார்கள் வீட்டார். ஆனாலும், 4 வருடங்கள் கழித்து மீண்டும் மதுரைக்கே திரும்பிவிட்டார்.
’’நான்கு மாநிலங்களுக்கான சர்ஜிகல் உபகரணங்கள் டீலராக நாங்கள் இருந்தோம். அதனால், மருத்துவமனைகளோடும் டாக்டர் களோடும் எனக்கு நெருக்கம் இருந்தது.மதுரையின் பிரபல டாக்டர்கள் எல்லாமே எனக்கு பழக்கம் என்பதால் நான் அழைத்தால் தட்டாமல் சிகிச்சையளிக்க ஓடிவருவார்கள். இப்படி இதுவரை ஆயிரக்கணக்கான நபர்களை காப்பாற்றி இருக்கிறேன். 1987-லிருந்து இதுவரை 153 முறை ரத்த தானமும் செய்திருக்கிறேன்.
எனது நட்பு வட்டத்தில் 275 நேர்மையான டாக்டர்கள் இருக்கி றார்கள். நான் சொன்னால் பைசா காசு வாங்காமல் இவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். எனது உதவியால், வெறும் நூறு ரூபாயில் அறுவைச் சிகிச்சை மூலம் மகப்பேறு பெற்றவர் களும் ரெண்டாயிரம் ரூபாயில் மூட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். இப்படி என்னால் சிகிச்சைக்கு உதவி செய்யப்பட்ட 1500 குடும்பங்கள் இப்போது என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’’ என்கிறார் இளையபாரி.

தன்னுடைய உடலை மாத்திர மின்றி தனது முயற்சியில் 15 பேரை உடல் தான ஒப்பந்தம் போடவைத்திருக்கிறார் இளையபாரி. சிறுநீரகம் பாதித்து டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இலவச இஞ்சி ஒத்தட சிகிச்சை கொடுத்து குணப்படுத்திவரும் பாரி, தமிழகத்தில் பல்வேறு ஆதர வற்றோர் இல்லங்களில் உள்ள 362 குழந்தைகளுக்கு காப்பாளராகவும் இருக்கிறார்.
’’தனித் தனியாய் இருக்கும் இந்தக் குழந்தைகளை எல்லாம் ஒரே கூட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ வைக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கித்தான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறேன்’’ என்று கூறி தனது மேன்மையான சேவைகளால் மெய்சிலிர்க்க வைக்கிறார் இளைய பாரி (தொடர்புக்கு 9360009019).

Saturday, May 24, 2014

வானம் பொழிகிறது.. வாட்டர் டேங்க் நிரம்புகிறது!: குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் ‘மழைநீர்’ வரதராஜன்

திருவாரூரைச் சேர்ந்தவர். பொதுப்பணித் துறையின் நீரியல் கோட்டத்திலும் நிலநீர் கோட்டத்திலும் 30 ஆண்டுகள் பொறியாளராக இருந்தவர். அதனால், மழைநீரின் அருமை புரிந்தவர். இவர் அமைத்துக் கொடுத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 2500-க்கும் அதிகமான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. அதுபற்றி நம்மிடம் பேசுகிறார் வரதராஜன்..

