Sunday, November 5, 2017

உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற அபிஷேகம் இதுதான்..!

நட்சத்திரத்திற்குரிய அபிஷேகமும்..! உயர்வுபெறும் வாழ்க்கையும்..!
அபிஷேகங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் ஆன்மிக நலன்கள் வந்து சேருவதாக நம்பிக்கை உண்டு. நட்சத்திரத்திற்குரிய தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்ய இயலாத பட்சத்தில், தங்களது குலதெய்வங்களுக்கு அதை செய்வதன் மூலம் பலன் பெறலாம்.

அஸ்வினி :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சரஸ்வதி தேவிக்கு அஸ்வினி நட்சத்திரம் வருகின்ற நாளில் சந்தன எண்ணெய் அபிஷேகம் செய்தால் செல்வ வளம் உண்டாகும்.

பரணி :
பரணியில் பிறந்தவர்கள், பரணி நட்சத்திரம் வரும் நாளன்று அதிகாலையில் பச்சரிசி மாவினால் துர்க்கைக்கு அபிஷேகம் செய்வது விசேஷமாகும்.

கார்த்திகை : 
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லிக்காய் பொடியால் அக்னியின் அம்சமாக உள்ள அக்னீஸ்வரருக்கு கார்த்திகை நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்வது நல்லது.

ரோகிணி :
ரோகிணியில் பிறந்தவர்கள் மஞ்சள்பொடியில் ரோகிணி நட்சத்திரத்தன்று பிரம்மாவுக்கு அபிஷேகம் செய்தால் நன்மை உண்டாகும்.

மிருகசீரிஷம் :
மிருகசீரிஷத்தில் பிறந்தவர்கள் வாசனை திரவியங்கள் கலந்த மஞ்சள் பொடியால் சந்திரனுக்கு மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

திருவாதிரை :
திருவாதிரையில் பிறந்தவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரம் வரக்கூடிய நாளன்று சிவலிங்கத்துக்கு பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பானது.

புனர்பு+சம் :
புனர்பு+சத்தில் பிறந்தவர்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீராமருடைய திருமேனிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் சிறப்பு.

பு+சம் :
பு+ச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று பசும்பாலால் குரு பகவானுக்கு அபிஷேகம் செய்யலாம்.

ஆயில்யம் :
ஆயில்யத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளன்று ஆதிசேஷன் அல்லது நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்தால் நன்மை உண்டாகும்.

மகம் :
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பசு நெய் கொண்டு வெள்ளிக்கிழமைகளில் சு+ரிய நாராயணனுக்கு அபிஷேகம் செய்யலாம்.

பு+ரம் :
பு+ர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பு+ரம் வரக்கூடிய நாளன்று வீட்டில் தயாரிக்கப்பட்ட பசும் தயிர் கொண்டு அன்னை பார்வதிக்கு அபிஷேகம் செய்யலாம்.

உத்திரம் :
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீமகாலட்சுமிக்கு, உத்திரம் வரும் நாளன்று தேன் மற்றும் கல்கண்டு கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பாகும்.


No comments:

Post a Comment