Wednesday, July 31, 2013

வாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா?

சொந்த வீடு சென்ற இதழில் வெளியான ‘வாடகைதாரரா நீங்கள்..?’ என்னும் கட்டுரையைத் தொடர்ந்து வாசகர்கள் பலர் வாடகை வீடு குறித்து சட்டரீதியான சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். இது தொடர்பான நமது கேள்விகளுக்கு வழக்கறிஞர் விஸ்வநாதன் பதில்களை அளிக்கிறார்.
1. வாடகை வீட்டில் மிக நீண்டகாலம் வசிப்பவர்கள் அந்த வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?
வாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.
2 வாடகைக் கட்டணம், அட்வான்ஸ் நிர்ணயிப்பதில் சட்ட வரையறை உண்டா?
வாடகைக் கட்டணம் வசூலிப்பதில் சட்ட வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. ஆனால் வாடகைக் கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தைக் கூட்டலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்தைத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.
வாடகைதாரர் அதிகமான வாடகைக் கட்டணத்திற்கு குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்.
வாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது.
3. வாடகைதாரர்களைக் காலி செய்யச் சொல்ல என்னென்ன காரணங்கள் உள்ளன?
உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கோர முறையான சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை:
வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது 5க்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்தத் தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்குப் பிறகு வாடகை செலுத்தத் தவறினால் காலிசெய்யச் சொல்லலாம்.
வாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தி இருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.
வீடு எந்த உபயோகத்திற்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது. உதாரணத்திற்கு வசிப்பதற்காக எடுத்து அதில் ஏதெனும் வணிகம் செய்தால். சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால்...
வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபடும்போது... அந்த வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தால்... (மலைவாசஸ் தலங்களுக்கு இந்த வீதிமுறை செல்லாது).
4. வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் உரிமையாளர் இழப்பீடு வாங்கிக்கொள்ள சட்ட வழிமுறை இருக்கிறதா?
வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது. வாடகைதாரர் வீட்டிற்காகச் செலுத்தியிருக்கும் அட்வான்ஸில் உரிய தொகையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் உரிமையாளருக்கு உண்டு.
5. வாடகைதாரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றத்தை எப்படி அணுகுவது?
சென்னையைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.
6. தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் நிறுத்தப்படுவது, திடீரென வீட்டைக் காலிசெய்யச் சொல்வது - இது போன்று உரிமையாளர்கள் தொந்தரவு தரும்போது அதற்கான இழப்பீடு வாங்க வாடகைதாரர்களுக்கு உரிமை உண்டா?
தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.

லீஸ்... வாடகை... எது நல்லது
ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதால் பல்வேறு சாதகங்கள் இருந்தாலும், சில பாதகங்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், லீஸ் எடுக்கும்போது போடப்படும் ஒப்பந்தத்தைச் சரியாக வடிவமைத்துக்கொண்டால், பல பிரச்சினைகளை லீஸ் எடுப்பவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக, லீஸ் ஒப்பந்தம் போடும்போதே, வீட்டுக்கு வெள்ளையடிப்பது, வீட்டின் பராமரிப்பு செலவு ஆகியவற்றிற்கு வீட்டின் உரிமையாளரே பொறுப்பு எனத் தெளிவாகக் குறிப்பிட்டுவிட வேண்டும்.
மேலும், வீட்டைக் காலி செய்ய விரும்பினால், இரு தரப்பினரும், எத்தனை மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, வீட்டின் உரிமையாளருக்கு வீடு தேவைப்படும் பட்சத்தில், லீசுக்கு இருப்பவருக்குச் சுமார் 3 மாதங்கள் வரை கால அவகாசம் கொடுத்து விட்டுக் காலி செய்யச் சொல்லலாம். அதேபோல், வீட்டை லீஸ் எடுத்தவருக்குப் பணம் தேவைப்படும் பட்சத்தில், பணத்தைத் திருப்பித் தர, வீட்டின் உரிமையாளருக்கு 3 மாதங்கள் அவகாசம் தர வேண்டும். இதுதான் பரஸ்பர லீஸ் ஒப்பந்தமாகப் பெரும்பாலும் இருந்து வருகிறது.
ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் போது, ஏதாவது சிக்கல் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட முடியும். ஆனால், லீசுக்கு வீடு எடுக்கும் பட்சத்தில், அதுபோல் எளிதாக மாறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதற்கு முன்பாக ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து விட்டே முடிவு செய்ய வேண்டும்.

நுகர்வோருக்கு விழிப்புணர்வு தேவை!

வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தும், "கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா' அமைப்பின் அறங்காவலர், நிர்மலா தேசிகன்: சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், சொந்த வீடு வாங்குவது குதிரை கொம்பாக உள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி போன்றவற்றால், நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல், வாடகை வீட்டிலேயே குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாடகை வீட்டில் குடியேறினால், வீட்டின் உரிமையாளர் பல காரணம் கூறி, அதிக பணம் வசூலிப்பர். குறிப்பாக, மின்சாரத்திற்காக கட்ட வேண்டிய கட்டணமே, வீட்டின் வாடகையை தாண்டி விடுகிறது. அர” வசூலிக்கும் மின் கட்டணத்திற்கு மேல், யாரும் அதிகமாக வசூலிக்க கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், மின் மீட்டரின் யூனிட் அளவை விட, கூடுதல் கட்டணம் வசூலிப்பர். கட்டணம் அதிகமாக இருக்கிறதே என, வாடகைதாரர் கேள்வி கேட்டால், "இந்த ஆண்டு மின்சார வாரியத்திற்கு அதிக, "டெபாசிட்' தொகை கட்ட வேண்டும். அதனால், டெபாசிட் தொகையை, சரி பாதியாக அனைவருக்கும் பிரித்து தந்திருக்கிறேன்' என, காரணம் கூறுவார். இது முற்றிலும் தவறு. ஏனெனில், டெபாசிட் தொகையை வீட்டின் உரிமையாளர் தான், முற்றிலும் கட்ட வேண்டும். வாடகைக்கு குடியிருப்போர், வெறும் நுகர்வோர் மட்டுமே. வாடகைதாரர் தான் முற்றிலும் கட்ட வேண்டும் என, கட்டாயப்படுத்த முடியாது. மீறினால், உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, வாடகைதாரருக்கு முழு உரிமை உள்ளது. இதற்கான புகாரை, "கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா'வின் தொலைபேசி எண்ணான, 044-6633 4346க்கு தொடர்பு கொண்டு, புகாரை பதிவு செய்யலாம். "ஹெல்ப் லைன்' எண்ணான, 044-2451 3191க்கு தொடர்பு கொண்டு, தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம். இப்படி வீட்டின் உரிமையாளர் மீது, வாடகைதாரர் புகார் செய்யும் பட்சத்தில், புகார் செய்த, 48 மணி நேரத்தில் இருந்து, ஏழு நாட்களுக்குள், புகாரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Sunday, July 28, 2013

Focus on Fitness

According to Dr. Sheela, the important aspect of a weight-loss routine is that one must never aspire to look a certain way or like someone else. For, at the end of the day, we can only look like a new version of ourselves.
As far as weight goes, diet is more important than exercise, However, she added that diet alone did not improve fitness levels. “In moderation, everything is fine. “If you had an ice-cream or a sweet that day, make up for it by walking an extra 45 minutes,” added Dr. Gita.
Help from yoga?
Can yoga be a substitute to weight-training? “Indian women have low muscle mass when compared to their Western counterparts,” said Dr. Sheela. “This is the reason for half of our health problems.” Ashtanga yoga can be a substitute to weight-training to a certain extent, while regular Hatha yoga cannot, she said. Can millets be used as a substitute to rice? “Yes. Unrefined red rice can also be had in the place of rice. It has its own nutrients.” Answering a question on detox diet, Dr. Sheela said that “the human body is absolutely phenomenal. You don’t need to go on a detox diet. The eat-sleep-exercise routine is in itself a detoxification process”.
Though workout systems such as zumba and Pilates are sought-after weigh-loss practices, one should choose the right way to lose weight. “Doing this one thing will not help you; you have to find out what combination is good for you.”

பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்

மின் கம்பி அறுந்தால் ஆபத்தில்லை!


சூறைக்காற்றால், அறுந்து விழும் மின் கம்பிகளிலிருந்து பாயும் மின்சாரத்தை, தானியங்கி முறையில் நிறுத்தும் கருவியை கண்டுபிடித்த, ஹரிஷங்கர்: நான், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவன். வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லூரியில், "எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்' படிக்கிறேன். தானே புயல் போன்று, சூறைக்காற்றுடன் மழை பெய்யும் போது, மின் கம்பிகள் அறுந்து விழுவதால், எதிர்பாராத மனித இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடித்ததே, இந்த தானியங்கி கருவி. "டிரான்ஸ்பார்மரில்' இருந்து செல்லும், ஒவ்வொரு மின் கம்பியிலும், மின்சாரத்தின் அளவை உணரும், "சென்சார்'களை இணைத்தேன். புயல் மற்றும் பலத்த காற்று வீசும் போது, மின் கம்பிகள் அறுந்து, நிலத்தில் பட்ட உடன், நிலம் அதிக அளவு மின் சாரத்தை உறிஞ்சுகிறது. இதனால், மின் கம்பியில் இருந்து சாதாரண நிலையை விட, பல மடங்கு மின்சாரம் வெளியிடப்படுகிறது. அதிக அளவு மின்சாரம் வெளியிடப்படுவதை, சென்சார்கள் உணர்ந்ததும், "மைக்ரோ கன்ட்ரோலரு'க்கு, சிக்னல் மூலமாக தகவல் அனுப்பும். அறுந்து விழும் மின் கம்பிகளில் பாயும் மின்சாரத்தை, நிறுத்த வேண்டும் என்ற கட்டளையை, ஒரு, "சிப்'பில் புரோக்ராமாக பதிவு செய்து, மைக்ரோ கன்ட்ரோலரில் பொருத்தி, டிரான்ஸ்பார்மருடன் இணைத்துள்ளேன். இதனால், சென்சாரில் இருந்து தகவல் கிடைத்ததும், மைக்ரோ கன்ட்ரோலர், தன் கட்டுப்பாட்டில் உள்ள, "ரிலே' சுவிட்ச்சை ஆப் செய்யும். இதன் மூலம், அந்த கம்பி வழியாக மின்சாரம் சப்ளை செய்யப்படுவது தானாக நிறுத்தப்படும். மழை மற்றும் வெயில் காலம் என, எல்லா சூழ்நிலையிலும், 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் தன்மை, இத்தானியங்கி கருவிக்கு உள்ளது. மின்கம்பி அறுபட்டுள்ளதை, அருகில் உள்ள மின்சார அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட லைன் மேனுக்கு தெரியப்படுத்த, மொபைல் போனில் உள்ள, ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பம் மூலம், எஸ்.எம்.எஸ்., அனுப்பும் கூடுதல் வசதியும் இதில் உள்ளது. தொடர்புக்கு: 96590 95472.