தண்ணீர் தரத்தில் 120-வது இடம்
நம் உடம்புக்குத் தேவையான 18 மினரல்கள் தண்ணீரில் இருக்கு. இந்த 18 மினரல்களின் கூட்டு அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் குறைந்தபட்சம் 60 மில்லிகிராம், அதிகபட்சம் 500 மில்லிகிராம் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நாம் பயன்படுத்தும் தண்ணீரில் மினரல்கள் இந்த விகிதத் தில் இருப்பதில்லை. 122 நாடு களின் தண்ணீர் பரிசோதனை செய்யப் பட்டது. தண்ணீர்த் தரத்தில் நம் நாடு 120-வது இடத்தில் இருப்பதாக ஐ.நா. சபை அறிக்கை தந்திருக்கிறது.
‘சுத்தமான’ நீரில்கூட மினரல் இல்லை
பாட்டில், ஆர்.ஓ. தண்ணீர் சுத்தமானது, சுகாதாரமானது என நினைக்கிறோம். அதில்கூட உப்பு அளவை குறைக்கிறார்களே தவிர, நம் உடம்புக்குத் தேவையான மினரல்கள் சரிவிகிதத்தில் இருப்ப தில்லை. அதனால்தான் நம் நாட்டில் வியாதிகள் பெருகுகிறது. எனக்கு 69 வயதாகிறது. இதுவரை ஆஸ்பத்திரிப் பக்கம் போனதில்லை. காரணம் மழைநீரைப் பயன்படுத்து வதுதான்.
நம் நாட்டில் ஆண்டுக்கு 42 நாள் மழைப் பொழிவு இருக்கிறது. மழை நீரை உரிய முறையில் சேமித்து வைத்தாலே போதும், குடிநீர்ப் பிரச்சினை வரவே வராது. 4 X 2 அடி சைஸில் ஃபைபர் தொட்டி ஒன்றை சன் ஷேடில் வைத்து அதற்குள் மணல், ஜல்லி, மரக்கரி போட்டு வைத்துவிட வேண்டும். இதுதான் மழைநீரை வடிகட்டும் ஃபில்ட்டர்.
மொட்டை மாடியில் விழும் மழைநீரை ஒரு குழாய் மூலம் ஃபில்ட்டரில் விட்டால் அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு கிரிஸ்டல் க்ளியரில் சுத்தமான தண்ணீர் கிடைத்துவிடும். மழை நீர் சேகரிப்பதற்காகவே கடைகளில் வெள்ளை நிறத் தொட்டிகள் கிடைக்கின்றன. தேவை யான கொள்ளளவுக்கு வாங்கி சமைய லறை லாஃப்டில் வைத்துவிட்டு ஃபில்ட்டருக்கும் இந்தத் தொட்டிக்கும் குழாய் இணைப்பு கொடுத்தால் போதும். வடிகட்டப்பட்ட மழைநீர் இந்த தொட்டியில் சேகரமாகும். சமையலறையில் தளத்துக்கு அடியில் பிரத்தியேகத் தொட்டி அமைத்தும் நீரைச் சேமிக்கலாம்.
10 ஆண்டுகளானாலும் கெடாது
வெளிக் காற்றும் வெப்பமும் உள்ளே செல்லாமல் இருந்தால் 10 ஆண்டுகளானாலும் இந்த தண்ணீர் கெட்டுப்போகாது. என் வீட்டில் 2005-ம் ஆண்டில் சேமித்த தண்ணீரைத்தான் இப்போது பயன்படுத்தி வருகிறேன். நான் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தில் ரூ.11 லட்சம் வரை செலவழித்து சோதனை செய்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளேன்.
சென்னையில் மட்டுமே 142 இடங்களில் என் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அளவில் 567 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
லாப நோக்கின்றி சேவை நோக்கில் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை அமைத்துக் கொடுத்து வருகிறேன். ‘இதை அமைக்க மொத்தமாக ஆர்டர் கொடுத்தால் எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?’ என்று அரசியல்வாதிகள் சிலர் பேரம் பேசினார்கள். இயற்கையின் கொடையை வைத்து இடைத்தரகர்கள் சம்பாதிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் மறுத்துவிட்டேன் என்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன்.

பிதுர் தர்ப்பணத்தின் முக்கியத்துவம்

தோஷ நிவர்த்தி தலங்ள்

சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை-செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியகிரக தோஷங்கள் நீங்கும்.

திருவையாறு-கும்பகோணம் பாதையில் திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது, திங்களூர். இத்தல சந்திரபகவானை வணங்க, சந்திரகிரக தோஷங்கள் விலகும்.

மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானை வழிபட, தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் அருளும் த்ரிபங்க நிலையில் உள்ள துர்க்காம்பிகையை உளமாற வழிபட்டால் ராகு தோஷங்கள் நீங்கிவிடும்.

64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பெருமாளை தரிசித்தால் புத கிரக தோஷங்கள் விலகும்.

சென்னை-மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்திலுள்ள சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட பில்லி, சூன்யங்கள்  தவிடுபொடியாகும்.

ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்க சுக்கிர கிரக தோஷங்கள் நீங்கி  மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.

