Sunday, December 24, 2017

முதன்முதலில் மனிதன் பயன்படுத்திய இனிப்பு கட்டி.

கருப்பட்டி தான் உலகில் முதன்முதலில் மனிதன் பயன்படுத்திய இனிப்புட்டி. நமது தினசரி உணவு பயன்பாட்டிற்கு கருப்பட்டியை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும்.


இன்று 45 வயதுக்கு மேல் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் இல்லாத ஆட்களைக் காண்பது அரிது. மிகவும் உடல் நலனுடன் இருந்த சமூகம் இந்த 50 ஆண்டுகளில் எப்படி இவ்வளவு பலவீனப்பட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது தினசரி பயன்பாடுகளான சர்க்கரை, எண்ணெய் மற்றும் பால் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றமே.

குறிப்பாக பனங் கருப்பட்டி அதீத மகிமை உடையது. இன்றைய சு+ழலில் கருப்பட்டிக்கான கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது.

ஒரு 100 கிராம் கருப்பட்டியினை தண்ணீரில் போட்டால் அது குறைந்தது 1 மணி நேரம் கரையாமல் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment