Saturday, January 6, 2018

day wise spiritual to enhance luck புகழ், செல்வம் மேம்பட.. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவை !

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்ய வேண்டிய செயல்கள் :
ஞாயிற்றுக்கிழமை :


✼ இந்நாளுக்கு உகந்தது வெற்றிலையாகும். ஒருவர் வெற்றிலை போட்டாலோ அல்லது வெளியே செல்லும்போது ஒரு வெற்றிலையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு செல்வதோ மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் அன்று மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக அமையும்.



திங்கட்கிழமை :



✼ வீட்டின் நுழைவாயிலைப் பார்த்தவாறு நீள்வட்ட வடிவில் ஒரு கண்ணாடியை வைத்து, வெளியே செல்லும்போது, அந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு செல்லுதல் நல்லது.



செவ்வாய்கிழமை :



✼ இந்நாள் அனுமனுக்கு உகந்த நாள் என்பதால் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும், காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள். இதனால் அனைத்தும் நன்மையாகவே அமையும்.



புதன்கிழமை :



✼ புதன்கிழமை நல்ல மாற்றங்களை காண உகந்த நாளாகும். அந்நாளில் முக்கியமான வேலையைச் செய்யும் முன், சிறிது புதினா, கொத்தமல்லி போன்றவற்றை சாப்பிட்டு வர மாற்றங்கள் ஏற்படும்.



வியாழக்கிழமை :



✼ நாம் செய்யும் செயல்கள் அனைத்துமே நல்லதாகவே நடக்க, வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், சிறிது சீரகம் அல்லது கடுகை வாயில் போட்டுச் செல்லுங்கள். அதற்காக அதனை மென்று விழுங்க வேண்டும் என்ற அவசியமில்லை.



வெள்ளிக்கிழமை :



✼ எந்த ஒரு முக்கிய பணியில் ஈடுபடும் முன்பும், தயிரை சிறிது சாப்பிடுவதால் வெள்ளிகிழமையன்று நாம் நினைக்கும் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். 



சனிக்கிழமை :



✼ சனிக்கிழமைகளில் ஒரு துண்டு இஞ்சியை நெய்யில் நனைத்து சாப்பிடுவதன் மூலம், அதிர்ஷ்டத்தை ஈர்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரியும்.

No comments:

Post a Comment