Wednesday, June 26, 2013

குழந்தையை வழிக்குக் கொண்டு வர


புரொபசர் கூவே சொன்ன வழியை, அந்த வீட்டம்மாளிடம் சொல்லுங்கள்...' என்றேன்.

"அது யார் கூவே?'
"பெரிய மனோதத்துவ நிபுணர். குழந்தையை வழிக்குக் கொண்டு வர ஒரு வழி சொல்லியிருக்கிறார்... ராத்திரி குழந்தை படுத்துத் தூங்கியதும், அதன் படுக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, "நீ நல்லவனாயிருக்க வேண்டும்; சமர்த்தாய் படிக்க வேண்டும். பிடிவாதம் பிடிக்கக் கூடாது...' என்றெல்லாம் என்னென்ன குறைகள் அதனிடம் உண்டோ, அவைகளை நீக்கிக் கொள்ளும்படி, மெதுவான குரலில் அதன் காதில் சொல்லி, ஓசைப்படாமல் வந்துவிட வேண்டுமாம். குழந்தையை எழுப்பி விடாமல் அப்படி சொன்னால், அதன் உள்மனதில் பதியுமாம், நம் உபதேசம். நாளா வட்டத்தில் குழந்தை திருந்தி விடுமாம்...'

குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்!

தன்னை ப் போன்றே, தன் குழந்தைகளும் இருக்க வேண்டும் என, எதிர்பார்க்கக் கூடாது என்று கூறும், முனைவர் ஒய்.சிம்சன்: நான், சிறப்புக்கல்வி ஆலோசகராக, வேலூரில் பணியாற்றுகிறேன். இன்றைய காலத்தில் கணவன், மனைவி இருவருமே நன்கு படித்து, அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்கின்றனர். அவர்களை போன்றே, குழந்தைகளும் நன்கு படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், சிறந்த பள்ளிக் கூடத்தில் சேர்த்து, படிக்க வைக்கின்றனர்.
குழந்தையின் படிப்பில் சிறிய குறை இருந்தாலும், என்ன பிரச்னை என, ஆசிரியரிடம் கேட்காமல், ஒவ்வொரு பாடத்திற்கும், ஒரு டியூஷன் வைக்கின்றனர். எனினும், 80 சதவீதத்திற்கும் மேல், மதிப்பெண்கள் வாங்க முடியவில்லை. இதற்கு காரணம், பெற்றோரிடம் உள்ள திறமைகளை போன்றே, அவர்களின் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என, எதிர்பார்ப்பதே.
பெற்றோரின் எதிர்பார்ப்பில் நியாயம் இருந்தாலும், இது முற்றிலும் தவறு. இதனால், குழந்தைக்கு படிப்பின் மீதான வெறுப்பு ஏற்பட்டு, தற்போதுள்ள தேர்ச்சி விகிதம் கூட, குறையும் நிலை ஏற்படலாம். பெற்றோரின் திறமைகள், குழந்தைக்கும் தொடர வேண்டும் என, எந்த அவசியமும் இல்லை. ஏனெனில், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், தனித்துவம் உண்டு.
"வசதியான குடும்பத்தை சேர்ந்த நான், ஏன் படிக்க வேண்டும்' என்ற மிதப்பான போக்கும், சில குழந்தைகளிடம் இருக்கிறது. அவர்களிடம், "படிப்பு என்பது வெறும் வேலை செய்து சம்பாதிப்பதல்ல; வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி, சாதனை படைக்க உதவுவதே கல்வி' என்பதை, புரிய வைக்க வேண்டும்.
குழந்தைகளின் திறன் அறிந்து, அதற்கு ஏற்ப ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, எடுத்ததுமே, 100 சதவீத வெற்றியை பெற வற்புறுத்த கூடாது. மேலும், பள்ளி சூழ்நிலையை, மகிழ்ச்சியாகவும், ஆர்வமுள்ளதாகவும் மாற்றினாலே, படிப்பின் மீதான ஆர்வம் ஏற்படும். குழந்தைகளை கண்டிப்பதற்கு பதில், அவர்களின் உற்சாகம் மற்றும் ஈடுபாடு குறைவுக்கான காரணத்தை கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து ஊக்குவித்தாலே, படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

வெயிலுக்கு பவுடர் போடலாமா?

