Tuesday, October 28, 2014

அருள்மிகு திருநெடுங்களநாதர் திருக்கோயில்

கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வரஹி for marriage by offering turmeric திருச்சி தஞ்சை ரோட்டில் 18 கி.மீ. தூரத்தில் துவாக்குடி என்ற ஊரில் இறங்கி 3 கி.மீ. சென்றால் திருநெடுங்களத்தை அடையலாம். திருச்சியிலிருந்து இந்த ஊருக்கு செல்லும் டவுன்பஸ்களும் உண்டு.

No comments:

Post a Comment