Saturday, May 30, 2015

கோவை ஆனைகட்டி ஆசிரமத்தில் தயானந்த சரஸ்வதியை சந்தித்தார் ரஜினிகாந்த்

தயானந்த சரஸ்வதியை ரஜினிகாந்த் சந்தித்த போது..கோவை மாவட்டம், கேரள எல்லையை ஒட்டியுள்ள ஆர்ஷ வித்யா பீடம், கோவை ஆனைகட்டியில் புகழ்பெற்ற ஆன்மிக மையமாக விளங்கி வருகிறது. ஆசிரமத்தின் குருவாக இருந்து வரும் தயானந்த சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற பக்தர்கள் வந்து செல்வது உண்டு.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால் அவர், அடிக்கடி ஆன்மிக குருமார்களை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். இதற்காக அவர் அடிக்கடி இமயமலைப்பகுதிக்கும் சென்று வருவார்.


 தயானந்த சரஸ்வதி சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் அவர் சுவாமியின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தெரிகிறது. சுமார் 2 மணி நேரம் ஆசிரமத்தில் தங்கியிருந்த ரஜினிகாந்த், பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவை விமானம் நிலையம் வந்தார். அவர் மதியம் 3.30 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். 

Chant a mantra 108 times without mala beads  

http://western-hindu.org/2010/01/01/how-to-chant-a-mantra-108-times-without-mala-beads/

No comments:

Post a Comment