Sunday, April 12, 2015

சாதகமான தீர்ப்பு கிடைக்க

எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே இன்னொரு நிலமும் உள்ளது. நிலத்தின் உரிமையாளர் தானே வந்து எங்களிடம் விற்பதற்கு சம்மதித்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டார். பின் மனம் மாறி சாஸனம் செய்துதர மறுக்கிறார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க என்ன பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்?
உங்கள் பக்கத்தில் நியாயம் இருக்குமானால் கீழ்க்கண்ட வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வெற்றி கிட்டும்.

மலையை தூக்கியபடி ஆகாயத்தில் பறக்கும் அனுமனது படத்தை துளசி மாலை, வெண்ணெய், வடை மாலைகளால் அலங்கரித்து, கிழக்கு திசைநோக்கி வைத்து 108 முறை கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.

அதேசமயம் சீர்காழிக்கு அருகேயுள்ள திருவெண்காடு தலத்தில் ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள புதன் பகவானையும், அகோர மூர்த்தியையும் வணங்குங்கள்.

மார்க்கடேச மகாத்ஸாஹ
ஸர்வபீதி வினாசக!
சத்ரூன் ஸம்ஹார மாம்ரக்ஷ
ச்ரியம் தாஸாய தேஹிமே!

No comments:

Post a Comment