Thursday, July 25, 2013

Puja Flowers

 கண்ணுப்பூ

மகிழம்பூ = magizhampoo = Spanish Cherry;

தாழம்பூ = thaazhampoo = Screwpine ;

மனோரஞ்சிதம = manoranjitham = Ylang Ylang / Tail grape

செண்பகப்பூ = shenbagappoo = Indian Magnolia;

நாகலிங்கபூ = naagalingapoo = Cannonball tree flower

Punnaga (புன்னை Punnai) - Calophyllum inophyllum



மந்தாரை Mandaara - bauhinia variegata



Note:  There were white, yellow and red versions of this flower. Usually for Ganesha/ Shiva white are preferred. and for Ambal it's yellow. Red ones, are not usually used for Pujas.


Vakula (Mahizham) - Mimusops elengi




Amrunaalam (Vetiver)

Note:  The roots of this grass are fragrant and dark in color. They are used in garlands etc.. and also added to fire as incense + water as a flavoring agent. This is also used to decorate the hair of Gods/Godesses.


Patalee (Padiri) -Stereospermum tetragonum 



Note:  The root of this tree is one of the components of Dasha Moola ristam , an Ayurvedic medicinal preparation for good health. This tree or flowers are being referred in most of the Vedic and Puranic scriptures.


Drona (Thumbai) - Leucas aspera


Note:  These beautiful flowers are also very important in Shiva Pooja. They also attract butterflies , while in full bloom after the monsoon seasons. They can be easily propagated using seeds. They are found abundantly in open lands after the rains. The leaves of this plant are supposed to have medicinal qualities and can cure cold etc.. The entire plant can be extracted as a juice and consumed for cold, cough, fever etc.. No need for any harmful pills.


Durthaara(Umathai) - Datura discolor


Senpakam - Champaka - Michelia champaca


This could grow to be a big tree and they climb on the tree to collect the flowers. Oils, extracts are made from these flowers. Buds of this flower is(unblossomed) are used in making facial and body treatment powders.


Madhavi (Kurukkathi) - Hiptage benghalensis 





Note:  Inspite of  various references about this flower in Srimad Bhagavatham and other scriptures, the leaves, bark and flowers of this flower seem to possess medicinal qualities in curing asthma, ulcer etc. This flower has a strong fruity aroma.

Shamyaaka (Mayil Konrai)  Caesalpinia pulcherrima


Note:  These flowers are found in the thorny, leguminous trees in abundance. The un-ripe pods of this tree contain, seeds, which are liked by kids a lot. Usually it's an easily tree grown in the tropical climates.

Kalhaara (Sengazhuneer) - Nymphaea nouchali


Note:  Same family like water lotus. This flower is very famous for all Pujas (Devi,Vishnu, Ganesha etc..)  Rhizomes, seeds and flowers are all use din treatment of diarrohea,dysentry etc.

Karaveera (Arali) - Nerium Oleander


Note: Fragrant flowers, and poisonous seeds and plant parts.

Paarijaatha (Pavazhamalli) -Nyctanthes arbor-tristis 


Note: These are small trees, which produce a large amount of flowers. They can be easily propagated through seeds or cuttings. These flowers are also available all round the year. Usually, small nets or plastic sheets are spread under this tree and it sheds it's flowers early in the morning. The stalk of this flower is coral red, while the petals resemble a jasmine. They could be made into beautiful strands with a needle and string. The flowers have a unique fragrance. The leaves of this tree can be dry roasted and made into a tea and consumed as a remedy for cold, fever etc..

Dhadimi(Mathulai) - Punica granatum



Note: leaves, fruits, seeds etc.. are all great medicines for dysentery. Flowers are really beautiful.

Kadamba - Neolamarckia cadamba


Note:  Flowers are beautifil and fragrant. Leaves or bark of this tree are used in medicinal treatments of ulcer,cough,fever etc..

Davana (Marikozhundhu) - Artemisia Pallens


Note:  Actually these are leaves and not flowers. But they are like flowers as the entire plant has an aroma. The plant stays fragrant even after several months after harvest. This aroma is supposed to prevent insects and cockroaches and are used with the dresses in cupboard



Shankhupushpam or Aparajitha (Butterfly pea - Clitoria ternatea)

white shankhupushpam

ஆவாரம்பூ










நான், மூக்குத்தி ரகம் என, அழைக்கப்படும், "பட்டன் ரோஸ்' வகைகளை பயிரிட்டேன். இரண்டு முறை உழுத நிலத்தில், அரை அடி ஆழத்தில் குழி தோண்டி, மண்புழு உரம் மற்றும் குருணைகளை இடுவது நல்லது. அதன் பின், வரிக்கு வரி, 5 அடியும், செடிக்கு செடி, 3 அடி இடைவெளியில், நடவு செய்தேன். ரோஜாவை நடவு செய்த சில வாரங்களிலேயே, ரோஸ் பூக்க ஆரம்பிக்கும். இந்நேரத்தில், குறைந்த அளவிலான பூக்களை தான் அறுவடை செய்ய முடியும். எனவே, செடி பல கிளைகளுடன் பெரிதாக படர்ந்து வளரவும், அதிக மகசூல் பெறவும், மொட்டுகளை கிள்ளி விடுவது நல்லது. ஆண்டிற்கு ஒரு முறை செடிகளை மொத்தமாக வெட்டி, மீண்டும் துளிர்க்க விட்டால், மூன்று ஆண்டுகள் வரை, ரோஸ் தொடர்ந்து பூக்கும். உரங்களை கைத்தெளிப்பான் மூலம், 15 நாட்களுக்கு ஒரு முறை என, சுழற்சி முறையில் தெளிக்கலாம். ஏக்கருக்கு, 2,000 செடிகளை பயிரிட, 60 ஆயிரம் செலவாகும். கோடை காலத்தை தவிர்த்து மற்ற மாதங்களில் தினமும், 40 கிலோ வரை ரோஜாவை அறுவடை செய்யலாம். 1 கிலோ, 80 ரூபாய் வரை விற்றால் மாதம், 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். தொடர்புக்கு: 90037 85852


 
மணம் தரும் பெருங்கள்ளி புளுமெரியா என்றும் பெருங்கள்ளி என்றும் அழைக்கப்படும் இந்த மலர்கள் எண்ணற்ற மணம் தரக்கூடியவை. இது மஞ்சள், பிங்க் என பல வர்ணங்களில் காணப்படுகின்றன. எளிதில் வளரும் வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். குளுமையான சீதோஷ்ணமே போதுமானது. மனதிற்கு இதம் தரும் மலர் இது.

Wednesday, July 24, 2013

மருத்துவத்திலும் நஷ்டஈடு பெறலாம்!


"மருத்துவ சிகிச்சை கவன குறைபாட்டை எதிர்த்து, நஷ்டஈடு பெறும் நடைமுறைகளை கூறும், நீதிபதி ரத்னவேலு: நான், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றுகிறேன். மருத்துவரின் சிகிச்சை பயனளிக்கவில்லை என்பதால், அவர் மீது வழக்கு தொடர்வது சாத்தியமில்லை. அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால், எந்த மருத்துவரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாது.


ஆனால், "மெடிக்கல் நெக்லிஜன்ஸ்' என்றழைக்கப்படும், மருத்துவ சிகிச்சையில் குறைபாடு இருந்தால், வழக்கு தொடரலாம். பிளட் மற்றும் யூரின் டெஸ்ட், ஸ்கேன், இ.சி.ஜி., என, பல பரிசோதனைகள் செய்து, அதன் அடிப்படையில் தான், நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.மேலும், இந்த மருத்துவர் மூலம், இந்த ஆபரேஷன் செய்ய போகிறோம். ஆபரேஷன் செய்தால் என்ன பயன், செய்ய தவறினால் என்ன தீங்கு ஏற்படும், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எத்தனை சதவீதம் என, ஒரு ரிப்போர்ட்டாக நோயாளி அல்லது உரியவரிடம், தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மருத்துவ விதி.


இதை பின்பற்றாமல் செய்யப்படும் எல்லா சிகிச்சைகளுமே, "மருத்துவ சிகிச்சை கவனக் குறைபாடு' என்ற வரையறைக்குள் வரும். ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கினால் தான், நீங்கள் நுகர்வோர். அதனால், இலவச சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்கள், நுகர்வோர் நீதிமன்றத்தை நாடாமல், தகுந்த ஆதாரங்களோடு, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பயன் பெறலாம்.



நுகர்வோர் நீதிமன்றத்தில், 45 நாட்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், பணம் கொடுத்து சிகிச்சை பெற்ற நுகர்வோர்க்கு, விரைவிலேயே நீதி கிடைத்துவிடும்.


ஒரு தனியார் மருத்துவமனையில், குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணிற்கு, மீண்டும் குழந்தை பிறந்தது என்றால், அது மருத்துவ சிகிச்சை கவனக் குறைபாடு. பாதிக்கப்பட்ட பெண்ணிடம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான, "ரிப்போர்ட்' இருந்தாலே, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நஷ்டஈடு பெற முடியும்.

Monday, July 22, 2013

Statement of Purpose

Support your claims with hard data when writing a Statement of Purpose for an MBA admission.

