Saturday, January 6, 2018

வெள்ளிக்கிழமைகளில் இதை செய்தால் பணம் கொட்டும் !

🌟 வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும்.

🌟 வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும்.

🌟 வெள்ளிக்கிழமையில் அவரவர் நட்சத்திர தன தாரை ஓரையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபம் ஏற்றி, 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

🌟 மேலும், வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.

🌟 தினந்தோறும் உங்களின் குல தெய்வத்தை காலையில் பிரார்த்தனை செய்து வர வீட்டில் பணம் அதிகரிக்கும்.

🌟 வியாழக்கிழமை மாலை 4 - 5 மணி நேரம் குபேர காலமாகும். அதனால் இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பணம் அதிகரிக்கும்.

🌟 தாமரை திரி போட்டு குபேரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பண வரவு உண்டாகும்.!

🌟 அமாவாசை, வியதீபாதம் மற்றும் நம் முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் தானம் செய்திட தனலாபம் உண்டாகும்.

🌟 வீட்டில் திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி படம் வைத்து வழிபட்டு வந்தால் பண வரவு அதிகமாகும்.

🌟 சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளைகளிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி வீடு முழுவதும் தௌpத்திட செல்வம் சேரும்.

🌟 கனகதாரா தோத்திரம் ஸ்ரீசு+க்தம் படிப்பதன் மூலமும், அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைப்பதன் மூலமும் பண வரவுக் கூடும்.

🌟 ஓடும் வெள்ளைக்குதிரை, ஜோடி கழுதைப் படம் ஆகியவற்றை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகமாகும்.

No comments:

Post a Comment