பிறந்த குழந்தைகளை, பராமரிக்கும் முறையை கூறும் குழந்தைகள் நல மருத்துவர், ரமா சந்திரமோகன்: நான், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மருத்துவராக பணியாற்றுகிறேன். குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு, பால் சுரக்கும் தன்மை, முதல் வாரத்தில் குறைவாக இருக்கும். பிறந்த குழந்தையின் உடலில் உள்ள நீர் வற்றினால் தான், சத்தான தாய்ப்பால் உடலில் சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும்.ஆனால், எடை அதிகமாக பிறந்த குழந்தைக்கு, அதன் தாயிடமிருந்து தேவையான தாய்ப்பால் கிடைப்பது மிக கடினம். இதனால் அக்குழந்தைக்கு, "டீஹைட்ரேஷன்' ஏற்படுவதோடு மட்டுமில்லாமல், உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, வலிப்பு வருவதற்கான வாய்ப்பும் உண்டு.



கோடைக் காலம் என்பதால் பலரது வீடுகளிலும், குழந்தையை தண்ணீரால் குளிக்க வைத்த பின், பவுடராலும் குளிப்பாட்டும் பழக்கம் உள்ளது. குறிப்பாக குழந்தையின் அக்குள் பகுதி, கழுத்துப் பகுதி, தொடையின் இடுக்குகள் என, பவுடரை அதிக அளவில் கொட்டி தேய்த்து விடுவர். உண்மையில், குழந்தைகளுக்கு பவுடர் தேவையில்லை.

பவுடரால், தீமையை தவிர, வேறு எதுவும் கிடைக்க போவதில்லை. குறிப்பாக, அடர் தன்மை கொண்ட பேபி பவுடர்கள், குழந்தைகளின் உடலில் இருக்கும் நுண்ணிய துவாரங்களை அடைத்து, கொப்புளம் மற்றும் இன்பெக்ஷன் எனும் தொற்றுகளை ஏற்படுத்தி விடும். எனவே, குழந்தைகளை குளிப்பாட்டிய பின், துண்டால் நன்றாக துடைத்து, சுத்தமான மற்றும் காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவித்தாலே போதும். குழந்தைக்கு கோடை வெயிலின் காரணமாக அதிகம் வியர்த்தால், விசிறியைக் கொண்டே விசிறி விடலாம்.

பொதுவாக, பிறந்த குழந்தைகளுக்கு தலை முதல் கால் வரை, வெப்பநிலை சீராக இருக்க வேண்டும். உடல் சூடாகவும், கால் பகுதி குளிர்ச்சியாகவும் இருந்தால், குழந்தைக்கு தொற்று அல்லது நோய் பாதித்துள்ளது என, அர்த்தம். எனவே, குழந்தையின் உடலைத் தொட்டு பார்த்து பழகிக் கொள்ள, அம்மாக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

Tuesday, June 25, 2013

சைக்கிளில்ஆற்றைகடக்கலாம்!

ஆற்றைக் கடந்து செல்ல, மிதக்கும் சைக்கிளை கண்டுபிடித்துள்ள கல்லூரி மாணவன், சூர்யா: நான், வேதாரண்யம் மாவட்டத்தின், செம்போடையில் உள்ள, ஆர்.வீ., பாலிடெக்னிக் கல்லூரியில், இயந்திரவியல் இறுதிஆண்டு படிக்கிறேன். ஆற்றங்கரையில் அமைந்துள்ள, பல தமிழக கிராமங்களில், ஆற்றைக் கடந்து செல்ல போதுமான வசதிகள் இன்றி, பல கி.மீ., தூரம், சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக் காலங்களில், இவர்கள் படும் துன்பங்களை விவரிக்க முடியாது. ஆற்றில், நீரோட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கடக்க முயன்று, அடித்துச் செல்லப்பட்டவர்களும் அதிகம். இப்பிரச்னைக்குத் தீர்வு காண, நான் கண்டுபிடித்ததே, இந்த மிதவை சைக்கிள். லாரியின், "டயர் டியூபை' அரை வட்ட வடிவில் இரண்டாகப் பிரித்து, அதில் காற்று நிரப்பி, சைக்கிளின் முன் டயரில் ஒன்றும், பின் டயரில் ஒன்றுமாக இணைத்தேன். இரும்பு தகடுகளால் செய்யப்பட்ட, சிறப்பு விசிறியை, இரு புறத்திலும் இணைத்தேன். காற்று நிரப்பப்பட்ட டியூபால், சைக்கிளுக்கு மிதக்கும் தன்மை கிடைக்கும். பெடலை அழுத்தும் போது, பின் சக்கரம் சுற்ற, விசிறியும் சேர்ந்தே சுற்றப்பட்டு, முன்னோக்கி செல்கிறது. மற்ற சைக்கிள்கள் போல் இல்லாமல் சக்கரங்களில், "புஷ் பேரிங்' பொருத்தப்பட்டு உள்ள தால், பெடலை மெதுவாக அழுத்தினாலே மணிக்கு, 15 முதல், 20 கி.மீ., வேகத்தில், தண்ணீரில் செல்ல முடியும். இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே, உள்ளூர் சந்தைகளில் எளிதில் கிடைக்கக் கூடிய, குறைந்த விலை பொருட்களே. சாலையில் ஓட்டும் சைக்கிளை, மிதக்கும் முறைக்கு மாற்ற, 1,500 ரூபாய் செலவாகிறது. மிதக்கும் அமைப்பை எளிதில் மாற்றி, "டூ இன் ஒன்' போன்று, சாதாரண சைக்கிளாகவும் பயன்படுத்தலாம். சிறு மீனவர்களால், படகு வாங்க முடியாது. எனவே, ஏரி, குளம், ஆறு போன்றவற்றில், மீன் பிடிப்பதற்கு, மிதவை சைக்கிளை படகாகப் பயன்படுத்தலாம். சைக்கிளில் இணைக்கப்படும் மொத்த எடை, 7.5 கிலோ என்பதால், சைக்கிள் தண்ணீரில் மூழ்கிவிடும், என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடர்புக்கு: 96888 80213.

குழந்தைகளுக்கான முதலுதவி!

விபத்தின் போது, குழந்தைகளுக்கான முதலுதவி செய்யும் முறையை கூறும், மருத்துவர், தியாகராஜன்: நான், தஞ்சாவூரை சேர்ந்த, மனநல மருத்துவர். குழந்தைகள் கையில், எந்த சிறிய பொருளும் கிடைக்காதவாறு, கவனமாக இருந்தாலும், அதையும் மீறி, பட்டன், மாத்திரை, பல்பம் போன்ற சிறிய பொருட்களை, குழந்தைகள் விளையாட்டாக வாயில் போட்டு மெல்லுவர். அப்பொருட்கள் தவறுதலாக, மூச்சுக் குழல், உணவுக் குழல், தொண்டைக் குழி

போன்றவற்றில் சிக்குவதால், குழந்தைகள் விழி பிதுங்கி, மூச்சுவிட சிரமப்பட்டு, அழுதபடி, வினோத சத்தத்துடன் இருமி, தும்மி, அதை, வெளிக் கொணர முயற்சிப்பர். அப்போது, குழந்தையை மடியில் குப்புற போட்டு, தலையை சற்று கீழாக வைத்து, முதுகில் ஓங்கி தட்டினால், தொண்டையில் சிக்கிய பொருள், மிக சுலபமாக வெளிவரும். ஆனால், பெற்றோர், "குய்யோ முறையோ' எனக் கத்தி, முதலுதவி செய்யாமல், மருத்துவரிடம் வருவதற்குள், மரணம் கூட ஏற்படலாம். எனவே, முதலுதவியில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட பாத்திரங்களில், குழந்தைகளின் கை, கால்கள் பட்டு, அந்த இடமே வெந்து புண்ணாகும். அப்போது பெற்றோர், சற்றும் தயங்காமல் குழாயை திறந்து, அதிக நேரம் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். காயத்தில் தண்ணீர் பட்டால், சீழ் பிடிக்கும் என்பது தவறான கருத்து. சுத்தமான கையால், காயத்தின் மீது தோசை மாவை தடவிய பின், மருத்துவரிடம் அழைத்து செல்லலாம். குழந்தைகள், மூக்கில் ஏதாவது பொருட்களை போட்டால், மூக்கு பொடி மாதிரியான பொருட்களை, மூக்கில்போட்டு தும்ம வைக்கும் போது, அப்பொருட்கள் வெளியேறினால் நல்லது. இல்லையேல், மூச்சு குழலில் மாட்டி உயிருக்கே ஆபத்து நேரிடும்.

குழந்தைகளின் காதுகளில், பூச்சி அல்லது ஏதேனும் போய் விட்டால், முதலில் தண்ணீர் ஊற்றுவது தவறு. தேங்காய் எண்ணெய் போன்றவை ஊற்றினால், பூச்சிகள் மிதந்து வெளியேறும். குச்சி போன்ற பொருட்கள் இருந்தால், உடனே மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது.

Saturday, June 22, 2013

நட்சத்திரங்களுக்குரிய பரிகாரங்கள்

 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

நீங்கள் பிறந்த நட்சத்திர, ராசி யைப் பொருத்து, வாழ்வில் ஒரு முறையாவது கீழே குறிப்பிடப்பட்டுள  கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும். நீங்கள் திரும்ப திரும்ப இந்த ஆலயங்கள் சென்று வர, நீண்ட நாள் தீராத பிரச்சினைகள், வியாதிகள், திருமணத்தடை, குழந்தை பேறின்மை, குடும்ப ஒற்றுமை மற்றும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்வில் மன நிம்மதியும், மலர்ச்சியும் ஏற்படுவது உறுதி. இவை அனைத்தும் நட்சத்திரங்களுக்குரிய பரிகார ஸ்தலங்களாகும்.  ஆத்ம சுத்தியுடன் , பய பக்தியுடன் சென்று வழிபட்டு வாருங்கள். மங்களம் உண்டாகட்டும். !!!


மேஷ ராசி :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்


ரிஷப ராசி :
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்

மிதுன ராசி :
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்

கடக ராசி :
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர் (தேனி )
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் ,திருபரங்குன்றம்

சிம்ம ராசி :
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்

கன்னி ராசி :
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை


துலாம் ராசி :
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்


விருச்சிக ராசி  :
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி

தனுசு ராசி :
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

மகர ராசி :
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்

கும்ப ராசி :
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

மீன ராசி :
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்

(OR) 


அஸ்வினி - 
                 அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

பரணி - 
             அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்  இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.

கார்த்திகை - 
     அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

ரோஹிணி - 
               அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

மிருக சீரிஷம் - 
               அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்  இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

திருவாதிரை - 
                 அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்  இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

புனர் பூசம் - 
                   அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

பூசம் - 
                அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

ஆயில்யம் - 
            அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

மகம் - 
            அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

பூரம் - 
               அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

உத்திரம் - 
             அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

ஹஸ்தம் - 
              அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்  இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

சித்திரை - 
       அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

சுவாதி - 
         அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

விசாகம் - 
               அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

அனுஷம் - 
          அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

கேட்டை - 
             அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மூலம் - 
       அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

பூராடம் - 
           அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

உத்திராடம் - 
       அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

திருவோணம் - 
       பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்

அவிட்டம் - 
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

சதயம் - 
    அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

பூரட்டாதி - 
   அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

உத்திரட்டாதி - 
    அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

ரேவதி - 
         அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.
 
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆலயம் சிறந்ததாக கூறப்படுகிறது.


1.மேஷ ராசி காரர்கள் ----ராமேஸ்வரம் ,பழனி கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
2.ரிஷப ராசி காரர்கள் ----திருபதி ,திருபரம்குன்றம் , கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
3.மிதுனம் ராசி காரர்கள் ----பழனி ,கோடி ஹத்தி பெருமாள் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
4.கடகம் ராசி காரர்கள்--ராமேஸ்வரம்,திருதேவன்குடி கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
5.சிம்மம் ராசி காரர்கள்--ஸ்ரீ வாஞ்சியம் ,பருதியப்பர் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
6.கன்னி ராசி காரர்கள்--திருகழுகுன்றம் ,திருகண்ணன் மங்கை கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
7.துலாம் ராசி காரர்கள்---திருத்தணி ,நரசிங்கம் பேட்டை , கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
8.விருச்சகம் ராசி காரர்கள்---காஞ்சிபுரம் ,ஓமந்தூர்,மதுரை கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
9.தனுஷு ராசி காரர்கள்--மாயவரம் ,திருவெண்காடு கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
10.மகரம் ராசி காரர்கள்---சிதம்பரம் ,அனந்த மங்களம் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
11.கும்பம் ராசி காரர்கள்---தேவிபட்டினம் ,கும்பகோணம்( கும்பேஈஸ்வரர் ) ,திருகோஷ்டியூர் கோவில் வழிபாடு செய்ய மேன்மை உண்டு .
12.மீனம் ராசி காரர்கள்---வைதீஸ்வர சுவாமி ,திருவையாறு ,மச்சமுனி தீர்த்தம் (திருபரம்குன்றம் ),திருவலஞ்சுழி



நட்சத்திரத்துக்குரிய பைரவ தலங்கள்


1.அஸ்வினி:-
ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர்
கோவில், இங்கு பைவருக்கு நாய்
வாகனம் இல்லை.

2.பரணி:-
 ஸ்ரீமகா பைரவர்-
திருப்பத்தூர் அருகில் உள்ள
பெரிச்சி கோவில்.
 
3.கார்த்திகை:- ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.
 
4.ரோகிணி:- ஸ்ரீகால பைரவர்-
பிரம்ம கிரக்கண்டீஸ்வரர்
கோவில்-கண்டியூர், தஞ்சாவூர்.
 
5.மிருகசீரிஷம்:- ஸ்ரீ சேத்திரபால பைரவர்-
சேத்திரபாலபுரம் (குத்தாலம்
அருகில்)
 
6.திருவாதிரை:- ஸ்ரீவடுக
பைரவர்-ஆண்டாள் கோவில்
(பாண்டிச்சேரி-விழுப்புரம்
பாதையில் 18 கி.மீ.)
 
7.புனர்பூசம்:- ஸ்ரீவிஜய
பைரவர்-பழனி சாதுசுவாமி கள்
மடாலயம்.
 
8.பூசம்:- ஸ்ரீ ஆவின் பைரவர்-
(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர்
கோவில்.
 
9.ஆயில்யம்:- ஸ்ரீ பாதாள
பைரவர்-காளஹஸ்தி.
 
10.மகம்:- ஸ்ரீநர்த்தன பைரவர்-
வேலூர் கோட்டை யின்
ஒரு பகுதியில் உள்ள
ஜலகண்டேஸ்வரர் கோவில்.
 
11.பூரம்:- ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-
தேனு புரீசுவரர்கோவில்.
 
12.உத்திரம்:- ஸ்ரீ ஜடாமண்டல
பைரவர்-சேரன்மகா தேவி அம்மைநாதர்
கைலாசநாதர் கோவில்.
 
13.அஸ்தம்:- ஸ்ரீ யோக பைரவர்-
திருப்பத்தூர் திருத்தளிநாதர்
கோவில்.
 
14.சித்திரை:- ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி-
மல்லி கார்ச்சுன -
காமாட்சி கோவில் கோட்டை சிவன்
கோவில் என்றும் தகடூர்
காமாட்சி கோவில் என்றும்
இக்கோவிலை அழைக்கிறார்கள்.
 
15.சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்-
புதுக்கோட்டை அருகே உள்ள
பொற்பனைக்
கோட்டை தற்போது திருவரங்குளம்
என்று அழைக்கப்படுகிறது.
 
16.விசாகம்:- ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.
 
17.அனுஷம்:- ஸ்ரீ சொர்ண
பைரவர்- கும்பகோணம்
அருகே உள்ள ஆபத்சகாய
ஈஸ்வரர் கோவில்.
 
18.கேட்டை:- ஸ்ரீகதாயுத
பைரவர்- சூரக்குடி- சொக்கநாதர்
கோவில்.
 
19.மூலம்:- ஸ்ரீ சட்டநாதர்
பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர்
கோவில்.
 
20.பூராடம்:- ஸ்ரீகால பைரவர்-
அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.
 
21.உத்திராடம்:- ஸ்ரீவடுகநாதர்
பைரவர்-கரூர்-
கல்யாணபசுபதி ஈஸ்வரர்
கோவில்.
 

 22.திருவோணம்:-
திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட
பைரவர்-வைரவன்பட்டி-
வளரொளி நாதர் கோவில்.
 
23.அவிட்டம்: -
சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில்
அஷ்ட பைரவர் சந்நிதி.
 
24.சதயம்:- ஸ்ரீசர்ப்ப பைரவர்-
சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன்
கோவில் தலம்.
 
25.பூரட்டாதி:-
கோட்டை பைரவர்-
ஈரோடு அருகே கொக்கரையான்
பேட்டை கிராமத்தில் உள்ள
பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில்.
 
26.உத்திரட்டாதி:-
 ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-
சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர்
கோவில் கும்ப கோணம்,
பந்தநல்லூர் பாதையில் உள்ளது.
 
27.ரேவதி:- ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்-
தாத்தையங்கார் பேட்டை,
காசி விசுவநாதர் கோவில்.
12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்
சித்திரை- மது:

சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே

வைகாசி- மாதவர்:

கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே

ஆனி- சுக்ரர்:

த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே

ஆடி- சுசி:

த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்

ஆவணி - நபோ:

சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே

புரட்டாசி- நபஸ்யர்:

பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!

ஐப்பசி- கிஷர்:

ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே

கார்த்திகை - ஊர்ஜர்:

த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே

மார்கழி - ஸஹர்: 
வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா 
வலிசேவீதம் நமாமி சிரஸா நித்யம் 
சகாக்யம் மாஸ மன்வஹம்

தை- ஸஹஸ்யர்:

ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்

மாசி - தபோ:

சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ

பங்குனி - தபஸ்யர்:

தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.

இப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்டசாலி
என்று வருந்துபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த பிரயோக
ராசி மந்திர ரகசியக் கூறுகளைப் பயன்படுத்தி வெற்றி காணலாம்.
 

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:

அசுவினி சுகந்த தைலம்
பரணி மாவுப்பொடி
கார்த்திகை நெல்லிப்பொடி
ரோகிணி மஞ்சள்பொடி
மிருகசீரிடம் திரவியப்பொடி
திருவாதிரை பஞ்சகவ்யம்
புனர்பூசம் பஞ்சாமிர்தம்
பூசம் பலாமிர்தம் (மா, பலா, வாழை)
ஆயில்யம் பால்
மகம் தயிர்
பூரம் நெய்
உத்திரம் சர்க்கரை
அஸ்தம் தேன்
சித்திரை கரும்புச்சாறு
சுவாதி பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
விசாகம் இளநீர்
அனுஷம் அன்னம்
கேட்டை விபூதி
மூலம் சந்தனம்
பூராடம் வில்வம்
உத்திராடம் தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
திருவோணம் கொம்பு தீர்த்தம்
அவிட்டம் சங்காபிஷேகம்
சதயம் பன்னீர்
பூரட்டாதி சொர்ணாபிஷேகம்
உத்திரட்டாதி வெள்ளி
ரேவதி ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).
  
பிறந்த நட்சத்திரமும் வணங்க வேண்டிய கிரகங்கள்!

அஸ்வினி கேது
பரணி சுக்கிரன்
கார்த்திகை சூரியன்
ரோகிணி சந்திரன்
மிருகசீரிஷம் செவ்வாய்
திருவாதிரை ராகு
புனர்பூசம் குரு (வியாழன்)
பூசம் சனி
ஆயில்யம் புதன்
மகம் கேது
பூரம் சுக்கிரன்
உத்திரம் சூரியன்
அஸ்தம் சந்திரன்
சித்திரை செவ்வாய்
சுவாதி ராகு
விசாகம் குரு (வியாழன்)
அனுஷம் சனி
கேட்டை புதன்
மூலம் கேது
பூராடம் சுக்கிரன்
உத்திராடம் சூரியன்
திருவோணம் சந்திரன்
அவிட்டம் செவ்வாய்
சதயம் ராகு
பூரட்டாதி குரு (வியாழன்)
உத்திரட்டாதி சனி
ரேவதி புதன்.

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் or விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்

நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை,பாவ கதிர்களை கிரகிக்கும் சக்திவிருட்சங்களுக்கு 
உண்டு..உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால்நட்டு ,நீரூற்றி வளர்த்து  
வாருங்கள்.அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம்பெறும். உங்கள்பாவக் கதிர்களை
கிரகித்து, உங்களுக்கு அற்புதமான  ஒரு  ஆன்ம  தொடர்பை இந்த  மரங்கள் செய்யும்.  சிலமரங்களை  வீட்டில்  வளர்க்க முடியாது. உங்கள் கண்படும்  இடங்களில், உங்கள் தோட்டத்திலோ,  சாலை  ஓரங்களிலோ, இல்லைஆன்மிக ஸ்தலங்களில், ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென்மேற்குப்பகுதியில் சூரியக்கதிர்கள்  படும்  இடத்தில்  நட வேண்டும் அந்த மரக்கன்றையும் அவரதுபிறந்த  நட்சத்திரம் உதயமாகும்  நாளில்  நடுவது  மிகநன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டுஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,அம்மரக்கன்று வளர,வளர அதைநட்டவரின் வாழ்க்கை மலரும் அந்த மரக்கன்றை நட்டவரின்  பிறந்த ஜாதகத்தில்  இருக்கும் அனைத்து  தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும். அம்மரக்கன்று  பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும் .கர்ம வினைகளை வெற்றிகொள்ள  ‘விருட்ச சாஸ்திரம் ’இப்படி ஒரு  வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரியவிருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்பார்ப்போம்

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள்.
சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்தமருத்து-வரையோ, ல்லது, கூகுள்லெயோ  தேடிப்பாருங்கள் இல்லையா, அந்தநட்சத்திரத்துக்கு மற்றபாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல 
விருட்சங்கள் உண்டு.அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது, நீங்கள்
அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது. திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்.  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு. உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் .. 


விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள் இவை :
அஸ்வதி – எட்டி
பரணி -- நெல்லி
கார்த்திகை – அத்தி
ரோகிணி ---  நாவல்
மிருகசீரிஷம் --- கருங்காலி
திருவாதிரை - செங்காலி
புனர்பூசம் - மூங்கில்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - புரசு
உத்திரம் - இலந்தை
அஸ்தம் - மகாவில்வம்
சுவாதி - மருதம்
சித்திரை - அகண்ட வில்வம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழம்
கேட்டை - பராய்
மூலம் - மரா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
பூரட்டாதி -- மா
உத்திரட்டாதி – வேம்பு
ரேவதி – இலுப்பை


ஒவ்வொரு மரத்தையும் நட்சத்திர அதிதேவதையுடன் பூஜை செய்தால் வாழ்வில் நலம் பெருகும்.

வருஷாதி விருட்சங்கள்
பிரபவ                      - கருங்காலி மரம்
விபவ                       - அக்ரூட்மரம்
சுக்ல                         - அசோக மரம்
4.ப்ரமோதூத
பிரஜோர்பத்தி       - பேயத்தி மரம்
ஆங்கீரஸ்              - அரசுமரம்
திருமுக                  - அரைநெல்லி
பவ                            - அலயாத்தி
யுவ                           - அழிஞ்சில் மரம்
தாது                          - ஆச்சாமரம்
ஈஸ்வர                   - ஆலமரம்
வெகுதான்ய         - இலந்தை மரம்
பிரமாதி                  - தாளைபனைமரம்
விக்ரம                   - இலுப்பை மரம்
விஷு                     - ருத்திராட்சம்
சித்ரபானு             - எட்டி மரம்
யுவபானு              - ஒதியம்
தாரண                    - கடுக்காய் மரம்
பார்த்திவ               - கருங்காலி மரம்
வியய                     - கருவேலமரம்
சர்வஜித்                - பரம்பை மரம்
சர்வதாரி              - குல்மோகூர்மரம்
விரோதி                - கூந்தல் பனை
விக்ருதி                - சரக்கொன்றை
கர                           - வாகை மரம்
நந்தன                   - செண்பகம்
விஜய                   - சந்தனம்
ஜய                         - சிறுநாகப்பூ
மன்மத                 - தூங்குமூஞசி மரம்
துன்முகி              - நஞ்சுகண்டாமரம்
ஏவிம்பி                - நந்தியாவட்டை
32.விளம்பி 
விகாரி                 - நாவல்
சார்வரி                - நுணாமரம்
பிலவ                   - நெல்லி மரம்
சுபகிருது            - பலா மரம்
சோபாகிருது    - பவழமல்லி மரம்
குரோதி                 - புங்கம் மரம்
விசுவாவக        - புத்திரசீவிமரம்
பராபவ                - புரசுமரம்
பிலவங்க           - புளிய மரம்
கீலக                    - புன்னை மரம்
சவுமிய               - பூவரசு மரம்   
சாதாரண           - மகிழமரம்
விரோதிகிருத -  டம்பை
பரீதாபி               - மராமரம்
பிரமாதீச            - மருதமரம்
ஆனந்த              - மலைவேம்பு
ராட்சஸ            - மாமரம்
நள                       - முசுக்கொட்டை மரம்
பிங்கள              - முந்திரி
காளயுக்தி        - கொழுக்கட்டை மந்தாரை
ஸித்தார்த்தி   - தேவதாரு
ரவுத்ரி               - பனை மரம்
துன்மதி            - ராமன்சீதா
துந்துபி             - மஞ்சள் கொன்றை
ருத்ரோத்காரி- சிம்சுபா
ரக்தாக்ஷி
குரோதன        - சிவப்புமந்தாரை
அட்சய             - வெண்தேக்கு