Monday, May 4, 2015

ஆன்மிகம், தோஷ பரிகாரங்கள்

சமீபத்தில் என் கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். ஜோதிடர் ஒருவர் நானும் இறந்து விடுவேன் என்கிறார். என் மகன் ஆதரவற்றவனாகி விடக்கூடாது எனத் தவிக்கிறேன். தகுந்த பரிகாரம் கூறுங்கள்.
ஒருபோதும் பயப்படாதீர்கள். மரணத்தை யாராலும் முன்னதாகவே கூற முடியாது. 6, 15, 24 ஆகிய ஆங்கில தேதிகளில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரத்தை தன்னிடத்தே கொண்டிருக்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசித்து வாருங்கள். மாசி மாதத்தில் திருவாரூர், நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீ வாஞ்சியம் ஈசனையும் மங்களாம்பிகையையும் தரிசியுங்கள். பின்பு, அதே கோயிலிலுள்ள எம தர்மராஜன் சந்நதியில் ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடத்தி 108 எள் உருண்டைகளை கீழேயுள்ள ஸ்லோகத்தை நீங்கள் சொல்ல, கோயில் குளத்தில் உங்கள் மகனைக் கொண்டு போடச் சொல்லுங்கள்.

பரிகாரம் : யமச்ச உத்பல பத்ராஷ கிரீடீ தண்டத்ருத்ஸதா லோகஸாட்சீ விசுத்தாத்மா தஸ்மை நித்யம் நமோ நமஹ விஷ்ணு பிரம்ம ருத்ரஸஹித தர்மராஜாய பகவதே நமஹ!

***

வியாழக்கிழமைகளில் சிவாலய தட்சிணாமூர்த்தி சன்னிதானத்தில் அமர்ந்து கீழுள்ள ஸ்லோகத்தை 13 முறை சொல்லுங்கள்.
பரிகாரம் : அகண்டானந்தபோதாய சோகஸந்தாப ஹாரிணே ஸச்சிதானந்த ரூபாய சங்கராய நமோ நமஹ சிவாய பரிபூர்ணாய சீதனாய சிதாத்மனே சித்தநாதாய நாதாய தேஜஸே பிரம்மனே நமஹ

நோயில்லாத குழந்தையை ஈன்று இருவரும் குதூகல வாழ்க்கை வாழ கீழேயுள்ள பரிகாரத்தை செய்யச் சொல்லுங்கள். இருவரையும் சிவாலயத்தில் பௌர்ணமி நாளில், பகலில் உணவருந்தாமல் விரதமிருக்கச் சொல்லி வழிபாடு நடத்தி, அந்தணர்களை கொண்டு ருத்ராபிஷேகத்தை 11 தடவை ருத்ர ஜபத்துடன் நடத்துங்கள். கீழேயுள்ள மந்திரத்தை அடிக்கடி உங்கள் மகளை சொல்லச் சொல்லுங்கள். உங்கள் மகளை யோகம் என்று சிறியதாக கையொப்பமிடச் சொல்லுங்கள்.
பரிகாரம் :
சிவாய பரிபூர்ணாய; சீதளாய சிதாத்மனே!; சித்த நாதாய  நாதாய; தேஜஸே ப்ரும்மணே நமஹ:  பிரம்மஸ்ரீ என்.வைத்ய நாத தீட்சிதர்



நோய்கள் விலக எளிய திருஷ்டி பரிகாரம்: உடல் மெலிந்தோ சுறுசுறுப்பு குறைந்தோ மந்த நிலையில் காணப்படுபவர்கள், ஏதாவது வியாதி அடிக்கடி வந்து கஷ்டப்படும் நபர்கள், ஜாதக ரீதியான நோய் சம்பந்தப்பட்ட தோஷங்களால் இவ்வாறு துன்ப நிலையை அனுபவிக்கின்றனர்.

இவர்கள் மருந்தும் சாப்பிட வேண்டும் பூஜைகளும் செய்ய வேண்டும். இதை மந்திர ஒளஷதம் என சாஸ்திரம் கூறுகிறது. உடல் பாதிப்புகள்  நீங்க நோய்கள் ரீதியான திருஷ்டி விலக, நல்லெண்ணெயை  சிறிதளவு சிறு பாத்திரத்தில் ஊற்றி, பாதிப்பு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணெயை பாத்திரத்தில் நன்றாக பார்த்து மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணெயை தானம் செய்து விடலாம்.

