Saturday, February 7, 2015

ஆசமனம் - நீர்க் குற்றங்களை நீக்கும் தன்மை

தண்ணீரே பிரசாதம்

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

சிறப்பாக நீர்க் குற்றங்களை நீக்கும் தன்மையை உடையது ஆசமனம் என்றாலும், பொதுவாக அனைத்து விதமான பூத தோஷங்களையும் நீக்கும் சிறப்பைப் பெற்றதே ஆசமனமாகும். ஒரு சுத்தமான தாமிரம், வெள்ளி அல்லது பித்தளை பாத்திரத்தில் தூய்மையான நீரை நிரப்பி அதிலிருந்து சில துளிகளை வலது உள்ளங்கையில் தெளித்து ஏதாவது ஒரு இறை நாமத்தைக் கூறி அருந்துவதே ஆசமனம் இயற்றும் முறையாகும்.

பொதுவாக, அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று மும்முறை பெருமாள் திருநாமத்தைக் கூறி மூன்று முறை நீரை அருந்தி ஆசமனம் செய்வது வழக்கம்.

மலஜலம் கழிக்கும் முன்னும் பின்னும், இறை வழிபாடுகளுக்கு முன்னும் பின்னும், உணவு அருந்துவதற்கு முன்னும் பின்னும் இத்தகைய ஆசமன வழிபாட்டை நிறைவேற்றுவது சிறப்பாகும்.


சிறப்பாக நீர்க் குற்றங்களை நீக்கும் தன்மையை உடையது ஆசமனம் என்றாலும், பொதுவாக அனைத்து விதமான பூத தோஷங்களையும் நீக்கும் சிறப்பைப் பெற்றதே ஆசமனமாகும்.

மல ஜலம் கழிப்பதற்கு ஆசமனம் தேவையா என்ற சந்தேகம் சிலருக்கும் எழலாம். உண்மையில் மல ஜலம் கழித்தல் என்பது ஆன்மீக சாதனையின் மிக முக்கியமான ஓர் அங்கமாகும்.

எல்லா இறை வழிபாடுகளுக்கும் உள்ளது போல மல ஜலம் கழிப்பதற்கும் குறித்த நேரம், திசை, கிரமம், ஆசனம், நாடி, மந்திரம் போன்ற எல்லா அங்கங்களும் உண்டு. அக்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் இந்த அனைத்து அங்கங்களையும் முறையாக நிறைவேற்றியதன் மூலமே அற்புதமான உடல், மன, உள்ள ஆரோக்கியத்தைப் பெற்றிருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒவ்வொரு பூஜையை ஆரம்பிக்கும் முன்னும் (உதய ஆசமனம்), பூஜையை நிறைவேற்றிய பின்னும் (மங்கள ஆசமனம்) ஆசமனம் நிறைவேற்றுவதால் பெறும் பலன்கள் ஏராளம். உதாரணமாக, நீங்கள் இறை வழிபாட்டிற்குப் பயன்படுத்தும் மலர்கள் எங்கிருந்தோ திருடப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த மலர்களால் இறைவனை அர்ச்சிக்கும்போது அந்த மலர்களில் படிந்துள்ள தவறான எண்ணம் உங்கள் பூஜையில் படியும் வாய்ப்புண்டு.

நீங்கள் அந்த மலர்களை பணம் கொடுத்துதான் பெற்றீர்கள் என்பது உண்மையே ஆயினும் எந்தப் பொருளுக்கும் உரிய சரியான விலையை யாராலும் நிர்ணயிக்க முடியாது என்ற காரணத்தால் அந்த மலர்களின் உண்மையான சொந்தக்காரருக்கு அந்த மலர்களுக்கு வரும் பலனில் நிச்சயம் பங்குண்டு.

மேலும், அந்தப் பூஜையில் கிட்டும் பலனில் ஒரு பங்கு அந்த மலர்களைத் திருடியவருக்கும் சென்றடைவதால் ஒரு திருடனுக்கு பூஜா பலனை அளித்த தோஷமும் உங்களை வந்து சேரும்.

எனவே இத்தகைய எதிர்பாராத துன்பங்களைக் களையும் நன்மார்கமே ஆசமனம் என்னும் எளிய பூஜையாகும். 

 
நமது மணிக்கட்டில் கங்கண ரேகைகள் எனப்படும் ரேகைகள் உண்டு. கங்கண ரேகைகளில் மொத்தம் 3000 கங்கண தேவதைகள் உறைகின்றன. நமது மூதாதையர்களுக்கு உணவாக தர்ப்பண தீர்த்தத்தை அளிப்பது போல இந்த கங்கண தேவதைகளுக்கு நாம் அளிக்கும் அர்க்ய தீர்த்தமே ஆசமன தீர்த்தம் எனப்படும் ஆசமணீயம் ஆகும். ஆசமணீயத்தைப் பெற்ற கங்கண தேவதைகள் நற்காரியங்களில் உறுதிப்பாட்டை வழங்குவதுடன் நாம் கையாளும் பொருட்களில் உள்ள பூத தோஷங்களையும், காரியங்களில் ஏற்படும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும்.

உதய ஆசமனத்தை கிழக்கு திக்கை நோக்கி சுதீக்ஷண மகரிஷியை தியானித்தும், மங்கள ஆசமனத்தை வடக்கு திக்கை நோக்கி சுத்தோதக மகரிஷியை தியானித்தும் நிறைவேற்றுவது சிறப்பு.

முடிந்த மட்டும் பெண்களும் ஆண்களும் காளி ஆசனத்தில் அமர்ந்து ஆசமனத்தை நிறைவேற்றுவதே சிறப்பாகும். தொடர்ந்து ஆசமன பூஜையை நிறைவேற்றுபவர்களை இதய நோய்களும், நீரிழிவு, தோல் நோய்கள் போன்றவைகளும் நெருங்காது. மேலும் ஒவ்வொரு முறை உணவு சமையல் செய்யும் முன்னும் சமையல் முடிந்த பின்னும் வலது கை மோதிர விரலில் தர்பையை அணிந்து ஆசமனம் செய்யுவும்.
சாதாரணமாக அமரும் கோலத்திற்குப் பதிலாக குத்துக் காலிட்டு அமர்ந்து ஆசமனமும் அதே ஆசனத்தில் மாவாட்டுவும்.

ஆசமனம் ஒரு துளி நீரை

அச்சுதாய நமஹ,அனந்தாய நமஹ,கோவிந்தாய நமஹ

No comments:

Post a Comment