Sunday, March 4, 2018

சாப்பிட்டவுடன் தூங்கினால் என்ன ஆகும்?


சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத விஷயங்கள்!!

👉 சாப்பிட்டவுடன் செய்யும் சில செயல்கள் நம் உடல்நலத்தைப் பாதிக்கும். இப்போது எந்த விஷயங்களை சாப்பிட்டவுடன் செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்.

👉 சாப்பிட்ட உடனேயே தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனென்றால் சாப்பிட்டவுடன் வயிறு, செரிமானத்துக்கு உடலை தயார்படுத்தி கொண்டிருக்கும். அந்த நேரத்தில் தூங்கினால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

👉 சாப்பிட உடனே பகல் மற்றும் இரவில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

👉 சாப்பிட்ட இரண்டு மணி நேரம் வரை, உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது செரிமானத்துக்கு இடையு+றாக அமைந்து உணவு செரிமானப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

👉 சாப்பிட்டவுடன் குளிப்பதும் தவறு. ஏனெனில் குளிக்கும்போது உடலில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும். அதற்கேற்ப கை, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் வேகமும் கூடும். இதன் காரணமாக செரிமானமாவதற்கு வயிற்றுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவு மிகவும் குறையும். எனவே அது வயிற்றிலுள்ள செரிமான உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி, செரிமானத்தையும் தாமதப்படுத்துகிறது.

👉 சாப்பிட்டவுடன் தேநீர் குடிப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேநீர் உடலில் உள்ள இரும்புச்சத்து மற்றும் தாதுச்சத்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

👉 சாப்பிட்டவுடன் 20 நிமிடங்களுக்கு பிறகே தண்ணீர் குடிப்பது சிறந்ததாகும். அவசியமாக இருந்தால் சிறிது தண்ணீர் பருகலாம்.

👉 சாப்பிட்டவுடன் சிகரெட் பிடிப்பதும் தவறான பழக்கமாகும். ஏனெனில் செரிமானம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் அதனுடன் கலந்து உடல்நலப் பாதிப்புகளை உருவாக்கும்.

👉 சாப்பிட்டவுடன் பழங்களை உண்பதால் வயிற்றில் உப்புசம் ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்தோ பழங்களை உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment