Sunday, March 4, 2018

வற்றாத நீருற்று கொண்ட ஆலயம்....!

🍋 இயற்கை எழில் கொண்ட அழகான பசுமையான இடத்தில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கும் முருகப்பெருமான் கோவிலில் ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது....! 
🍋 அந்த கோவில் தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் இருக்கும் அருள்மிகு மாவுற்று வேலப்பர் கோவில் Mavoottru Velappar,Theppampatti,Theni District. இந்த இறைவன் வேலப்பர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு பழமையானதாகும். Murugan 

வற்றாத நீருற்று...!

🌊 இந்த ஆலயம் மலைகள் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது. தற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும், ஆதியில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. 

🌊 இக்கோவிலின் தலவிருட்சமாக மாமரம் இருக்கிறது. கோவிலுக்கு தெற்கே உள்ள இந்த மாமரத்தின் அடியில் வற்றாத நீரூற்று, எப்பொழுதும் பொங்கி வழிந்தபடி இருக்கிறது. இத்தல விநாயகர் மாவு+ற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 

🌊 மாமரத்தின் அடியில் இருந்து வரும் ஊற்று காரணமாகவே, இந்த இறைவன் 'மாவு+ற்று வேலப்பர்" என்றும், இந்த தீர்த்தம் 'மாவு+ற்று தீர்த்தம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், தீராத நோய்களும், மனக்குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment