Wednesday, November 27, 2013

பிராண வாயுவை அளிக்கும் துளசிச் செடியை வளர்க்க வலியுறுத்தல்

தம்மம்பட்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் பிராண வாயுவை அளிக்கும் துளசிச் செடியை வளர்க்க வலியுறுத்தப்பட்டது.
உலக பசுமை வளர்ச்சி குழு, ஆன்மிக விஞ்ஞான குடில், வனத் துறை இணைந்து தம்மம்பட்டி அரசு மகளிர் பள்ளியில் நடத்திய ஓசோன், ஆக்சிஜன் குறித்த விழிப்புணர்வு முகாமுக்கு தலைமையாசிரியை பொற்செல்வி தலைமை வகித்தார். உலக பசுமை வளர்ச்சிக் குழு துணைச் செயலாளர் குணசேகரன், ஆன்மிக விஞ்ஞான குடில் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக பசுமை வளர்ச்சிக் குழு செயலர் பாலசுப்பிரமணியன் பேசியது:
பிராண வாயுவை அளிக்கும் அரச மரம், மூங்கில் மரம், துளசிச் செடியை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment