Sunday, November 5, 2017

spiritual Q & A


1. கண் புருவம் கூடி இருந்தால் நன்மையா? தீமையா?

✳ கூட்டு புருவம் குடும்பத்திற்கு ஆகாது.

✳ மேலும், இவர்களால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு தோன்றும்.

2. பல்லியை கொன்றால் பரிகாரம் உண்டா?

✳ கொல்லாமை என்பது ஆன்மிகம் காட்டும் நெறி ஆகும்.

✳ பல்லியை கொன்றால் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளை வணங்குவது மாற்றங்களை தரும்.

3. வீட்டின் எந்த திசையில் என்ன மரம் வைக்க வேண்டும்?

✳ வீட்டின் மேற்கு மற்றும் தெற்கு திசையில் உயரமான மரங்களை வைக்க வேண்டும்.

✳ வடமேற்கு திசையில் பவளமல்லி செடியை வைக்கலாம்.

4. கோவிலுக்கு சென்று காலணியை தொலைத்தால் நல்லதா? கெட்டதா?

✳ கோவிலுக்கு சென்று காலணியை தொலைத்தால் நல்லது.

✳ காலணி தொலைந்தது முதல் உங்கள் துன்பம் நீங்கியது என்று அர்த்தம்.

5. கடவுளை எந்த திசையை நோக்கி வணங்க வேண்டும்?

✳ கடவுளை கிழக்கு மற்றும் வடக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.

6. மாலை சுற்றி பிறந்த குழந்தையால் என்ன நடக்கும்?

✳ மாலை சுற்றி பிறந்த குழந்தையால் தாய் மாமனுக்கு ஆகாது.

✳ தாய்மாமன் குழந்தையை முதன்முதலில் நல்லெண்ணெயில் பார்த்த பின்பே நேரடியாக பார்க்க வேண்டும்.

7. திருமணம் தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்கள் மற்றும் பரிகாரங்கள் யாவை?

✳ ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளை வணங்க வேண்டும்.

✳ மேலும், ஜாதக ரீதியாக திருமண பாவகத்திற்கு உரிய கடவுளை வணங்க வேண்டும். !

No comments:

Post a Comment