Sunday, April 12, 2015

காது் மட்டுமல்ல; எல்லா நரம்புகளுமே பலம் பெற

எனது வயது 54. காது நரம்பு சுருங்கி விட்டதால் காது சரிவரக் கேட்கவில்லை. எந்த தெய்வத்திற்கு பரிகாரம் செய்வது என்பதைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முதலில் சரியான மருத்துவரிடம் காண்பியுங்கள். சீக்கிரம் குணமாக வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். கோள்களின் அரசனாகக் கூறப்படும் கதிரவன் நமது நற்செயல்கள், தீய செயல்கள் இரண்டையும் கவனித்துக் கொண்டிருப்பதாக வேதங்கள் கூறுகின்றன.

ஆதலால் இவனை ‘கர்மஸாக்ஷி’ என ஆதித்ய ஹ்ருதயம் கூறுகின்றது. சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு தவிர மற்ற கோள்களோடு தான் இணையும்போது யோகமான பலன்களைக் கொடுப்பவன் சூரியன்.

சென்னைக்கு அருகாமையிலுள்ள செங்குன்றத்தில் சூரியனுக்கு ஆலயம் உள்ளது. கோதுமை தானியத்தை தாமிர சொம்பில் நிரப்பி, சிவப்பு தாமரை வைத்து, சிவப்பு துணியில் கட்டி, இரவு படுக்கும்போது தலையணைக்குக் கீழ் வைத்து உறங்குங்கள்.

காலையில் உடலை தூய்மை செய்துகொண்டு சிவப்புத் துணி மூட்டையை மேலே சொன்ன தலத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். அர்ச்சகரிடம் கொடுத்து விக்ரகத்தின் பக்கத்தில் வைக்கச் சொல்லிவிட்டு, கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து கீழ்க்காணும் இந்த ஸ்லோகத்தை 56 தடவை சொல்லுங்கள்.

காதுப் பகுதியில் மட்டுமல்ல; உங்கள் உடலிலுள்ள எல்லா நரம்புகளுமே பலம் பெறும்.

பூஹா, தோஷாய மே பூயாத்
ஸர்வ பாபா பனோதக:
ஸஹஸ்ர கரஸம்வீத:
கர்ண ரோகம் ப்ரணச்யது!
பூஷ்ணே நம:
பூஷ்ணே நம:
பூஷ்ணே நம:                                                                     
http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=88

No comments:

Post a Comment