Wednesday, October 29, 2014

ஐஸ்வர்யம் அள்ளித்தரும் வாயு மைந்தன்

திருவாசுதேவப்பெருமாள் திருக்கோயிலில்தான் அனுமன் நித்ய சிரஞ்சீவியாய் வாழும் வரம் பெற்றார் என அறிகிறோம்.  ராமபிரானிடம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்தவர் ஆஞ்சநேய மகாமூர்த்தி. மற்றவர்கள் எல்லாம் ராமபிரான் மூலம் ஸ்ரீமந்நாராயணனிடம் வைகுந்தம் வேண்டி, பிரார்த்தித் தனர். அனுமன் மட்டும் வைகுந்தம் செல்ல மறுத்துவிட்டார். காரணம் பூலோகத்தில் ராம நாம ஜெபம் செய்ய வழி உண்டு. ஸ்ரீவைகுண்டம் சென்றால் நாராயண கோஷம்தானே கேட்கும் என்ற ஒரே கார ணத்துக்காக! என்றும் அழியாத சிரஞ்சீவியாய், ராம நாம கீர்த்தனை சதாகாலமும் செய்து, எங்கெல்லாம் ராம நாம ஜெபம் நடக்கின்றதோ அங்கெல்லாம் தான் எழுந்தருளியிருக்க ராமபிரானிடம் வரம் பெற்றார். அவ்வாறு அவர்

‘சிரஞ்சீவி’ வரம் பெற்றது இத்திருக்கோயிலில்தான்.
-  என்றார் ராமதேவர் எனுஞ் சித்தர். அனுமனின் வீரம், மனோபலம், புத்தி கூர்மையை புலத்திய சித்தர் அற்புதமாய் வர்ணிக்கின்றார்:
ராமபிரானுக்கு இணையான வீரமும், வஜ்ஜிர தேகமும், நவவியாகரண பண்டிதனாயும் விநாயகருக்கு இணையான ஞானமும் ஹயக்ரீவ மூர்த்திக்கு சமமான பேரறிவும் கொண்ட நித்ய  சிரஞ்சீவி என்று அனுமனின் பராக்கிரமத்தை விவரிக்கிறது. அப்படிப்பட்ட ஆஞ்சநேயர், இத்திருக்கோயிலில், பவ்ய ஆஞ்சநேயராக சேவை சாதிக்கின்றார். கை கட்டி, வாய் பொத்தி, பவ்யமாய் கோலங் கொண்டு, சேவை சாதித்து பக்தர் தம் குறையை நீக்கி அவர் மேன்மை கொள்ள உற்ற துணையாய் விளங்குகின்றார் என்றார் உரோமமுனியெனுஞ் சித்தர்:

பவ்ய ஆஞ்சநேயரை வியாழன், சனிக்கிழமைகளில் ஆராதனை செய்தால் மெத்த பலன் கிட்டும் என்று சித்தர் பாடல் மூலம் அறிய லாம். திருமஞ்சனம் செய்தும், பதினொரு முறை பிரதட்சிணம் செய்தும் தொழுதால் எதைக் கேட்டாலும் இல்லை என்னாது தருவார். அழுகிணி சித்தர் பாடல் மூலம் எதிரிகளின் கொட்டத்தை அடக்குபவன் அனுமன் என அறிகிறோம். வாழ்வதற்கு பணம் வேண்டும். நல்ல நட்பு, சுற்றம், ஆரோக்கியம், ஆயுள், வேலை வேண்டும். நல்ல அறிவும் வேண்டும். இவை அனைத்தையும் ஒரு சேர காலதாமதம் இன்றி உடனடியாகத் தருபவனே இந்த பவ்ய ஆஞ்சநேயர் என்பதாம்.

