Tuesday, August 1, 2017



என் மகளே! நீ வாழ்க! நீ நல்ல முயற்சியுடையவளாய் இருக்கிறாய்! நல்ல சூழலைப் பெற்றவளாய் இருக்கிறாய்! நல்ல குணங்களை இயற்கையாகவே பெற்றிருக்கிறாய்! நன்கு உழைப்பவளாய் நீ வளர்கின்றாய்! வாழ்வில் வெற்றி பெறுகின்ற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கிறாய்! நல்லவாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும் புறமும் நன்கு நிரம்பி இருக்கிறது.
உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பி உள்ளது! நீ அருளாற்றல் பெற்றவளாக, நல்லுறவுடனும் நலத்துடனும் வாழ்க வளமுடன் என அனுதினமும் அவனை வாழ்த்துங்கள்.
அவன் ஆழ்ந்து தூங்கும்பொழுது அருகில் சென்று திரும்ப திரும்ப சொல்லுங்கள். அவனது ஆல்பா மனநிலை அதனை ஏற்று ஏற்று, அவனது ஆள்மனம் தூண்டப்படும். ஆள்மனம் தூண்டப்பட்டால் படிப்படியாக அவனுள் மாற்றங்கள் நிகழும் உடன்பாட்டுச் சூழல் ஏற்படும். இதைச் சொல்லச் சொல்ல உங்கள் கண்ணோட்டம் மாறும்.
அவன் மீது உங்களுக்கு நம்பிக்கை உருவாகும் உங்கள் பேச்சும், தொனியும் மாறும். எண்ண அலைகள் உங்கள் குழந்தையை தாக்குவதற்குப் பதிலாக, அவனைத் தழுவி அன்பு செய்யும். மனம் மாறும் மாற்றங்கள் நிகழும் வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும் வாழ்த்தி வாழ்த்திப் பாருங்கள் வளத்தை சேருங்கள்.
குடும்பத்தில் அமைதி நிலவும், குடும்பம் கோவிலாக மாறும், அற்புதம் நிகழும், அன்பு, நட்பு மேலோங்கும் பார்ப்பவர்களின் பார்வையில் வித்தியாசம் தெரியும் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

No comments:

Post a Comment