Monday, June 30, 2014

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் பூட்டுப் போடுவதைக் கூறலாம்.
108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் விதவிதமான அதிர்வுகளை பக்தர்களுக்கு உணர்த்துபவை.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலின் ‘ரங்கா ரங்கா’ கோபுரம் வழியாக உள்ளே சென்றால் முதலில் வரும் ரங்கவிலாச ஆஸ்தான மண்டபத்தில் இருக்கும் கல் கொடிமரத்தைச் சுற்றிலும், கம்பியில் விதவிதமான பூட்டுகள் தொங்குகின்றன.
பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டி இங்கு பக்தர்கள் பூட்டு மாட்டுகின்றனர். குடும்பம், வேலை பார்க்கும் இடம், சொந்த தொழில் என எங்கு பிரச்சினை என்றாலும் கடைசியில் அரங்கனை சந்தித்தால் மட்டுமே தீர்வு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment