Sunday, September 8, 2013

700 ரூபாய் இருந்தால் தனி­யாக உணவ­கம் தயார்

சென்­னையில் வெறும் 700 ரூபாய் முத­லீட்­டுடன், பெண்­களை சிறிய தொழில் முனை­வோ­ராக மாற்றி வரு­கி­றது ‘கதிர்’ சாலை­யோர உண­வ­கங்கள். மருத்­துவ துறை ஆராய்ச்­சியில் ஈடு­பட்டு வரும் ஒரு தொண்டு நிறு­வனம், பெண்­களின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திற்­காக ‘எக்கோ கிச்சன்’ எனும் திட்­டத்தில், ‘கதிர்’ என்ற வர்த்­தக பெய­ருடன் மொத்­த­மாக உணவை சமைத்து, அதை பொரு­ளா­தார ரீதி­யாக பின்­தங்­கிய பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்­களை சேர்ந்த பெண்­க­ளுக்கு உற்­பத்தி விலை­யி­லேயே தரு­கி­றது. அதை பெண்கள், சாலை­யோர உண­வ­கங்கள் மூல­மாக  விற்­பனை செய்­கின்­றனர்.

அதி­க­பட்சம் 700 ரூபாய் இருந்தால், பெண்கள் இது போன்ற உண­வ­கத்தை அமைத்து கொள்­ளலாம் என்­கிறார் அந்த அமைப்பின் ‘எக்கோ கிச்சன்’ திட்ட மேலாளர் கணேஷ்.இந்த திட்டம் பெண்­களை பொரு­ளா­தார ரீதி­யாக தன்­னி­றைவை உரு­வாக்­கு­வ­துடன், குடும்­பங்­களில் முடி­வெ­டுப்­பதில், பெண்­களின் பங்­கேற்பை அதி­க­ரிப்­பது, குடும்ப வன்­மு­றையை எதிர்­கொள்­வது, குழந்­தைகள் வளர்ப்பு என, மொத்­த­மா­கவே பெண்­களை இந்த திட்டம் மேம்­ப­டுத்­தி­யுள்­ளது என்­கிறார் ‘எக்கோ கிச்சன்’ மேலாளர் சேது­லட்­சுமி.

பொருளாதார சுதந்திரம்இது­கு­றித்து சேது­லட்­சுமி கூறி­ய­தா­வது:எய்ட்ஸ் விழிப்­பு­ணர்­வுக்­காக சென்­னையில் உள்ள பல்­வேறு குடிசை பகு­தி­க­ளுக்கு ஆய்­விற்கு சென்ற போது, பொது சுகா­தாரம் மற்றும் உடல் ஆரோக்­கியம் ஆகி­யவை பெண்­களின் பொரு­ளா­தா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக இருந்­ததை கண்டோம்.பெண்கள் அதிக அளவில் உடல் ரீதி­யான வன்­முறை, வார்த்தை அள­வி­லான வன்­மு­றையை தின­சரி எதிர்­கொள்­கின்­றனர்.

குழந்­தைகள் வளர்ப்பில் போதிய விழிப்­பு­ணர்வு இல்­லாமல் இருந்­தனர். ஆரோக்­கி­ய­மான உடல் நிலை அடைய, ஊட்­டச்­சத்து குறை­பாடு இல்­லாமல் இருக்க வேண்டும். அதற்கு பெண்­க­ளுக்கு பொருளாதார ரீதி­யான சுதந்திரம் அவ­சி­ய­மா­கி­றது. பெண்கள் தின­சரி ஈடு­படும் பணி­களை ஆய்வு செய்தோம். அதில் பெண்கள் உண­வ­கங்கள் அமைத்து அவற்றை விற்­பனை செய்­வது இயல்­பாக இருக்கும் என, நினைத்தோம்.அந்த அடிப்­ப­டையில் உரு­வா­னது தான் ‘எக்கோ கிச்சன்’ எனும் திட்டம். இந்த திட்டம் 2007ல் சிறிய அளவில் செய்து வந்தோம். பின், அதை 
2010ல் விரி­வு­ப­டுத்தி, 3 ஆண்டு­க­ளாக நடத்தி வரு­கிறோம்.இவ்­வாறு சேது­லட்சுமி தெரி­வித்தார்.

மேலும், அவர் கூறு­கையில், கதிர் சைவ உண­வகம் என்­கிற பெயரில் சாலை­யோ­ரங்­களில் உண­வ­கங்கள் அமைக்க தேவை­யான இரும்பு தகட்­டினால் ஆன கடை போன்ற அமைப்பு, அமரும் நாற்­கா­லிகள், உணவை கொண்டு செல்­வ­தற்­கான பாத்­தி­ரங்கள் ஆகி­ய­வற்றை நாங்­களே தருவோம். 