காஞ்சிபுரத்திலுள்ள சித்ரகுப்த சுவாமியை வேண்ட, கேது கிரக தோஷங்கள் மறையும்.

திருவாரூருக்கு அருகேயுள்ள திருக்கொள்ளிக்காட்டில் அருளும் சனிபகவானை வணங்க, சனி தோஷங்கள் மறைந்தோடும்.

சென்னை-அரக்கோணத்திற்கு அருகே பள்ளூரில் அருளும் வாராஹியை வணங்க, செவ்வாய் தோஷங்கள் தொலைந்தோடும்.

சென்னை - கும்மிடிப்பூண்டி சாலையில் செங்குன்றத்தை அடுத்துள்ள பஞ்சேஷ்டியில் ஆனந்தவல்லியம்மன் பாதத்தில் உள்ள சப்தசதி மகாயந்திரத்தை அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த யந்திரத்தில் எலுமிச்சம் கனிகள் வைத்து வணங்க, திருமண தோஷங்கள் நீங்குகின்றன.

கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ஐயாவாடி பிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தினத்தன்று செய்யப்படும் மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்து கொண்டால் மாந்தி, குளிகன் போன்றவர்களால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும்.

சென்னை-தாம்பரம் அருகே படப்பை-காஞ்சிபுரம் சாலையில் உள்ள கண்டிகை கிராமத்தில் மாமேரு, மாதங்கி, வாராஹி, திதிநித்யா தேவிகள் யந்திர உருவில் அருள்கின்றனர். தொடர்ந்து  9 வாரங்கள் இவர்களை தரிசிக்க சகல தோஷங்களும் நீங்குகின்றன.

கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையும் முல்லை வனநாதரும் கர்ப்பத் தடை  தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்கள்.

சென்னை, ரத்னமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரனை வெள்ளிக்கிழமைகளில் வணங்க, தரித்திர தோஷம் நீங்கும்.

திண்டிவனத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள பெரமண்டூர் அணியாத அழகர் கோயிலில் அருளும் தர்மதேவிக்கு 9 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விளக்கேற்ற, தோஷங்கள் தொலைகின்றன.

ராமநாதபுரம், தேவிபட்டணத்தில் ராமரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டு கடல்நடுவே அருளும் நவகிரகங்கள் சகல விதமான தோஷங்களையும் தகர்த்தெறிவார்கள்.

காஞ்சிபுரம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளையும் திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாளையும் தரிசிக்க மறைந்த பித்ரு தோஷங்கள் தொலையும்.

ஈரோடு திருப்பாண்டிக் கொடுமுடியில் உள்ள கொடுமுடிநாதர் தலம் மும்மூர்த்தித் தலமாகவும் சகல தோஷ பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு வன்னி மரத்தின் கீழ் அமர்ந்த நான்முகனுக்கு மூன்று முகங்கள் மட்டுமே உண்டு. வன்னிமரமே நான்காவது முகமாகக் கருதப்படுகிறது.

திருமங்கலக்குடியில் அருளும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷங்களை நீக்குவதில் நிகரற்றவளாக பக்தர்களால் போற்றப்படுகிறாள்.  

 
விபத்தில் இறந்து விட்டான். முதலாம் ஆண்டு திதியை ஒரு வருடம் நிறைவு பெறுவதற்குள் செய்ய வேண்டுமென்று ஜோதிடர் கூறுகிறார். எப்போது கொடுப்பது? early death pariharam
எந்த தமிழ் மாதத்தில் எந்த திதியன்று இறந்தார் என்று பார்த்து, அன்றே முதல் வருடத்திய திதியை கொடுக்க வேண்டும். இப்படி 36 வயதில் ஒருவர் இறப்பதை அகால மரணம் என்பார்கள். இது குடும்பத்தில் அனைவரையும் பாதிக்கலாம் என்பதால்  கொஞ்சம் பெரிய பரிகாரமாக செய்து விடுங்கள். அதுதான் நல்லது. உங்கள் மகனின் உயிர் பிரிந்த திதியன்று அதாவது ஒவ்வொரு தமிழ் மாதமும் அந்தக் குறிப்பிட்ட திதியன்று  எள்ளு சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் மூன்றையும் சிவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு நிறைய கொடுங்கள். அப்படி விநியோகம் செய்யும்போது ‘ஸர்வேசா துர்ம்ருதி தோஷம் நிவாரய நிவாரய’ என்று சொல்லியபடியே கொடுங்கள்.

நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் ஆலய தலவிருட்சம், மாமரம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய  மரம்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் நந்தியம் பெருமான் கொலுவிருக்கிறார். இவர் ‘கர்ஜிப்பாரா’னால் அப்போது கலியுகம் முடியும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் பலிபீடமும் ஏழு படிகளும் சங்கீதமயமானவை. ஆமாம், அவற்றைத் தட்டினால் இனிய ஒலி  எழுகிறது; ஏழு ஸ்வரங்களையும் கேட்க முடிகிறது.

திருவாரூர், செதிலபதியில் விநாயகர் மனித முகத்துடன் காட்சியளிக்கிறார். அதே கோயிலில், தட்சிணாமூர்த்தியும், சனகாதி முனிவர் நால்வர் மற்றும் இரண்டு அணில்களோடு காட்சி தருகிறார்.

ஈரோடு, கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலுள்ள வன்னிமரம், பிரம்மனின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. இந்த மரத்தில் முள், பூ, காய்  போன்றவை இல்லை.

ஈரோடு- சத்யமங்கலம், புஞ்சை புளியம்பட்டி சௌடேஸ்வரி அன்னையின் திருவிழாவின் மூன்றாம் நாளன்று அன்னையே சப்பரத்தில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்குகிறாள்.

திருக்கண்ணபுரம் கருவறை விமானத்தில் முனிவர்கள் திருமாலை நோக்கித் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த உத்பலாவதக விமானத்தை  யாரும் தரிசிக்க முடியாதபடி மதிற்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலில் நான்கு வாயில்களும் தனித்தனி சிறப்பு பெற்றவை. பெருமானைத் தரிசிக்க சம்பந்தர் தென்வாயில் வழியா கவும் நாவுக்கரசர் கிழக்கு வாயில் வழியாகவும் சுந்தரர் வடக்கு வாயில் வழியாகவும் மாணிக்கவாசகர் மேற்கு வாயில் வழியாகவும் நுழைந்திருக்கிறார் கள்.

கும்பகோணம், அழகாபுத்தூரில் இந்திர மயிலின் மீது அமர்ந்து கல்யாணசுந்தர ஷண்முகசுப்ரமண்யர் தன் தேவியருடன் காட்சி தருகிறார். இவரது  திருவாசி ஓம் வடிவிலிருக்கிறது. திருக்கரங்கள்  சங்கு-சக்கரம் ஏந்தியுள்ளன.

காரைக்குடி, பாதரகுடியில் 10 அடி உயரத்தில் நின்ற நிலையில் சந்தோஷிமாதாவை தரிசிக்கலாம். ஒவ்வொரு வெள்ளியன்றும் முந்திரி பாயசம்   நிவேதிக்கப்படுகிறது.

தேனி, கம்பம், சாமாண்டிபுரத்தில் அம்பிகை புற்று வடிவில் வயல் நடுவில் அருள்கிறாள். வழக்கமாக வடக்கு நோக்கும் அம்பிகை இங்கே தெற்கு நோக்கியிருக்கிறாள். இங்கு வளையலே பிரசாதம்.

திருவாரூர் திருமஞ்சன வீதியில் சிம்மத்தின் மேல் அமர்ந்து தலையில் சந்திர கலை தரித்து மும்மூர்த்தி அம்சத்துடன் ஜெயதுர்க்காவை தரிசிக்கலாம்.  ராமபிரான் வழிபட்ட துர்க்கை இவள்.

திருவண்ணாமலையில் சம்பந்தாசுரனை அழித்து, அவன் ரத்தத்தைப் பூசிக்கொண்ட  செந்தூர விநாயகருக்கு, வருடத்தில் நான்கு முறை செந்தூரம்  சாத்தப்படுகிறது.

சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயம் இரட்டைச் சிறப்புகள் கொண்டது. இங்கே, ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரு சிவ சந்நதிகள்; வடிவுடை, வட்டப்பாறை என இரு அம்பிகை சந்நதிகள்; அத்தி, மகிழம் என இரு தல விருட்சங்கள்; பிரம்ம, அத்தி என இரு தீர்த்தங்கள்; காரணம், காமீ கம் என இரு ஆகம பூஜைகள்! பைரவர் நாய் இல்லாமலும் துர்க்கை மகிஷன் இல்லாமலும் தரிசனம் தருவது மேலும் வித்தியாசமான அமைப்பு.

அம்பிகை உபாசகரான உப்புராயர் உருவாக்கிய உப்பு லிங்கத்தை இப்போதும் ராமேஸ்வரம் ராமநாதர் சந்நதிக்கு பின்புறம் தரிசிக்கலாம். உப்பின்  சொரசொரப்பை அந்த லிங்கம் காட்டுகிறது.

நாகப்பட்டினம், திருநல்லாடையில் அக்னீஸ்வரர், நெருப்பு வடிவமாக உள்ளதால் அவரின் வெப்பத்தைத் தணிக்க, கருவறையின் தாழ்வான பகுதியில்  எப்போதும் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

மான், மழு ஏந்தி யோகபட்டை, சின்முத்திரையுடனான தட்சிணாமூர்த்தி வாணியம்பாடி, அதிதீஸ்வரர் கோயிலில் உள்ளார்.

சிவகங்கை, கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆடத் தயாரான நிலையில், அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் நடராஜரை தரிசிக்கலாம்.

தஞ்சாவூர், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தெற்கு நோக்கி, மந்தா-ஜேஷ்டா  சமேதராக திருமணக் கோலத்தில்  காட்சி தரு கிறார்.

தஞ்சாவூர்-அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர் ஆலய சுந்தரநாயகி தெற்கே கடலைப் பார்த்தபடி அருள்வதால் கடல் பார்த்த நாயகி என்றழைக்கப்  படுகிறாள்.
- See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=899#sthash.OnuNd2hn.dpuf
நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் ஆலய தலவிருட்சம், மாமரம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய  மரம்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தின் பிரதான மண்டபத்தில் நந்தியம் பெருமான் கொலுவிருக்கிறார். இவர் ‘கர்ஜிப்பாரா’னால் அப்போது கலியுகம் முடியும் என்பது நம்பிக்கை.

கும்பகோணம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் பலிபீடமும் ஏழு படிகளும் சங்கீதமயமானவை. ஆமாம், அவற்றைத் தட்டினால் இனிய ஒலி  எழுகிறது; ஏழு ஸ்வரங்களையும் கேட்க முடிகிறது.

திருவாரூர், செதிலபதியில் விநாயகர் மனித முகத்துடன் காட்சியளிக்கிறார். அதே கோயிலில், தட்சிணாமூர்த்தியும், சனகாதி முனிவர் நால்வர் மற்றும் இரண்டு அணில்களோடு காட்சி தருகிறார்.

ஈரோடு, கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலுள்ள வன்னிமரம், பிரம்மனின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. இந்த மரத்தில் முள், பூ, காய்  போன்றவை இல்லை.

ஈரோடு- சத்யமங்கலம், புஞ்சை புளியம்பட்டி சௌடேஸ்வரி அன்னையின் திருவிழாவின் மூன்றாம் நாளன்று அன்னையே சப்பரத்தில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்குகிறாள்.

திருக்கண்ணபுரம் கருவறை விமானத்தில் முனிவர்கள் திருமாலை நோக்கித் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த உத்பலாவதக விமானத்தை  யாரும் தரிசிக்க முடியாதபடி மதிற்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலில் நான்கு வாயில்களும் தனித்தனி சிறப்பு பெற்றவை. பெருமானைத் தரிசிக்க சம்பந்தர் தென்வாயில் வழியா கவும் நாவுக்கரசர் கிழக்கு வாயில் வழியாகவும் சுந்தரர் வடக்கு வாயில் வழியாகவும் மாணிக்கவாசகர் மேற்கு வாயில் வழியாகவும் நுழைந்திருக்கிறார் கள்.

கும்பகோணம், அழகாபுத்தூரில் இந்திர மயிலின் மீது அமர்ந்து கல்யாணசுந்தர ஷண்முகசுப்ரமண்யர் தன் தேவியருடன் காட்சி தருகிறார். இவரது  திருவாசி ஓம் வடிவிலிருக்கிறது. திருக்கரங்கள்  சங்கு-சக்கரம் ஏந்தியுள்ளன.

