Thursday, October 30, 2014

கண் ஓளி வீச slogam for curing eye ailments

திருச்சிற்றம்பலம்

இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு: -

உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றம்இல் புகழாள், உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே


வலக்கண் கோளாறு நீங்குவதற்கு: -

விற்றுக்கொள்வீர்; ஒற்றி அல்லேன்;
விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை;
கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு அடிகேள், என்கண்
கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால்,
வாழ்ந்து போதீரே
 


திருச்சிற்றம்பலம்

16times for 48days 
 for full slogam http://temple.dinamalar.com/Slogandetails.php?id=467

 கண் குறைபாடுகளை சரிசெய்யும் மந்திரம்
 ‘ஓம் பாஸ்கராய நம’ 

– என்ற மந்திரமோ நமது கண் பார்வையில் உள்ள குறைபாடுகளைக் களையக்கூடிய தன்மை பெற்றதாகும். நமது பார்வையை அகமுகமாக அமைத்து வைக்கக் கூடிய மகத்துவம் வாய்ந்ததாகும்.

இரண்டு பட்சங்களிலும் வரக்கூடிய பிரதமை மற்றும் தசமி திதிகளில், இந்த மந்திரத்தை 48 அல்லது 108 முறை சூரிய உதயத்தின்போது உச்சாடனம் செய்துவந்தால் பார்வைக் கோளாறுகள் நீங்குவதற்கு அது மிகவும் உறுதுணையாக அமையும். அல்லது அந்தந்த திதிகளில் வரும் சூரிய ஹோரைகளில் ஜபம் செய்வதும் விசேஷமே

http://www.maalaimalar.com/2014/04/07091135/eye-defects-Adjusting-mantra.html

http://www.tamilkadal.com/home/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

शर्यातिञ्च सुकन्याञ्च च्यवनम् शक्रमश्विनौ
भुक्तमात्रे स्मरेत यस्तु चक्षुस्तस्य न हीयते
சர்யாதிஞ்ச ஸுகன்யாஞ்ச ச்யவனம் சக்ரமஷ்விநௌ
புக்தமாத்ரே ஸ்மரேத் யஸ்து சக்ஷுஸ்தஸ்ய ந ஹீயதே
(சர்யாதி மஹர்ஷி, பதிவ்ரதையான சுகன்யா தேவி, ஆயுர்வேதத்தை எழுதிய சியவன மகரிஷி, தேவேந்த்ரன், அஷ்வினீ தேவர்கள் முதலானவர்களை, யார் உணவு சாப்பிட்டவுடன் நினைத்துக் கொள்கின்றார்களோ, அவர்களின் கண்களுக்கும், கண்பார்வைக்கும் ஒருபோதும் குறைவு ஏற்படாது)
என்னும் இந்த ச்லோகத்தை சொல்லி, தினசரி உணவு சாப்பிட்ட பிறகு, ஜலத்தால் கண்களைத் துடைத்துக் கொண்டால் கண்களின் ஒளி ஒரு போதும் குறையாது, நீண்ட நாட்கள் கண்கள் ஆரோக்யமாக இருக்கும்.
https://groups.google.com/forum/#!topic/sies-1969/3widiGIv__w

No comments:

Post a Comment