ஒரு சாப்­பாட்­டிற்கு தின­சரி ௧ ரூபாய் வாடகை மட்டும் எங்­க­ளுக்கு அவர்கள் தர வேண்டும். 35 சாப்­பாடு விற்றால், 35 ரூபாய் எங்­க­ளுக்கு வாடகை தர­வேண்டும். அது அந்த பொருள்­களின் மீது அவர்­க­ளுக்கு பொறுப்பு வரு­வ­தற்­காக வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தற்­கான செலவை மட்­டுமே பெண்­க­ளிடம் இருந்து வசூலிக்­கிறோம், என்றார் கணேஷ் கூறு­கையில்,‘‘இந்த திட்­டத்தில் எந்த பகுதி யில் உள்ள பெண்­களும் சேரலாம். உணவை நாங்கள் வழங்க வேண்­டு­ மென்றால், அதற்­கான பணத்தை அவர்கள் ஒரு நாளைக்கு முன்பே வழங்க வேண்டும். உணவை சமைத்து விட்டு வாங்­க­வில்­லை­என்றால் கெட்­டு­விடும். 
அதா­வது குறைந்­த­பட்சம் 35 சாப்­பாடு என்றால், 700 ரூபாய் வரை எங்­க­ளுக்கு அளிக்க வேண்டும். மறு நாள் மதியத்திற்குள் உணவு தயாரிக்கப்­பட்டு, அவர்கள் இருக்கும் இடத்­திற்கே கொண்டு போய் கொடுத்து விடுவோம். பின் நாங்­களே பாத்­தி­ரங்களை வாங்கி கொண்டு வந்து விடுவோம். பெண்கள் அதை விற்­பனை செய்து கொள்ள வேண்டும்,என்றார் இந்த திட்டம் மிக எளி­மை­யாக இருந்­தாலும், சாலை­யோ­ரங்­களில் இந்த உண­வ­கங்கள் நடத்­து­வதில் பல்­வேறு சவால்­களை சந்­திக்க வேண்­டி­யி­ருப்­ப­தாக கூறு­கின்­றனர். குறிப்­பாக மழைக்­கா­லங்­களில், ஒருநாள் உணவு மீத­மாகி நஷ்டம் ஏற்­பட்­டாலும், ஒரு வாரத்­திற்கு அந்த பகு தியில் இருந்து உணவை வாங்க வர­மாட்­டார்கள். அது­மட்­டு­மில்­லாமல், உள்ளூர் அர­சி­யல்­வா­திகள், அதி­கா­ரிகள், கடைக்கு வருவோர் பல­ரையும் சமா­ளிப்­பது ஒரு சவா­லான காரியம் என்­கின்­றனர்.

சமூக மாற்றம்
சேது­லட்­சுமி கூறு­கையில், சென்­னையில் மொத்தம் 63 இடங்­களில், சாலை­யோர கடைகள் உள்­ளன. இ.சி.ஆர்., கிண்டி, ஆழ்­வார்­பேட்டை, மடிப்­பாக்கம் உள்­ளிட்ட இடங்­களில் உள்­ளன. இந்த கடைகள் சாலை­யோ­ரங்­களில் அமைந்­துள்­ளதால், முதலில் உண­வகம் அமைக்க, அந்­தந்த பகுதி மாந­க­ராட்சி மற்றும் காவல் ­நி­லைய அதி­கா­ரி­களை சந்­திப்போம். ‘‘இந்த திட்­டத்­திற்கு இதுநாள் வரை அனை­வரும் உதவி செய்தே வந்­துள்­ளனர். அங்கு வரும் பிரச்­னை­க­ளுக்கு ஏற்ப அரசு அதி­கா­ரி­களின் உத­வியை நாடுவோம். பின், பெண்­களே தனி­யாக அந்த கடையை நடத்தி கொள்ள வேண்டும், என்றார் இந்த திட்டம் வெறும் வேலை­வாய்ப்பு என்­றில்­லாமல், சாதா­ரண குடும்­பத்து பெண்­களை, ஐ.டி., நிறு­வ­னங்­களின் உண­வ­கங்­களில் பணி­யாற்­றவும் வாய்ப்­ப­ளிக்­கி­றது. நாள் ­ஒன்றுக்கு 7,000 சாப்­பாடு தயா­ரிக்­கப்­ப­டு­கின்றன. இதில் 3,000 முதல் 3,500 வரை சாலை­யோர கடை­க­ளுக்கும், மீதம் ஐ.டி., நிறு­வன 
உண­வ­கங்­க­ளுக்கும் வழங்­கப்­ப­டு­கின்­றன. இந்த திட்­டத்­திற்கு மேலும் பல­ரது ஆதரவு கிடைத்தால், இது சமூ­கத்தில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் என்­கிறார் கணேஷ்.இறு­தி­யாக சேது­லட்­சுமி கூறு­கையில், ‘‘இந்த உண­வகம் வெறு­மனே, பெண்­க­ளுக்­கான பொரு­ளா­தார சுதந்­திரம் என்­ப­தையும் தாண்டி, குடும்­பங்­களில் முடி­வு­களை எடுக்கும் இடத்­திற்கு பெண்­களை முன் னேற்றும். குழந்­தைகள் வளர்ப்பு குறித்த விழிப்­பு­ணர் வையும் ஏற்படுத்தும்,’’ என்றார்.ஒரு சாப்­பாட்­டிற்கு தின­சரி ௧ ரூபாய் வாடகை மட்டும் எங்­க­ளுக்கு அவர்கள் தர வேண்டும். 35 சாப்­பாடு விற்றால், 35 ரூபாய் எங்­க­ளுக்கு வாடகை தர­வேண்டும். அது அந்த பொருள்­களின் மீது 
அவர்­க­ளுக்கு பொறுப்பு வரு­வ­தற்­காக வசூ­லிக்­கப்­ப­டு­கிறது


https://www.facebook.com/ecokitchen/notes


ECO-Kitchen, Chennai's Notes

  • In addition to its Kathir entrepreneurship program, the Eco-Kitchen has two other brand names: Kathir Dhan and Out of the Box.

    KATHIR DHAN is the donation program. If you want to do something for the community, but you don’t know how, you can contact Eco kitchen by phone (044-3040 2222) by email (at kathirdhan@ecokitchen.org orcustomercare@ecokitc...
  • The ECO KITCHEN (Enhancing Community Opportunities) is an eco-friendly 18,000-square-foot cooking facility that operates YRG CARE's Kathir program, an initiative to offer nutritious vegetarian meals at affordable prices.

    There is a link between poverty, alcohol consumption and domestic abuse. In patriarchal Indian households, women are often the EeeeEEECO kitchen also provides organic meals?? A MUST TRY!!

No comments:

Post a Comment