Sunday, May 25, 2014

மனிதநேய மருத்துவர் இளையபாரியின் லட்சியம்

இளையபாரி - இவர் மருத்துவர் இல்லை. ஆனால், தமிழகம் முழுவ தும் சுமார் 1500 குடும்பங்கள் இவரை மருத்துவருக்கும் மேலாக போற்றுகிறார்கள். சாலை விபத்து களில் சிக்கிக்கொண்ட ஆயிரக் கணக்கான நபர்களை காப்பாற்றி கரை சேர்த்திருக்கின்றன இளைய பாரியின் காக்கும் கரங்கள்.
மதுரைக்காரரான இளையபாரி யின் தாத்தா சேதுராமச்சந்திரன் சுதந்திரப் போராட்ட தியாகி. வினோ பாபாவேயின் பூமிதான இயக்கத் திற்கு தனது 5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்த முதல் தென்னிந்தியர். அந்தத் தியாக உள்ளம் இளையபாரிக்கும் அப்படியே இருக்கிறது. சிவில் இன்ஜினீயரிங் முடித்த இவர், படிக்கும்போதே காதல் ஜோடி களுக்கு திருமணங்களை செய்து வைத்தவர். இதனால், ஊருக்குள் தேவையற்ற பிரச்சினைகள் வெடித்த தால் 1990-ல் இவரை சென்னைக்கு கிளப்பிவிட்டார்கள் வீட்டார். ஆனாலும், 4 வருடங்கள் கழித்து மீண்டும் மதுரைக்கே திரும்பிவிட்டார்.
’’நான்கு மாநிலங்களுக்கான சர்ஜிகல் உபகரணங்கள் டீலராக நாங்கள் இருந்தோம். அதனால், மருத்துவமனைகளோடும் டாக்டர் களோடும் எனக்கு நெருக்கம் இருந்தது.மதுரையின் பிரபல டாக்டர்கள் எல்லாமே எனக்கு பழக்கம் என்பதால் நான் அழைத்தால் தட்டாமல் சிகிச்சையளிக்க ஓடிவருவார்கள். இப்படி இதுவரை ஆயிரக்கணக்கான நபர்களை காப்பாற்றி இருக்கிறேன். 1987-லிருந்து இதுவரை 153 முறை ரத்த தானமும் செய்திருக்கிறேன்.
எனது நட்பு வட்டத்தில் 275 நேர்மையான டாக்டர்கள் இருக்கி றார்கள். நான் சொன்னால் பைசா காசு வாங்காமல் இவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். எனது உதவியால், வெறும் நூறு ரூபாயில் அறுவைச் சிகிச்சை மூலம் மகப்பேறு பெற்றவர் களும் ரெண்டாயிரம் ரூபாயில் மூட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். இப்படி என்னால் சிகிச்சைக்கு உதவி செய்யப்பட்ட 1500 குடும்பங்கள் இப்போது என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’’ என்கிறார் இளையபாரி.

தன்னுடைய உடலை மாத்திர மின்றி தனது முயற்சியில் 15 பேரை உடல் தான ஒப்பந்தம் போடவைத்திருக்கிறார் இளையபாரி. சிறுநீரகம் பாதித்து டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இலவச இஞ்சி ஒத்தட சிகிச்சை கொடுத்து குணப்படுத்திவரும் பாரி, தமிழகத்தில் பல்வேறு ஆதர வற்றோர் இல்லங்களில் உள்ள 362 குழந்தைகளுக்கு காப்பாளராகவும் இருக்கிறார்.
’’தனித் தனியாய் இருக்கும் இந்தக் குழந்தைகளை எல்லாம் ஒரே கூட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ வைக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கித்தான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறேன்’’ என்று கூறி தனது மேன்மையான சேவைகளால் மெய்சிலிர்க்க வைக்கிறார் இளைய பாரி (தொடர்புக்கு 9360009019).

No comments:

Post a Comment