சட்டைமுனி சித்தர். அமாவாசை திதியில் திருமஞ்சனம் ஆரம்பித்து பதினெட்டு அமாவாசை தொடர்ந்து செய்ய குலத்து நீண்ட கால சாபம் விலகும். எந்த முன்னேற்றமும் இல்லையே என்ற ஏக்கம் கொண்டு வாழ்வோ ருக்கு கண்டிப்பாக விமோசனம் சேரும் என்கிறது சித்தர் பாடல். வியாபாரத்தில் சரிவா? நஷ்டமா? குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த குழந்தை குறையோடு உள்ளதா? ஞானம், பக்தி, பலம், வீரம், கீர்த்தி, சேவை, அடக்கம் இத்துணையும் தந்து விமோ சனம் அளிப்பவரே பூமிதேவி-ஸ்ரீதேவி சமேதரான ஸ்ரீவாசுதேவப் பெருமான். மூல நட்சத்திரத்தில் அனுமனை வழிபட்ட பின் இப்பெருமானை வழிபட்டு வர, சித்திக்கும் மேற்சொன்ன மேன்மை யாவுமே.

ஆனி மாதத்தில் திருமஞ்சனம் செய்தல் மெத்தவே சிறப்பு என்கிறது முன்னை பதஞ்சலியார் பாடல். மூல நட்சத்திரத்தில் யாகம் செய்து தொழுவதும் மேன்மை தரும். முடி உதிர்தல், பொடுகு,  முடி நீண்டு வளராமை, அடர்த்தி குறைவு போன்ற கேச பீடைகளிலிருந்து விடுபட ஏதுவாகும். மாசி மாதம் கோடி அர்ச்சனை, லட்சார்ச்சனை செய்வதால், எந்த நோயும் அண்டாது பாதுகாப்பதுடன், கோடி கோடியாய் செல்வத்தைக் குவிக்கும் என்பதில் ஐயமில்லை.

பாம்பாட்டியார். புனர்பூசம் நட்சத்திர நால் முதல் மூல நட்சத்திர நாள் முடிய கோடி அர்ச்சனை பெருமானுக்குச் செய்ய, அதுவும் மாசிமாதம் ஆயின் தேடாத திரவியம் சேரும். பெரும் புதையல் கிடைக்கும். சொந்த வீடும் அமைந்து இன்பம் பற்பல வழிகளில் வந்தடையும் என்கின்றார் பாம்பாட்டிச் சித்தர்.

அகப்பேய் சித்தர். வாசுதேவப்பெருமாளை நம்பிக்கையோடு தொழுவார் தம் மன சஞ்சலம் அகலும். எப்படிப்பட்ட ரோகம் ஆன போதும் அந்த வியாதி அகலும். திருமணத் தடை உடைந்து போகும். வாழுங்காலம் நீளும். தீர்க்காயுசும் சேரும் என்ற உண்மையை உணரலாம். பிரம்மன், ருத்திரன், இந்திரன், விபீடணன், இலக்குவன், பரதன், ஆதி கருடன் ஆகியோர் வந்திருந்து தொழுதேத்திய புண்ணிய பூமி.

எப்படிப்பட்ட கொடிய தோஷங்கள் ஆனாலும் விலக்கும் திவ்ய மூர்த்தி இவ்வாசுதேவப் பெருமான். ஆஞ்சநேயர் ராமனைத் தொழுத தலம்.  ராமனே வாசுதேவப் பெருமாள். மண்ணில் மகி மையுடனும், ஒரு பரிபூரண வாழ்வை வாழ்ந்தோம் என்ற மகிழ்ச்சியுடன் கண்டிப்பாய் சொர்க்கம் செல்ல பிறவாமை பெற நாம் அனைவரும் தொழ வேண்டிய ஒரு புண்ணிய க்ஷேத்திரம் இந்த கடகம்பாடியுறை வாசுதேவப் பெருமாள் என்கின்றார் அகத்தியர் தமது ஜீவ நாடியுள்.

கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி வழியாக பூந்தோட்டம் செல்லும் பேருந்து பாதையில் 25 கி.மீ. தொலைவில் கடகம் பாடி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து செல்பவர்கள் பூந்தோட்டத்திலிருந்து 7 கி.மீ. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். கோயில் தொடர்புக்கு: 04366-273600.

நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்

No comments:

Post a Comment