Saturday, January 6, 2018

பண கஷ்டத்தைப் போக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் !!

👉 காலை வேளையில் குளித்து முடித்தவுடன் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பு+ச்சிகள் மற்றும் எறும்புகள் உண்ண உணவாகும். இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகி நன்மைகள் உண்டாகும்.

👉 வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமையன்று அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் இவ்வாறு செய்து வந்தால் கடன் சுமை குறையும்.

👉 கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பு+ சேர்த்து அரைக்க கொடுத்து பின் வாங்கினால், அந்த மாவு வீட்டில் உள்ள வரை பண பிரச்சனைகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

👉 தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபட்டாலும் பண கஷ்டங்கள் தீரும்.

👉 மாங்கல்ய தானப் பலன்கள் தான் சில வகையான ஐஸ்வர்ய தோஷங்களை தீர்க்கும் சக்தி பெற்றவை. ஆகவே, பண கஷ்ட நிவர்த்திக்கு மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய சரடு தானம் பெரிதும் துணை புரியும்.

👉 செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் பெருகும். சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தௌpத்திட செல்வம் சேரும்.


👉 இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும். வியாழக்கிழமையன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் கொழிக்கும். 

No comments:

Post a Comment