Wednesday, November 12, 2014

விரும்பியவருடன் விரைவில் திருமணம் நடக்க மந்திரம், அரசு வேலை கிடைக்க

குத்து விளக்கு ஏற்றி குங்குமம், பூ வைத்து, கோலம் போட்ட பலகையில் வைத்து,

'ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாமாயே மகாயோகின்யை ஈஸ்வரி! நந்தகோப
ஸீதம் தேவி பதிம்தே குருவே நமஹ'

என்று சொல்லிக் கொண்டே 12 முறை பிரதட்சணம் செய்தால், விரும்பிய வரன் தானாகவே அமைந்து விரைவில் திருமணம் நடக்கும். இதை தினமும் செய்தாலும் நல்லது. முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டும்கூட செய்யலாம். முடிந்தால் நைவேத்தியமும் செய்யலாம்.

அரசு வேலை கிடைக்க சூரியமந்திரம்...

ஓம் ஹ்ரௌம் ஸ்ரீம் ஆம் ஆதித்யாய ஸ்வாஹா

இதை ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அமைந்த சூரிய ஹோரையில் சிவபெருமானின் கோவிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

பின்பு தினமும் அதே நேரத்தில் நமது வீட்டிலிருந்தபடியே, சூரிய தரிசனம் செய்துவிட்டு, 24 அல்லது 48 என்ற எண்ணிக்கையில் ஜபத்தை கிழக்கு முகமாக அமர்ந்து செய்துவர வேண்டும். 108 நாட்கள் செய்து வர வேண்டும். அந்த 108 நாட்களும் அசைவ உணவையும், கருப்பு நிற ஆடைகள் அணிவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment