Saturday, May 16, 2015

இழந்த பார்வை திரும்பக் கிடைக்கும்

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் விசாக நட்சத்திரம் வரும் நாளில், முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, இத்தலத்தின் குளத்தில் குளித்துவந்தால், இழந்த பார்வை திரும்பக் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்காரக தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது எண்கண். எதிரிகளின் பயம் நீக்கி பக்தர்களைக் காக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.
 
ஞானசபை தேவசபை மயில் வாகனத்துடன் முருகன் சன்னிதியுடன், பிரம்மன் வழிப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் சன்னிதி, பெரியநாயகி அம்மன் சன்னிதிகள் உள்ளன. முருகனின் ஞானசபை (மூலவர்), தேவசபை (உற்சவர்) ஆகியவை பிரம்மபுரீஸ்வரர், பெரியநாயகி சன்னிதிகளுக்கு இடையில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. தலத்தின் தெற்குப்புற வாயிலில் தனிக்கோயில் கொண்டுள்ளார் ஆதி நாராயணப் பெருமாள். கருடாழ்வாரின் மேல் அமர்ந்த அற்புதக் கோலத்தில் மூலக் கருவறையில் காட்சி தருகிறார். வன்னி மரம் தல விருட்சமாகும். 

No comments:

Post a Comment