Thursday, May 8, 2014

தானம்

ஒரு எளியவருக்கு தானம் அளிக்கும் போது நாம் மனதில் சற்றும் அகந்தையில்லாமல் அவரை பணிவுடன் வணங்கிப் பரிவுடனும் தாழ்மையுடன் பிட்சை வழங்க வேண்டும்.. ஒரு நற்செயல் செய்யும் வாய்ப்பை நமக்கு நல்கிய அந்த நல்லவருக்கு நாம் கடன் பெற்றிருப்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். 

பிச்சைக்காரர் பார்வையற்றவராக இருக்கிறார்... நான் வணங்குவதும் பணிவதும் அவர் கண்டு உணர வாய்ப்பில்லை.என்னுடைய பணிவான பாவனை எதுவும் அவருக்கு எந்த வித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. அதனால் அது தேவையில்லை என்றான் இந்த பதிலைக்கேட்டு குரு தீவிரமாக அவனைப் பார்த்து விட்டு ஆழ்ந்தக் குரலில் சொன்னார்.

“சீடனே இங்கே நீ இரண்டு விஷயத்தை ஊகிக்கத் தவறிவிட்டாய்.
ஒன்று, அந்தப் பிச்சைக்காரன் நிஜமாக அப்படி இல்லாமல் குருடனைப் போல் வெறுமனே பாவனை செய்து கொண்டிருக்கலாம்!
இரண்டு, அவன் பார்வையற்றவனாக இருந்தாலும் கடமையை ஆற்றுவதில் நீ நேர்மையற்றவனாக இருக்கக் கூடாது. அப்போது அதன் பயனை நீ இழந்து விடுவாய் அல்லவா?”
சீடன் திகைப்பும் வியப்புமாக குருவைப் பார்த்து நின்றான்.
அவர் சொன்ன வரிகளின் அர்த்தங்கள் அவனுக்குள் வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

No comments:

Post a Comment