Saturday, January 6, 2018

மார்பளவு தண்ணீரில் இருக்கும் அதிசய கோவில்..!


பல நு}று அடிகள் நீண்டு காணப்படும் அதிசய குகை கோவில்!!
ஒரு வித்தியாசமான குகை கோவிலை பற்றி பார்ப்போம்....

👉 300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீருக்கு இடையில் கோவில் கொண்டுள்ளார்.

👉 இந்த ஜர்னி நரசிம்மர் குகை கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சு+ழ மலையில் உள்ளது. இக்கோவிலில் கோடைக் காலத்திலும் கூட மார்பளவு தண்ணீர் காணப்படும். ஒருபோதும் வறண்டு போவதில்லை.

👉 இங்குள்ள நரசிம்மரைத் தரிசிக்க வேண்டுமெனில் குகைக்குள் மார்பளவு தண்ணீரில் நடந்து செல்லவேண்டும்.

👉 இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருப்பதால் இதில் நடந்து சென்றால் தீராத பல நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

👉 குகையின் முடிவில் சிவலிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார்.

👉 அதேசமயம் புராணத்தில் பக்தன் பிரகலாதனின் பக்தியை நிரூபிக்க வந்த நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர், ஜலசு+ரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ய வந்தார். அந்த அசுரனோ ஒரு சிவ பக்தன் என்பதால், இந்த குகைக்குள் தான் தவம் செய்து சிவனை வழிபட்டார். தேடி வந்து ஜலசு+ரனை வதம் செய்தார்.

👉 பின்னர், இங்குள்ள சிவ பெருமானின் பாதத்திற்கு அபிஷேகம் செய்யும் ஜலமாக (தண்ணீராக) மாறி ஊற்றெடுத்துள்ளார். மேலும், அந்த அசுரனின் வேண்டுதலுக்கு இணங்க, நரசிம்மர் அங்கேயே தங்கி விட்டார். 

No comments:

Post a Comment