பாத்திரத்தோடு தானம் செய்வதை கணக்கு பார்த்தால் பாத்திர செலவை விட மருத்துவசெலவு அதிகம் வரும். இது ஒரு மிகச்சிறந்த திருஷ்டி பரிகாரம் ஆகும்.

 ***
கண் திருஷ்டிக்கு தாவர பரிகாரம்:  கண் திருஷ்டி என்பது  எல்லோரும் தன்னை நோக்குதல் என பொருள் படும் ஒருவர் அழகாக ஒரு வீட்டை கட்டியிருக்கிறார் என்றால் அந்த தெருவில் செல்லும் எல்லோரும் அந்த வீட்டையே உற்று நோக்குவர்.

இதை வீட்டை கண் வைக்கிறார்கள் என கிராமத்தில் சொல்வதுண்டு அப்பொழுது திருஷ்டியை போக்க என்ன செய்ய வேண்டுமென்றால் அவர்களுடைய ஒட்டுமொத்த கண்பார்வையும் படுமாறு அங்கு ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.

தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்க கூடிய குணம் உண்டு. அதனால் வீட்டு வாசலில் அழகான ரோஜா செடிகளை பிறர் பார்வையில் படுமாறு வாங்கி வைக்கலாம். தொங்கும் தோட்டங்களை அமைக்கலாம்.

தாவரங்களுக்கு கடும் கண் பார்வையை ஈர்க்கும் சக்தி உள்ளதால் இது போல ரோஜா செடி வளர்ப்பது, தோட்டங்கள் அமைப்பது மூலமாக வீட்டுக்கு ஏற்படும் தீய தோஷங்களை போக்கலாம்.

தெய்வ வழிபாட்டின் மூலம் தோஷ பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கும் முறை: கடும் தோஷ குறைபாடுகள் ஒருவருக்கு இருக்கும்போது பலவித இன்னல்களால் அவதிப்படுவர். என்னதான் அவர்கள் துன்பங்களை அனுபவித்தாலும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

காளஹஸ்தி, ராமேஸ்வரம், திருநாகேஸ்வரம், திருப்பதி என்று பல பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வந்தாலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பரிகாரம் செய்து பலன் கொடுக்கவில்லை எனில், தகுந்த ஜாதகரை கலந்தாலோசிக்க வேண்டும்.

நம் ஜாதகத்தில் கிரகங்கள் உள்ள வீடுகளில் எந்த வீட்டினால் நமக்கு பாதிப்படைந்துள்ளதோ அந்த வீட்டின் அதிதேவதை எடுத்துக்காட்டாக [ரிஷப ராசி] சுக்கிரனுக்குரிய வீடு இந்த வீட்டில் ஏதேனும் பொருந்தாத கிரகங்கள் உட்காரும்போது அந்த வீடு பாதிப்படையும்.

இதை நிவர்த்தி செய்ய சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஸ்ரீரங்கம் பெருமாள் ஆவார். இவரை தொடர்ந்து தியானம் செய்து வரவேண்டும். தொடர்ந்து இவருக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில் விரதம், இருந்து வர வேண்டும். இவருக்குரிய பாடல்கள் பாராயணங்கள் முதலியவற்றை வாசித்து வர வேண்டும்.


அடிக்கடி  ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும். இப்படி எந்த வீடு பாதிப்படைகிறதோ அந்த வீட்டிற்க்கு காரணமான அதிதேவதைகளை தொடர்ந்து வழிபட வேண்டும். கீழே அதிபதிகள் அதிதேவதைகளுக்கான விபரம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எந்த வீடு பாதிப்படைந்ததாக தெரிகிறதோ அந்த வீட்டின் அதிபதியான கடவுளை தொடர்ந்து வழிபட்டால் இன்னல்களில் இருந்து நன்மை கிடைக்கும்.

* மேஷம்- செவ்வாய்-பழனி முருகன்

* ரிஷபம்-சுக்கிரன்-ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

* மிதுனம்-புதன்-ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

* கடகம்-சந்திரன்-திருப்பதி வெங்கடாசலபதி

* சிம்மம்-சூரியன்- சிவன்

* கன்னி-புதன்-ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

* துலாம்-சுக்கிரன்-ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

* விருச்சிகம்-செவ்வாய்-பழனி முருகன்

* தனுசு-குரு-திருச்செந்தூர் முருகன்

* மகரம்-சனி-காளி

* கும்பம்-சனி-காளி

* மீனம்-குரு-திருச்செந்தூர் முருகன்

No comments:

Post a Comment