Thursday, May 8, 2014

நரசிம்ம ஜெயந்தி


வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில்தான் வைகுண்டவாசன் நரசிம்மராக அவதாரம் எடுத்தார். அந்த நாளைத்தான் பக்தர்கள் நரசிம்ம ஜெயந்தியாக வழிபட்டு மகிழ்கின்றனர். அன்றைய தினம் நரசிம்மரைத் தரிசித்து, வழிபட்டால் பகையை வெல்லலாம் என்பது ஐதீகம்.

அகோபில தரிசனம்
நரசிம்ம ஜெயந்தியன்று நரசிம்மர் தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த ஆந்திர மாநிலத்தில் உள்ள அகோபிலத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு. அங்கே நரசிம்மர் வெளிப்பட்ட தூண், உக்கிர ஸ்தம்பம் என்னும் பெயரில் இருக்கிறது. இரணியன் ஆண்ட இடம், பிரகலாதன் கல்வி கற்ற இடம், நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம் ஆகியவை இங்கே இருப்பதால் நரசிம்ம ஜெயந்தியன்று தரிசிக்க உகந்த இடங்களில் ஒன்றாக அகோபிலம் விளங்குகிறது.

No comments:

Post a Comment