There are many hurdles to cross in your quest for an admission to a top business school – in India or overseas. In addition to the admission test scores, almost all top colleges require applicants to present their statement of purpose (SOP). This can serve as another indicator of your eligibility . There is more significance to the essays if you are applying to schools abroad, for these essays also contribute to your eligibility for financial aid.
The essays are to be written as responses to the prompts, either as questions or as statements.
Whether you are a fresher or working professional, you have to present yourself favourably while writing these essays to improve your chances of admission to the college.
To prepare the SoP, a majority of applicants refer to standard formats which successful students have followed, or take assistance from advisors. Yet others keep these original — in content and language.
That many of these SoPs are ridden with exaggerations is a given.
The admission committee may not choose to ignore these. Hence caution has to be exercised.
Common exaggerations
Always wanted to start my own firm: Most applicants believe that this is a ‘preferred response’. While it is true that many a student dreams of ‘owning’ a company while they are still in college, it is important to see that your academic and non-academic credentials match the goal.
Was the best student/worker/ all-rounder: Avoid superlative words unless the fact is expressible in tangible forms. For example, it is different if you say ‘I was the best athlete in my school and I was awarded ‘the best athlete’ at school level or district level in event X for the year Y.
If you have been awarded for your painting in a contest, or for an essay in a writing competition (include statistics such as the number of contestants/ state-level/ school-level), you are an achiever in that specific field.
If you are already employed, even if multitasking is sometimes part of your work, portraying these as multiple roles is an overstatement.
Done projects independently
A small project or a short-term internship cannot amount to actual experience. Similarly the usage ‘extensive experience’ may not apply to you.
If you mention your contribution towards conducting an event in college, or a work project, make it look real and believable.
Give your peers and your guide their due credit for their contributions; let team projects be stated as a platform to present your team skills. Acknowledgements are real signs of leadership.
Took a meaningful break
A tendency to hide a gap is not welcome. If the gap is more than six months after college or during employment, you need to duly justify it.
Non-existent fillers may not be the best solution. However, there is no harm in underplaying or not mentioning any episode in your academic or work life that you had no control over (such as an affiliation problem with the college or ‘benching’ of a work offer.)
High on attributes
Desist from using generic traits, such as ‘creative’, ‘highly motivated’, ‘effective’, ‘innovative’, ‘responsible’, ‘analytical’ and ‘optimistic’. Such generic words can bemisleading. Everything you put in your essay should have a proof. If no specific data is attached these terms are not considered valid.
Have few weaknesses
All of us have shortcomings. Most colleges require you to write about your weakness in your SoP. You may be honest about these and spell out what you have initiated to get over them.
Have adequate management skills ‘I have all the skills to be accepted into your university. I always wanted to get into your prestigious school.’
You are seeking business education. With a few years of work experience behind you, you may have rudiments of managerial skills. But if you have been in a technical job, making such judgment is a hyperbole; let the business school groom you to be a management professional. Unless, there is a question on ‘where you see yourself X years from now, you need not mention your long-term aspirations.
Want to change society
If you have done volunteer work, enumerate them in clear, specific terms, not fabricated and ‘tailor-made’ for the application. If your goal is eventually to bring out change, be specific about the causes that you are concerned about.
A born leader
The school may ask you to mention early signs of leadership, if any. This does not mean that it is mandatory to project yourself as someone who is already a leader: you may be one in the making.
If you project yourself as this ‘well-rounded’ personality what more moulding can a business school do?
Let the SoP showcase your integrity, true skills and achievements and value system. Give hard data on your achievements; be subtle in your plan for the future — the clear plan will emerge as you progress in your MBA.
The writer is a GMAT Trainer at semantics learning.
Email her at vijaya@semanticslearning.com.

Saturday, July 20, 2013

புண்ணியத்திற்கே புண்ணியம்

இடும்பன் என்ற அரக்கன் தனது பிறவிப்பிணி நீங்க இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்தான். இதனால் இவனது சகல பாவமும் நீங்கி இத்தலத்தில் இடும்பையை திருமணம் செய்து கொண்டதால் இத்தலம் இடும்பாவனம் ஆனது. ஒரு முறை திருஞான சம்பந்தர் வேதாரண்யத்திலிருந்து மதுரை வரும்போது இத்தலத்திற்கு வந்தார். அச்சமயம் அவரது கண்களுக்கு இத்தலத்திலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்தது. எனவே அவர் பயந்து, காலால் நடக்காமல் கால்களை உயரே தூக்கியபடி கைகளால் நடந்து வந்தார் என தலவரலாறு கூறுகிறது.

அகத்தியருக்கு சிவன் திருமண காட்சி காட்டிய தலங்களில் இதுவும் ஒன்று. எனவே மூலவருக்கு பின்னால் சிவன் பார்வதி திருமணக்கோலம் உள்ளது. அகத்தியர் இத்தலத்தில் வாழ்ந்த காலத்தில் பாவங்களால் அரக்கர் வடிவம் பெற்ற தேவசருமன் என்ற அந்தணனுக்கும் அவன் மனைவிக்கும் தன் கமண்டல நீரை தெளித்து, சற்குணநாதரை வழிபடச் செய்து மோட்சமளித்தார்.

குணபரன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை இத்தலத்திற்கு கொண்டு வரும்போது தன் தந்தையின் உருவம் தோன்றி மைந்தனை வாழ்த்தி முக்தி பெற்றது. எனவே இத்தலம் பிதுர் முக்தி தலங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேயன் மீது பாசக்கயிறு வீசியதால் எமதர்மனுக்கு சாபம் ஏற்பட்டது. அந்த சாபமானது எமன் இத்தலத்தில் பூஜை செய்ததால் நீங்கியது. எமபயம் போக்கும் தலம்.

ஒரே கல்லால் ஆன கஜலட்சுமியும் தெட்சிணாமூர்த்தியும் சனீஸ்வரனும் இத்தலத்தின் சிறப்பாகும். போரில் ராவணனை வெல்ல ராமன் வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.

வெள்ளை விநாயகர்: கடல்நுரையால் ஆன சித்திபுத்தியுடன் கூடிய வெள்ளைவிநாயகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு பால், பன்னீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணத்தடை நீங்கவும், எதிரிகளை வெல்லவும், எமபயம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் கோயிலில் தீபம் ஏற்ற அதிக அளவில் எண்ணெய் வாங்கிக்கொடுத்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

 அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் - 614 703 திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம். +91- 4369 - 240 349, 240 200.

அனைத்து மத புண்ணிய ஸ்தல மண் மூலம் கட்டிய கிறிஸ்தவ ஆலயம்!

அனைத்து மத புண்ணிய ஸ்தல மண் மூலம் கட்டிய கிறிஸ்தவ ஆலயம்!
ஆகஸ்ட் 10,2012
அ-
+
ஓசூர்: ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்து, கிறிஸ்தவ ஆலயம் கட்டியுள்ளனர்.ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், திருஇருதய ஆண்டவர் ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயம், அன்ணை வேளாங்கண்ணி மாதா ஆலய வடிவமைப்பை போல் ஐந்து கோடி ரூபாய் மதிபீட்டில் புதிதாக கட்டப்பட்டது.சகோதரத்துவம், மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், உலகின் அனைத்து மத புண்ணிய ஸ்தலங்கள், கோவில்கள், கடல்கள் மற்றும் புனித மலைகளில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்கள், மண் மற்றும் தண்ணீர் கொண்டு, இந்த ஆலயத்தை கட்டியுள்ளனர்.ரோம்நகர் ஆலயம், தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நாகூர் முஸ்ஸிம் தர்கா மற்றும் மொராக்கோ, அல்ஜீரியா, உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள், பாலஸ்தீனம், இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட கிறிஸ்தவ நாடுகள், இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஹிந்து நாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த ஹிந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் கோவில்களில் இருந்து மண் எடுத்தும், புத்தகாயவில் இருந்து போதி மர இலை ஆகியவற்றை எடுத்து வந்தும், இந்த ஆலயத்தின் அடித்தளத்தில் இடப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது.கங்கை நதி, காவிரி ஆறு, யோர்தான் நதி, லூர்து நதி, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, மத்தியத் தரைக்கடல் ஆகிய இடங்களில் இருந்து தண்ணீரும் எடுத்து வந்து, கட்டுமான பணியில் தெளிக்கப்பட்டது.இமயமலை, சீயோன் மலை, செயின்ட் தாமஸ் மலை, குருசு மலை உள்ளிட்ட சிறப்பு வாய்ந் மலைக்கற்கள் எடுத்து வந்து, இந்த கோவில் அடித்தளத்தில் இடப்பட்டு கட்டப்பட்டது. அனைத்து மக்களும், சகோதாரர்கள் என்ற மத ஒற்றுமையை உணர்த்துவதற்காக, இந்த கோவிலை, அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த பணம் மூலம் கட்டப்பட்டதாக, ஆலய பங்குத் தந்தை அருள்ராஜ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:ஓசூர் நகரில், பல்வேறு மதம், கலாச்சாரம், இனத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் மத்தியில், மத ஒற்றுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆலய கட்டுமான பணிக்கு, அனைத்து மத புன்னிய ஸ்தலங்களில் இருந்து, மண், கற்கள், தண்ணீர் எடுத்து வந்து கட்டப்பட்டது. இந்த ஆலயம், முழுக்க முழுக்க அனைத்து மதத்தை சேர்ந்த, மக்கள் கொடுத்த பணம், பொருட்கள் மூலம் கட்டப்பட்டது. இந்த கோவில் திறப்பு விழா, வரும் 20ம் தேதி நடக்கிறது. விழாவில், அனைத்து மத தலைவர்கள், கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மகாபலிபுரம் special

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள மகாபலிபுரம் ஒரு சுற்றுலா தலம் மட்டுமின்றி, வேறு பல வகையிலும் சிறப்பு பெற்றதாகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்ய தேசமாக விளங்குவது மட்டுமல்லாமல், முதலாழ்வார் களில் ஒருவரான பூதத்தாழ்வாரின் அவதாரத் தலமும் ஆகும். 

இத்தலத்தின் சரித்திர முக்கியத்துவத்தை அறிந்திருக்கும் பலர், இதன் ஆன்மிகத் தன்மை யைப் பற்றி அவ்வளவாகத் தெரிந்து கொள்ள வில்லை. ஏனெனில் பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள தலசயனப் பெருமாள் திருக்கோவிலுக்.

இத்தலம் சேதுவுக்கு நிகரான மகிமையைப் பெற்றது என்றும்; அதனால் இதற்கு "அர்த்த சேது' என்ற பெயரும் உண்டு என்றும் கூறுவர். சேதுவில் கடல் நீராடல் எவ்வளவு புனிதத் துவத்தை அளிக்குமோ அதே பலன்களை இங்குள்ள கடலில் நீராடியும் பெறலாம்.

பொதுவாக கடல் நீராடல் என்பதை அமாவாசை, பௌர்ணமி, கிரகண காலங்களில் தான் மேற்கொள்ள வேண்டும் என்ற நியதி உண்டு. ராமேஸ்வரம், சேது மற்றும் மகாபலிபுர கடல் ஸ்நானத்தை எப்போது வேண்டுமானா லும் மேற்கொள்ளலாம். அதேபோல உத்தரா யன, தட்சிணாயன  காலங்களிலும் மாசிமகத் தன்றும் கடல் ஸ்நானம் முக்கியமானது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள திருமால் வெறும் தரையில் சயனித்திருக் கும் தயாநிதி என்றால், இங்கு பூமித் தாயின் மகிமையைப் பற்றி என்ன சொல் வது! இத்திருக்கோவிலில் திருமகளும் "நிலமங்கை' என்ற திருநாமத்துடன் விளங்குவதும் தனிச்சிறப்பு. 

இத்திருத்தலம் மகப்பேறு அளிக்கும் புண்ணிய தலமாகப் போற்றப்படுகிறது. 

இத்திருக்கோவிலருகே அமைந்திருக்கும் ஆதிவராகப் பெருமாள் திருமணப் பேறு அருளும் கருணா மூர்த்தியாய் விளங்குகிறார். 

மாசி மக நன்னா ளில் (mid of February ) மகாபலிபுரம் சென்று புண்ணிய கடல் நீராடி புனிதம் அடைய லாம்.

இப்படி ஒரு ஊரா?

இப்படி ஒரு ஊரா?
ஜூலை 20,2013
அ-
+
Temple images
இங்கு ஒருநாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாமனநிலையும் ஏற்படும். ஞாயிறன்று இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர். செவ்வாயன்று விரமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர். புதனன்று விரதமிருப்பவர்கள் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். வியாழன்று விரதமிருந்தால், ஆசிரியர் பதவி பெறலாம். (டி.இ.டி. தேர்வு எழுதுவோர் சென்று வரலாம்) வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப் போல் செல்வவளத்துடன் வாழ்வர். சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்க்குணங்கள் நீங்கப்பெறுவர். ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தகால ரிஷிகள். இது எதுவுமே இங்கு தேவையில்லை.. ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்... பல நூறு யாகங்கள் செய்பலன் கிடைத்து விடும்.
அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்... ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்...நம்மை நம்பி பிறர் கொடுத்பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்... பிறரை ஏமாற்றி இருந்தால்.. ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்...இந்த வரராசைக்கு வந்தால் போதும். கொடிய பாவங்கள் நீங்கிவிடும். இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இøஅத்தலத்து இறைவனே தருகிறார். அதனால், இøவிட உயர்ந்தலம் வேறில்லை. சிவகணங்களில் நந்ததீஸ்வரர், நவரத்தினங்களில் வைரமும், ராசிகளில் சிம்மமும், தேவர்களில் இந்திரனும், மிருகங்களில் கஸ்தூரி பூனையும், இலைகளில் வில்வமும், பாணங்களில் பாசுபதாஸ்திரமும், சக்திகளில் உமாதேவியும், பூக்களில் தாமரையும், குருக்களில் வியாழ பகவானும், முனிவர்களில் அகத்தியரும், பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ...அதுபோல், தலங்களிலேயே வராரசை தான் உயர்ந்தது. இதற்கு புன்னைவனம், சீரரசை என்றும் பெயருண்டு. இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்தபலன் கிடைக்கும்.
ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால், தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும். இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்øபாக்கியம் உண்டு. இங்கே தன் ஒரு மகளுக்கு திருமணம் முடித்தால் கூட, ஆயிரம் கன்னிகாதானம் செய்த பாக்கியம் கிடைக்கும். இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர். இந்தத்தலம் எதுவென இன்னும் புரியவில்லையா? சங்கரனாகிய சிவனும், நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கரநாராயணர் கோயில்.... கோமதி அம்பாள் சமேசங்கரலிங்க சுவாமி கோயில்...ஊர் பெயர் சங்கரன்கோவில். இங்கே வரும் 22ல் ஆடித்தபசு விழா நடக்கிறது. வாழ்வில் ஒருமுறையாவது இங்கே சென்று வந்து விடுவீர்கள் தானே!
இருப்பிடம்: மதுரையில் இருந்து 120 கி.மீ., போன்: 04636 222 265.

Thursday, July 18, 2013

குழந்தைகளுக்கானபல் பராமரிப்பு!

