Sunday, September 15, 2013

அறிவியல்ஆர்வத்தைஏற்படுத்தினேன்!



வீணான பொருட்களை விளையாட்டு பொருட்களாக மாற்றி, குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும், அரவிந்த் குப்தா:  என் பெற்றோர், படிப்பறிவு அற்றவர்கள். எனவே, வறுமையிலும் என்னை, ஐ.ஐ.டி., வரை படிக்க வைத்தனர். 1970ல் கான்பூர் ஐ.ஐ.டி., யில், "எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்' படித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். மேற்கொண்டு படிக்க, ஓராண்டு விடுமுறை எடுத்து, மத்திய பிரதேச மாநிலம் சென்றேன்.அங்கு, குழந்தைகளுக்கு அறிவியலை கற்றுத் தருவது குறித்த திட்டத்தில் பங்கேற்றேன். கிராம பள்ளிகளில், அறிவியல் சோதனையை செய்து காட்ட, உபகரணங்கள் இருக்காது. எனவே, "வேஸ்ட்' என, பலராலும் தூக்கி எறியப்படும் பழைய செய்தித் தாள், பாட்டில்கள், சைக்கிள் டியூப், மேக்னட், பென்சில், பேட்டரி, தீக்குச்சிகள் மூலம், பல அறிவியல் விளையாட்டு பொருட்களை, குழந்தைகளிடம் நேரடியாக உருவாக்கி காட்டி, அவர்களையும் உருவாக்க செய்தேன்.

இச்செய்முறை சோதனைகள் மூலம், குழந்தைகளிடம் அறிவியலை எளிதாக புரிய வைத்தேன். இப்பணியே, பிற்காலத்தில் முழு நேரமாக மாறி கடந்த, 30 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், செய்து வருகிறேன். குழந்தைகளுக்காக உருவாக்கிய ஒவ்வொரு விளையாட்டிலும், ஒரு அறிவியல் கோட்பாடு இருக்கும்.இதை என், "வெப்சைட்'டிலிருந்து இலவசமாக, "டவுண்லோடு' செய்யலாம். தற்போது புனேயில் உள்ள, "இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோ பிசிக்ஸ்' அமைப்பின், குழந்தைகள் அறிவியல் மையத்தில் பணியாற்றுகிறேன்.கிராமத்து குழந்தைகளிடம், அறிவியலை பிரபலப் படுத்தியதற்காக, 1988ல் தேசிய விருதும்; 2001ல் ஐ.ஐ.டி.,யின் சிறந்த முன்னாள் மாணவர் விருதும்; 2008ல் இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகடமியின், "இந்திரா காந்தி' விருதும் கிடைத்தது. எனினும், பரிசுக்கும், பாராட்டுக்கும் அப்பாற்பட்டு, தொடர்ந்து இச்சேவையில், ஈடுபட்டு வருகிறேன். தொடர்புக்கு:www.aravindguptatoys.com.

No comments:

Post a Comment