Sunday, October 16, 2016

சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்:

🌝 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள். பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.

🌝 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்".

🌝 ஆன்லைனில் கிடைக்கும் அன்பும், ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை.

🌝 தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது.

🌝 கல்வி கற்க புத்தகங்களை விட நோட்டுக்களே அதிகம் தேவைப்படுகின்றன.

🌝 வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி. ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்.
ஒரு சிலருக்கு புரியாம கூட போகும்.

🌝 மதிப்பே இல்லாத பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி தன் மதிப்பை கூட்டியவன் தான் இந்தியன்.

🌝 பாம்புக்கு காது கிடையாது எனில், தவளை எப்படி தன் வாயால் கெடும்? சொல்லுங்க.

🌝 சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம் விசாரிக்கும்.
கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசி எண் கண்டிப்பாக பழைய செல்போனோட தொலைஞ்சு போயிருக்கும்.

🌝  நாம் நிராகரிக்கப்படும் இடத்தில்.
நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி.

🌝 பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இருப்பதில்லை.

🌝 வாழத் தெரியாம சாமியாரா போனவங்கிட்ட, எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்.

🌝 காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.

🌝 திருக்குறளை, வாழ்றதுக்காக படிச்சவங்கள விட.
"ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதான் அதிகம் பேரு.

🌝 அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது.
அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை.

🌝 Money மட்டுமே மதிக்கப்படுகிறது.
மனிதம் பலரால் மிதிக்கப்படுகிறது.

🌝 நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள்:
நம்மகிட்ட ஒன்னும் இல்லாம இருக்கும் போது நம்மோட பொறுமை.
நம்மகிட்ட எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை.

🌝 5000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்த பற்றாக்குறை.
லட்ச ரூவா வாங்கும்போது வந்தா நாமதான் வாழ தெரியாம வாழ்றோம்னு அர்த்தம்.

🌝  எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை 
உண்டு.
எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்.

🌝 எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள்.
ஆனால், மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.

🌝 கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்.

🌝 நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.

🌝 போக்குவரத்து விதிகளை சாகசமாய் மீறும் எமக்கு, அடுத்தவர் மீறுவதைக் கண்டதும் உடனே கோபம் வருகிறதே. ஊருக்கு தான் உபதேசமோ?

🌝 பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது.

🌝 பணம் மரத்தில் காய்க்குமானால், மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்.

 🌝 நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், தன்னடக்கம் என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம்.
இதை உணர்ந்தவன் கண்டிப்பாக உயர்வான்.

🌝 லாரியில அழுது கொண்டே செல்கிறது ஆற்றிடமிருந்து பிரித்து அள்ளப்பட்ட மணல்⁠⁠⁠⁠

No comments:

Post a Comment