பிறந்த குழந்தைகளுக்கான, பல் பராமரிப்பு பற்றி கூறும் குழந்தை நல நிபுணர், பாலசுப்ரமணியம்: குழந்தைகள் பிறந்த, ஆறு முதல், ஏழாம் மாதத்தில் இருந்து, "பால் பற்கள்' முளைக்க ஆரம்பிக்கின்றன. 
அதிலிருந்து, குழந்தையின் பற்களை பராமரிக்கும் வேலையை, பெற்றோர் கவனமாகச் செய்ய வேண்டும். பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் தருணங்களில், ஈறுகள், "நமநம'வென்று இருப்பதால், குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இதனால், எவ்வித பயமோ, அச்சமோ இல்லாமல், மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம்.

குழந்தை காலை எழுந்ததும், மெல்லிய, "மஸ்லின்' துணியை, தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை, மெதுவாக சுத்தம் செய்து விட வேண்டும். இரவு பால் குடித்ததும், இதே போல் சுத்தம் செய்த பின், தூங்க வைக்கலாம். ஒரு வயது வரை, இதைத் தொடர வேண்டும்.

ஒரு வயதான குழந்தைகளுக்கு, "புளூரைட்' குறைந்த பற்பசையை உபயோகிக்க ஆரம்பிக்கலாம். மென்மையான பிரஷ் அல்லது பிங்கர் பிரஷ் மூலம், காலை மற்றும் இரவு என, இரு வேளையும் பல் துலக்கி, வாய் கொப்பளிக்கவும் பழக்கப்படுத்தலாம்.
குழந்தைகள் விளையாடும் போது, கீழே விழுந்து பல்லை உடைத்துக் கொள்வர். உடனே, உடைந்த பல்லை பாலில் போட்டு, தாமதிக்காமல் பல் மருத்துவரிடம் எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், உடைந்த பல்லோடு, அதை ஒட்ட வைக்க முடியும். இது, எல்லா வயதினருக்கும் பொருந்தும்.

பல்லில் கறுப்பாக ஏதாவது இருந்தால், அது தான் பல் சொத்தைக்கான முதல் அறிகுறி. ஆரம்ப கட்டத்திலேயே சொத்தையை சுத்தம் செய்து, அப்பகுதியில் உள்ள ஓட்டையை அடைக்க வேண்டும். தாமதித்தால், பல் சொத்தையாகி, முழு பல்லையும் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு வகைகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை, சிறு குழந்தைகள் சாப்பிட பழக்கப்படுத்தக் கூடாது. பல்லில் படியும் இனிப்புகளை, பாக்டீரியா சிதைக்க ஆரம்பிக்கும் போது வெளிப்படும் ஆசிட், பற்களின் எனாமலை பாதித்து, பற்களின் ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.

Wednesday, July 17, 2013

Five steps to perfect skin

Radiant and flawless skin is what everyone wants. And here are some new skincare tips to get a beautiful complexion. It’s known that drinking eight glasses of water a day, using SPF, and having a solid cleansing routine are essential, but the Association of Professional Hair and Makeup Artists reveals its top five tips for radiant skin, reports femalefirst.co.uk.

Here are five tips that you may not have known about:

Flip your pillow case
When you sleep, you drool, perspire and sometimes sweat. This goes directly onto your pillow case and sheets, so it’s a must to keep your pillow clean. To keep it clean, every two weeks vacuum it with a turbo brush. Then wash it on hot (or follow care instructions), shake the pillow out and let dry naturally in sunlight. This regular cleaning will help reduce the bacteria in the pillow. During the week, between washing the sheets, turn your pillowcase inside out and upside down, so that you are getting the side that your face hasn’t been touching.

Steam up your shower
Going to the spa for a facial is one of the best things you can do for your skin. No matter what type of skin you have, steam is one of the spa’s secret tricks while giving you a facial. It opens your pores, and the gentle heat brings blood to the surface of your skin, which helps it naturally repair itself. When you’re going to take a shower, turn the temperature hotter than normal, and shut the door for a few minutes. This allows the steam to build up. Once it has a good amount of steam, you have created your own steam room. Take your shower as normal, and over time, your skin will start glowing like never before.

Wash your face for longer
You know you should brush your teeth for two minutes, so give the same kind of attention to your skin. When you wash your face, do it for at least two minutes. This allows the cleanser to really do its job, and get into your pores.

Don’t touch your face
You touch your face more than you know. The National Health Institute of Bethesda found that people touched common objects an average of 3.3 times an hour and their faces 3.6 times an hour. If you get bacteria on your hands and touch your face, the bacteria is on your face. So, think! Touching your face is a harder thing to stop doing than you think, as it happens naturally. How often do you move your hair out of your face? How often do your rub your eyes, or hold your hand up to your face when you sneeze? But the point here is to make a concerted effort to not touch your face and use anti-bacterial gel or wipes.

Keep your hair clean, and out of your face
Your hair can lead to spots. The natural oils in your hair can build up and transfer onto your face. You’re not going to change your hairstyle. So the solution is two-fold. First, when you’re at home, push your hair behind your ears. The second is to use products on your hair that will be better for your skin — such as organic and natural products — as these tend to be gentler on your skin.