Friday, November 24, 2017

நகரத்தார் ஊர்களில் ஒன்றான சோழபுரம்

அங்குள்ள அறம் வளர்த்த நாயகி அம்பாள் உடனாய அருள் மொழிநாதப்பெருமான் கோவிலை 

இந்த கோவில் திருப்பனியை ஒக்கூர் திரு.வெள்ளயஞ் செட்டியார் குடும்பத்தாரால் செய்யப்பட்டுள்ளது.

அலருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லையாம். அதன் தொடர்ச்சியாக இந்த அறம் வளர்த்தநாயகி அம்பாளை மனமுருகி பிராத்தனை செய்ததன் பலனாக குழந்தை பிறந்ததாம். அதன் பிறகு இந்த திருப்பனியை செய்து கொடுத்தார்களாம்.

மற்றுமொரு சிறப்பு
பிறந்தது முதல் பேச்சு வரவில்லை என்றாலோ அல்லது ஊமையாக இருந்தாலோ இந்த அம்பாளுக்கு தேன் வாங்கி அபிசேகம் / நிவேதனம் செய்து அந்த தேனை பருகி வந்தால் பேச்சு வந்து விடுமாம். இது உண்மை என்று அந்த கோவிலின் குருக்கள் சொன்னார்கள்.

இந்த கோவில் திருப்பத்தூர் - சிவகங்கை நெடுஞ்சாலையில் ஒக்கூர் அடுத்தாற் போல் உள்ளது.

ஆகவே ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள் பயன்பெருங்கள்.

No comments:

Post a Comment