Friday, July 21, 2017

சுக்கிர யோகம் கிடைக்க வேண்டுமா?

சுக்கிரன் என்பவர் எல்லா வகையிலும் யோகங்களை வாரி வழங்கக்கூடியவர். உலக வாழ்க்கையில் இன்பமும் சௌபாக்கியங்களையும், சுகபோக சௌரியங்களையும் தருபவர். ஆனால் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் அமரும் இடத்தைப் பொறுத்தே நன்மைகள் செய்வார். சுக்கிரன் எந்த இடத்தில் அமர்ந்தால் யோகம் கிடைக்கும் என்பதையும், சுக்கிரன் யோகம் குறைவாக பெற்ற ஜாதகர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றியும் பார்ப்போம்.

🌷 பொதுவாக சுக்கிரன் கன்னி வீட்டில் நீசம் பெறுவார். அதனால் கன்னி வீட்டில் சுக்கிரன், 8ல் அமையப் பெற்ற ஜாதகர்கள் சுக்கிரதிசையில் சுக்கிரனின் நல்ல பலன்களைப் பெற முடியாது. ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த இடத்துக்குரியவராக வருகிறார் என்பதைக் கொண்டு, 8ல் வருகின்ற சுக்கிரன் நல்ல பலன்களை வழங்குகிறார்.

🌷 பொதுவாக துலாமில் சுக்கிரன் அமையப்பெற்ற ஜாதகர்கள் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவார்கள். உறவினர்கள், நண்பர்களிடம் பாசத்தோடு பழகுவார்கள். பெண்களால் பல நன்மைகளை அடைவார்கள். அரசாங்க உயர்பதவியில் அமர்வார்கள். உயர் அந்தஸ்த்தில் உள்ளவர்களின் நட்பினால் தமக்கு பல வசதிகளைப் பெறுவார்கள்.

🌷 ஒருவரது ஜாதகத்தில் லக்னம் துலாமாக அமைந்து, லக்னத்தில் சுக்கிரன் ஆட்சியாக அமர வேண்டும். லக்னத்திற்கு ஒன்பதாம் இடமான மிதுன வீட்டில் புதன் ஆட்சியாக அமைய வேண்டும். மகரத்தில் சனி பகவான் ஆட்சிபெற்று அமைய வேண்டும். கடகத்தில் குருபகவான் உச்சமாக அமைய வேண்டும். இதுபோன்ற ஜாதகம் அமையப் பெற்றவர்கள் மிகப்பெரிய யோகத்தை அடைவார்கள்.

🌷 சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமையப்பெறாதவர்கள் மாதந்தோறும் வரும் வளர்பிறை ஏகாதசியன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று, அவல் பாயாசம் வைத்து வணங்கி, பக்தர்களுக்கு கொடுத்து வருவதன்மூலம் சுக்கிரனின் அருளைப் பெறலாம். மேலும் கும்பகோணம் அருகே கஞ்சனு}ர் சுக்கிர தலத்தில் தனது தேவியருடன் அருள் பாலிக்கிறார். இவரை வழிபட்டு யோகமான பலன்களைப் பெறலாம்.

No comments:

Post a Comment