Saturday, January 6, 2018

நீரில் இன்றுவரை மூழ்காத அதிசய சிலை !


🌊 பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், மனிதர்களை போல படுத்துக்கொண்டு 13 நு}ற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய விஷ்ணு சிலையை பற்றி பார்ப்போம்....

🌊 இந்த புத்தானிகந்தா கோவில் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள விஷ்ணு சிலை, ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🌊 இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.

🌊 7 ஆம் நு}ற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக கூறப்படுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும், அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன.

No comments:

Post a Comment