காரைக்குடி, பாதரகுடியில் 10 அடி உயரத்தில் நின்ற நிலையில் சந்தோஷிமாதாவை தரிசிக்கலாம். ஒவ்வொரு வெள்ளியன்றும் முந்திரி பாயசம்   நிவேதிக்கப்படுகிறது.

தேனி, கம்பம், சாமாண்டிபுரத்தில் அம்பிகை புற்று வடிவில் வயல் நடுவில் அருள்கிறாள். வழக்கமாக வடக்கு நோக்கும் அம்பிகை இங்கே தெற்கு நோக்கியிருக்கிறாள். இங்கு வளையலே பிரசாதம்.

திருவாரூர் திருமஞ்சன வீதியில் சிம்மத்தின் மேல் அமர்ந்து தலையில் சந்திர கலை தரித்து மும்மூர்த்தி அம்சத்துடன் ஜெயதுர்க்காவை தரிசிக்கலாம்.  ராமபிரான் வழிபட்ட துர்க்கை இவள்.

திருவண்ணாமலையில் சம்பந்தாசுரனை அழித்து, அவன் ரத்தத்தைப் பூசிக்கொண்ட  செந்தூர விநாயகருக்கு, வருடத்தில் நான்கு முறை செந்தூரம்  சாத்தப்படுகிறது.

சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயம் இரட்டைச் சிறப்புகள் கொண்டது. இங்கே, ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரு சிவ சந்நதிகள்; வடிவுடை, வட்டப்பாறை என இரு அம்பிகை சந்நதிகள்; அத்தி, மகிழம் என இரு தல விருட்சங்கள்; பிரம்ம, அத்தி என இரு தீர்த்தங்கள்; காரணம், காமீ கம் என இரு ஆகம பூஜைகள்! பைரவர் நாய் இல்லாமலும் துர்க்கை மகிஷன் இல்லாமலும் தரிசனம் தருவது மேலும் வித்தியாசமான அமைப்பு.

அம்பிகை உபாசகரான உப்புராயர் உருவாக்கிய உப்பு லிங்கத்தை இப்போதும் ராமேஸ்வரம் ராமநாதர் சந்நதிக்கு பின்புறம் தரிசிக்கலாம். உப்பின்  சொரசொரப்பை அந்த லிங்கம் காட்டுகிறது.

நாகப்பட்டினம், திருநல்லாடையில் அக்னீஸ்வரர், நெருப்பு வடிவமாக உள்ளதால் அவரின் வெப்பத்தைத் தணிக்க, கருவறையின் தாழ்வான பகுதியில்  எப்போதும் தண்ணீர் ஊற்றப்படுகிறது.

மான், மழு ஏந்தி யோகபட்டை, சின்முத்திரையுடனான தட்சிணாமூர்த்தி வாணியம்பாடி, அதிதீஸ்வரர் கோயிலில் உள்ளார்.

சிவகங்கை, கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆடத் தயாரான நிலையில், அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் நடராஜரை தரிசிக்கலாம்.

தஞ்சாவூர், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தெற்கு நோக்கி, மந்தா-ஜேஷ்டா  சமேதராக திருமணக் கோலத்தில்  காட்சி தரு கிறார்.

தஞ்சாவூர்-அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர் ஆலய சுந்தரநாயகி தெற்கே கடலைப் பார்த்தபடி அருள்வதால் கடல் பார்த்த நாயகி என்றழைக்கப்  படுகிறாள்.
- See more at: http://m.dinakaran.com/aDetail.asp?Nid=899#sthash.OnuNd2hn.dpu
ஆலயங்களில் வித்தியாசத் தகவல்கள்
ஆலயங்களில் வித்தியாசத் தகவல்கள்

Friday, May 23, 2014

Accidents on the rise, ignore LPG safety at your own peril


Do you check the use-by date of LPG cylinders when the delivery guy comes around with them? That's should be part of standard operating procedure for domestic safety because a cylinder past its expiry date can potentially be as much a safety risk as a worn-out tube or a faulty valve. 

An investigation has yet to be completed to determine if the LPG leak that led to a fire in Maraimalai Nagar on Saturday night, killing four people and seriously injuring two others, was caused by negligence , such as a stove burner not being shut, or due to a fault with the cylinder, valve or other parts of the mechanism. 

Whatever the cause, experts say, customers should pay attention to all aspects of safety in the use of LPG for cooking. They say it is also essential for oil companies to instruct new customers on safe use of stoves and cylinders. 

Most LPG cylinders have a life span of 20 to 25 years but t h e y s h o u l d b e checked every five years, oil industry officials say. Cylinders past their expiry date are prone to leaks because of wear and tear to valve pad rings and to bleeder and safety valves. They estimate that 8% of cylinders in the market are past their expiry date. 

Indane gas customer K Raghavendra Bhat says he was delivered a cylinder on April 26 that had expired in September 2012. "The cylinder leaked in the valve area but my distributor changed the cylinder only after I lodged a complaint," he said. 

An official with an oil major said every cylinder contained the expiry date in three-character alphanumeric code. A, B, C and D denote three-month clusters of a year, and the last two digits indicate the year. For instance, a cylinder marked A-15 would expire at the end of March 2015. 

Consumers pay 75 every two years for mandatory safety checks of their cooking gas connections and are covered by insurance against accidents like cylinder explosion. An Indane official says consumers should be made aware of this and request their agency to check their connections regularly. 

"We keep a close watch for expired gas cylinders and remove them from the market," he said, adding that most accidents were caused due to customer negligence. 

But consumer activist T Sadagopan says he has come across several instances of old cylinders being delivered to households. "Delivery boys admit that they sometimes have to supply old cylinders but blame oil companies for this," he said. 

All India LPG Distributors Federation general secretary C G Krishnamoorthy says he regularly sees expired cylinders, but ensures that they are taken out of the system and are not be delivered to customers. mp.christin@timesgroup.com 

Times View 

Lack of adherence to safety standards with cooking gas connections has led to an alarming spate of accidents and, for the most part avoidable , loss of life. Oil companies, distributors and customers are all to blame for this reckless nonchalance. What is required is a safety mechanism that involves thorough investigation of every LPG-related accident, regular safety audits at manufacturing units and distributors' facilities and safety checks of domestic and commercial connections. The authorities should take action against those responsible for accidents that such a system would otherwise avert. As long as responsibility is not affixed, it is unlikely that a foolproof system can be put in place. It is also essential for oil companies and distributors to instruct customers on safe use of gas connections and for customers to take responsibility for their safety. 

'உணவே மருந்தாக... மருந்தே உணவாக!

சென்னை, சைதாபேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஜீனிஸ் சாலை எப்போதும் பரபரப்பாக ஆட்கள் பறந்து கொண்டிருக்கும் இடம். சிறிய தள்ளுவண்டி ஒன்றில், 'உணவே மருந்தாக மருந்தே உணவாக’ என்ற வாசகத்தோடு... 'சளி நீங்க தூதுவளை சூப்’, 'கொழுப்பைக் கரைக்க கொள்ளு சூப்’, 'மூட்டு வலி நீங்க முடக்கத்தான் சூப்’, 'ஆயுள் நீட்டிக்க தேன்நெல்லி’ என சிலேட்டுகளில் எழுதி தொங்கவிடப்பட்டிருக்கும் தாய்வழி இயற்கை உணவகத்திலும் கூட்டம் அலைமோதுவது ஆச்சர்யமே!
நம்மாழ்வார் நினைவாக..!
உணவகத்தை நடத்தி வரும் மகாலிங்கத்திடம் பேசினோம், ''ஆரோக்கியமான வாழ்வுக்கு இயற்கை உணவுதான் ஏற்றதுனு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்லுவாரு. அந்த வார்த்தைகள்தான் இந்தக் கடை தொடங்கக் காரணமா இருந்தது. நண்பர்கள் சரவணன், ரவி ரெண்டு பேரோடயும் சேர்ந்து... இயற்கையாகக் கிடைக்கும் விளைபொருள்களை வெச்சு ஆரோக்கியமான உணவுப் பொருளை மக்களுக்கு கொடுக்கலாம்ங்கிற முடிவோட இந்த ஜனவரியிலதான் ஆரம்பிச்சோம். இதுக்கு, மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு.
காலையில, அருகம்புல் சாறு, நெல்லிக்கனிச் சாறு, வாழைத்தண்டு சாறு, மூலிகை கலந்த துளசி டீ, கறிவேப்பிலைச் சாறு, கேரட் கீர், பீட்ரூட் கீர் விற்பனை செய்றோம். மாலையில், தேன் நெல்லி, 7 வகை காய்கறிகள் கலந்த சூப், முடக்கத்தான் சூப், கொள்ளு சூப், முருங்கைக்காய் சூப், தூதுவளை சூப், மணத்தக்காளி சூப்பும் கொடுக்குறோம். இதை சாப்பிடறதால ஏற்படுற நன்மைகள் பத்தின துண்டு பிரசுரத்தையும் கொடுக்குறோம். பக்கத்துலயே சிறுதானிய உணவகத்தையும் ஆரம்பிச்சிருக்கோம். அதுல, இரவு நேரங்கள்ல சிறுதானிய தோசை, மூலிகை இட்லி, மூலிகை தோசைனு கொடுக்கிறோம்.
தினமும் 1,500 ரூபாய்...!
இதை ஆரம்பிக்கறதுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளதான் முதலீடு செஞ்சோம். ஒரு நாளைக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், சிறுதானியங்கள் வாங்க மொத்தமா 2 ஆயிரம் ரூபாய் செலவாகுது. இயற்கை அங்காடிகள்ல காய்கறிகளை வாங்கிக்கிறோம். சாறு வகைகள், சூப் வகைகள்ல ஒரு நாளைக்கு 20 லிட்டர் தயாரிக்கிறோம். 200 மில்லி சூப் 15 ரூபாய்னு விற்பனை செய்றோம். தோசை 30 ரூபாய்னும் மூலிகை இட்லி 5 ரூபாய்னும் விற்பனை செய்றோம். ஹோட்டல்ல விக்கிற விலையைவிட குறைவுதான். ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் வருது. செலவெல்லாம் போக 1,500 ரூபாய் லாபமா கையில நிக்குது. இப்பத்தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமா எங்க பக்கம் திரும்ப ஆரம்பிச்சுருக்காங்க. சிலர் ரெகுலரா வர ஆரம்பிச்சுட்டாங்க. மெரினா கடற்கரையிலும் ஒரு கிளை தொடங்கி இருக்கோம். அங்கேயும் நல்ல வரவேற்பு'' என்றார் மகாலிங்கம் மகிழ்ச்சியுடன்.
கொள்ளு தோசை... மூலிகை இட்லி...!    
அவரைத் தொடர்ந்த ரவி, ''நாங்க எந்த உணவுப் பொருள்லயும் ரசாயனத்தைச் சேர்க்கிறதில்ல. மூலிகைகள், கீரைகள்லருந்து எடுக்கப்பட்ட சாறுகளைத்தான் வடிகட்டி விற்பனை செய்றோம். நல்லெண்ணெய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பட்டை, சோம்பு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லிதான் சேக்குறோம். பொதுவா சூப் ருசியாக இருக்கறதுக்காக மைதா மாவு சேர்ப்பாங்க. நாங்க அதை சேர்க்கறதில்ல. கொள்ளு தவிர எல்லா சிறு தானியங்களையும் ஒண்ணா சேர்த்து அரைச்சு பொடியாக்கி... கைக்குத்தல் அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து, அரைச்ச மாவுல கலந்து தோசை செய்றோம். கருப்பு உளுந்து எலும்புக்கு நல்லது. இந்த சிறுதானிய தோசையில் எல்லா சத்துக்களுமே இருக்கு. இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகம் இருக்குறதால, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
எடையைக் குறைக்கணும்னு நினைக்கறவங் களுக்காக கொள்ளு தோசை தயாரிக்கிறோம். மூலிகைச் சாறை மாவோடு கலந்து மூலிகை இட்லி தயார் செய்றோம். மக்களுக்கு, நோய்க்கான மருந்தை நாங்க தரல. ஆனா, உணவையே மருந்தா தர்றோம்'' என்றார் புன்னகையோடு!
தொடர்புக்கு, மகாலிங்கம்,  செல்போன்: 97907-04074